image-22542

பாரெங்கும் தமிழ் – இல. பிரகாசம்

பாரெங்கும் பாரீர்! பாரெங்கும் பாரீர்! தமிழினம் தனித் தன்மையோடு சேருவதைப் பாரீர்! பாரீர்! பாரீர்! பேதமைகளைத் தூக்கியெறிந்து ஒன்றாவதைப் பாரீர்! வையகம் வென்றிட தோழமையோடு நடைபோடும் தோழமைத் தமிழினம் இங்கே பாரீர்! பாரீர்! வையகத் தலைமை கொண்டு வழிநடத்தும் தமிழ் வேந்தர்களைப் பாரெங்கும் பாரீர்! உயிரினும் மேலான அறத்தை நாளும் வையக மெல்லாம் சீராய்ப் பரப்பும் தரணி புகழ் கொண்ட தமிழன் விண்ணுலகைச் சுட்டுவிரல் நுனியில் ஆட்டிவைக்கும் விண்ணறிவு கொண்ட தமிழனைப் பாரீர்! பாரெங்கும் ...
image-22528

மதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா!

மதுவிலக்கு நாடகங்கள் மக்களை மயக்கா!     துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்     நஞ்சுண்பார் கள்ளுண் பவர். (திருக்குறள் 926)  என்று மது அருந்துநருக்கும் நஞ்சு அருந்துநருக்கும் வேறுபாடில்லை என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.   அரசே குடிமக்களைக் குடிகார மக்களாக்கி நாளும் நஞ்சுஊட்டுவது கொடுமையினும் கொடுமையன்றோ! இக்கொடுமையை ஒழிக்க மன்பதை ஆர்வலர்களும் மக்களும் சில கட்சிகளும் பல அமைப்பினரும் போராடி வருகின்றனர். ...
image-22525

அன்றாடம் வணங்கியே அடிதொழும் நம்கரம்! – ப.கண்ணன்சேகர்

அன்றாடம் வணங்கியே அடிதொழும் நம்கரம்! புதுவையின் குயிலோசை புவியெலாம் ஒலித்திட புரட்சிக்கவி வண்ணத்தில் பொலிவென வந்தது! மதுமதி கலையென மனங்களும் சுவைத்திட மலர்ந்திட்ட கவிதையோ மயக்கத்தைத் தந்தது! எதுகையும் மோனையும் இலக்கியத் தமிழினில் எண்ணற்ற கவிதைகள் எண்ணத்தில் நின்றன! பதுமையின் பாவலர் பாடிய விடுதலை பாய்ந்திடும் அம்பென பழமையை வென்றது! பாரதியின் தாசனே பைந்தமிழின் நேசனே புதியதோர் உலகுசெய்ய புறப்பட்ட தமிழனே! பேராதிக்க வெறியினை பெயர்த்தெடுத்த எழுத்தாணி பொழிந்திட்ட காவியங்கள் புரட்சிகர அமிழ்தமே! வேரினில் ...
image-22537

யாழிசை – நூலறிமுகம், தொரந்தோ

  கொழும்பு மகசீன் சிறையில் அரசியல் கைதியாக அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் சிவ. ஆருரன் எழுதிய 'யாழிசை' என்ற குமுகாயப் புதினம்(சமூக நாவல்) கனடாவில் ஞாயிற்றுக் கிழமை  சித்திரை 11, 2047 / ஏப்பிரல் 24 அன்று வெளியிடப்பட உள்ளது. இனத்தின் வலியைச் சுமந்து சிறையில் துன்புற்று வாழும் இந்த நூலாசிரியரின் சிறைக்குள் இருந்து மலரும் இசையாக ...
image-22532

எதற்கு எழுதுகிறேன்? – பாவலர் மா.வரதராசன்

எதற்கு எழுதுகிறேன்? கைக்காசைச் செலவழித்துப் புகழைச் சேர்க்கும் கவிஞர்கள் பல்லோரில் ஒருவ னல்லேன் மொய்க்கின்ற வண்டாக விருதைத் தேடி முனைப்போடு சுற்றுகின்ற சிறுமை கொள்ளேன் பைக்குள்ளே பணத்தோடும் புகழ்ப்பாட் டோடும் பலரிடத்தே அடிவருடும் பண்பைக் கொள்ளேன் தைக்கின்ற சொல்வீசிப் பகைவர் கட்குச் சாட்டையடி கொடுக்கின்ற பாவ லன்நான்! விருதுக்கும் பதவிக்கும் பட்டத் திற்கும் 'விலைபோனால்' நானெதற்கிங் கெழுத வேண்டும்? எருமைகளாய் நாலைந்து தடியர் தம்மை எனக்காக அடியாளாய் வைத்தி ருந்தால் பெருமைகளும் மாலைமரி யாதை ...
image-22548

தொல்காப்பியத்தில் தமிழிசை – முனைவர் இராச.கலைவாணி

  அனைவருக்கும் வணக்கம். வரும்  சித்திரை 11, 2047 / ஏப்பிரல் 24 இரவு 8:30 முதல் 9:30 வரை (கிழக்கு நேரம்) இலக்கியக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும். அதோடு தங்கள் நண்பர்களுக்கும் இந்த நிகழ்வைப் பகிர்ந்து அவர்களும் பங்குபெற்றுப் பயனடையச்செய்யவும். சொற்பொழிவு:- 'தொல்காப்பியத்தில் தமிழிசை'. வழங்குபவர்: முனைவர் இராச.கலைவாணி சித்திரை 11, 2047 / ஏப்பிரல் 24-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை Date:  Chithirai 11, ...
image-22566

பொருள் என்றாலே அகத்திணைப் பொருள்தான்- பாண்டியன்

பொருள் என்றாலே அகத்திணைப் பொருள்தான் எனப் பாண்டியன் மூலம் நிறுவிய இறைவன்   பாண்டிநாடு பன்னீராண்டுப் பஞ்சம் நீங்கிச் செழித்த பின், பாண்டியன் தமிழ்ப் புலவர்களைத் தேடிக் கூட்டிவரச் செய்தனன் என்றும், எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் வல்ல புலவர்களே நாட்டில் காணப்பட்டனர்; பொருளதிகாரம் வல்ல புலவர் யாரும் காணப்பட்டிலர் என்றும், அது கேட்ட பாண்டியன், “என்னை! எழுத்தும் சொல்லும் ...
image-22545

தமிழகச் சட்டமன்றத் தேர்தல், மே 16, 2016 – சச்சிதானந்தன் தெய்வசிகாமணி

தமிழகச் சட்டமன்றத் தேர்தல், மே 16, 2016 நல்ல உள்ளங்கள் நலிந்து வேகுதே, நாதி இல்லாமல் தெருவில் சாகுதே, நீதி கேளிக்கைப் பொருளென்றாகுதே, நிலைமை கைமீறி நேர்மை வழிமாறி, நாளும் தீநாற்றம் அதிகமாகுதே! நெஞ்சம் வெம்மித்தமிழ் நிலத்தைக் காத்திட, நின்று நல்லுயிரைக் கொடுத்துப் போராடி, நாடு சுடுகாடு ஆகும்முன் காக்க, தமிழர் நாம் துணிந்து ஒன்று கூடுவோம்! நல்ல தமிழன் ஒருவனை ஆட்சிப் பீடத்தில், நீங்கள் ஏற்றி வைத்துப் பாருங்கள்! நீங்கும் தமிழ் ...
image-22563

இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே! – அகத்தியர்

இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே; எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே; எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்     அகத்தியர்: பேரகத்தியத் திரட்டு
image-22558

ஆறுதல் இல்லாத் தேர்தல்! – கெர்சோம் செல்லையா

ஆறுதல் இல்லாத் தேர்தல்! அள்ளி வீசும் காசுகளால், ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கின்றார். கொள்ளையடிக்கும் நோக்கில்தான், கூட்டணி என்று சேர்க்கின்றார். தள்ள வேண்டும் இவர்களை நாம், தன்மானத்தில் ஏற்பவர் யார்? வெள்ளையடித்தக் கல்லறையை, வீடெனக் கொள்வோர் தோற்கின்றார்! -கெர்சோம் செல்லையா.
image-22506

மூவமைப்புகளின் முப்பெருவிழா, வனக்குடில் கண்ணாடி மாளிகை (கள்ளக்குறிச்சி)

  கல்வராயன் மலைத்தொடர் வெள்ளிமலை  சித்திரை 08, 2047 / ஏப்பிரல் 21,2016 காலை 10-00 முதல் சித்திரை முழுநிலவு 7-00 மணி வரை. முதல் நிகழ்ச்சி : பாவேந்தர்- பட்டிமன்றம். நடுவர்: முனைவர் நா.இளங்கோ. தியாகதுருகம் தமிழ்ச்சங்கம் சங்கைத்தமிழ்ச்சங்கம்(சங்கராபுரம்) குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம்(புதுச்சேரி) நண்பர்கள் தோட்டம்