(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 95: பூங்கொடியை அடையும்வழி -தொடர்ச்சி)
பூங்கொடி
எள்ளத் தனையும் எழுச்சியில் விழாஅது
தெள்ளத் தெளிந்து திருமணம் ஒரீஇ
இனமும் மொழியும் ஏற்றமுற் றோங்க
மனம்வைத் துழைத்திட வாழ்வு கொடுத்துளேன்,
அருளறம் பூண்டது குறளகம், ஆதலின் 290
தெருளும் அனையொடு சேர்ந்தவண் உறைவேன்;
ஒருதலைக் காமம்
நிறைஎனப் படுவது இருதிறத் தார்க்கும்
பொதுவென நினையாப் புன்மனம் தாங்கி
ஆடவர் திரியின் யானென் ...