மறப்போமா?
பத்து ஆண்டுகள் போனாலும்
பழைய நினைவுகள் மாறுமோ
மொத்த ஈழத் தமிழினமும்
முடிவைத் தேடி ஏங்குகிறோம்! 1
மொத்த உலகும் பார்த்திருக்க
முள்ளி வாய்க்கால் நிலப்பரப்பில்
கொத்துக் குண்டால் அடிபட்ட
கொடூரம் தன்னை மறப்போமா? 2
வாழும் உரிமை வேண்டியன்று
வன்னி மண்ணில் தமிழர்கள்
ஆளும் வருக்கச் சூழ்ச்சிக்கு
ஆட்பட் டழிந்ததை மறப்போமா? 3
முள்ளி வாய்க்கால் அவலத்தை
மொத்த ஈழத் தமிழர்க்கும்
கொள்ளி வைக்கும் நினைவோடு
கொண்டு சென்றதை மறப்போமா? 4
சோகம் நிறைந்த ...