(தமிழ்நாடும் மொழியும் 11 தொடர்ச்சி)
தமிழ்நாடும் மொழியும்
கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி
சமய நிலை
திருமால், பிரம்மா, சிவபிரான், முருகன் இவர்களைப் பற்றி மிகுதியாகவும், பலராமன், கொற்றவை இவர்களைப் பற்றி ஆங்காங்கும் சங்க நூல்கள் கூறுகின்றன. அந்தணர் மந்திர விதிப்படி வேள்விகள் செய்தனர் என்றும், அவர்கள் ‘சிறந்த வேதம் விளங்கப் பாடி, விழுச் சீரெய்திய ஒழுக்கமொடு புணர்ந்து, அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்' பெரியோராய் விளங்கினர் ...