புதுச்சேரியில்

இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-10

புதுவை, தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம்பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு  ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.

அதன் பத்தாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் மிதியடிபெற்றுமீள்படலம், தமிழகம் புகுபடலம் ஆகியவைபற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார்.

புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது.

செயலாளர் நெ.நடராசன் வரவேற்றுப் பேசினார்.

தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில், புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி அறிஞர் அண்ணாவின் படத்தைத் திறந்து வைத்துப் பேசினார். பொ.கு.உறுப்பினர் விலாசினி தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசினார்.

இறுதியில் பகுத்தறிவாளர் கழகச்செய்தியாளர் சிவராசன்   நன்றிகூறினார்.