தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் எழுத்தர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன

 நவம்பர் 20, 2013 முதல் 04-12-2013 வரை இணையத்தில் இதற்கென விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் அச்சுப் பதிவை 09-12-2013க்குள் அனுப்ப வேண்டும். அகவை வரம்பு 31-10-2013 அன்று பட்டதாரிகள் 24. முதுநிலைப் பட்டதாரிகள் 26. பொறியியல் உட்பட ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இணையவழித் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி பெற்றவர்கள் ...

தளையிடப்பட்ட தமிழாசிரியரை விடுதலை செய்க!

 சத்தியம் தொலைக்காட்சியில்   கடந்த வாரம் 'சத்தியம் - அது சாத்தியம்' நிகழ்ச்சி இரவு 8.10 மணியில் இருந்து 8.30 மணி வரை நடந்தது. அதில், “முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அகற்றியது சரியா? தவறா?” என்ற விவாதம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் காங்கிரசு சார்பில்சட்ட மன்ற உறுப்பினர் விசயதாரணி , பாசக மாநிலப் பொருளாளர் சேகர் ஆகியோர் பங்கேற்று ...

வாழ்த்துங்கள்! வளர்கிறோம்!

தமிழுக்கு முதன்மை இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது எங்கும் அல்ல! தமிழ் மக்கள் வாழும்  தமிழ்நாட்டில்தான் தமிழுக்கான முதன்மையை எதிர்நோக்குகிறோம்! தமிழுக்கான முதன்மை  அகன்று மெல்ல மெல்ல அதன் இருப்புநிலை குறைந்து இன்றைக்குக் கடைநிலைக்குத் தள்ளப்பட்ட வருந்தத்தகு நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றத் தமிழார்வலர்கள் முன்வரவேண்டும்! அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் அமைப்புகள், ...

தேடுகிறேன் . . . !

ஓடோடி   உழைத்தமகன்  வாடி   மண்ணில் உட்கார்ந்தே   தேடுகிறேன்  உள்ளத்தால்  எண்ணி ஆடிப்   பெருங்காற்றில்  அடிமரமே   வீழ்ந்துவிட்டால் கூடி   நிழலிலமரக்   கூடுமோ ? வௌவால்  மாந்தர்கள்   வாழும்தமிழ்  மண்ணில் வாய்மை   மேட்டிலொரு   தூய்மையாளன்  தோன்றினான் ! காய்மை  மனமில்லாக்   காரணத்தால்  கரைசேரவில்லை தாய்மை  மனமிருந்ததாலே   தமிழ்க்கரைகண்டார் ! காசுதான்   வாழ்க்கையில்   பேசுமென்றால்   உள்ளம் கூசும்   தொழில்செய்தே   கூட்டலாம்  செல்வத்தை மாசில்லாத்   தமிழ்மரபை   மனதில்   கொண்டதால் ஏசுவாரைப்   புறம்தள்ளி   எந்தமிழ்கொண்டாரே  ! அன்னவர்க்கு   முன்னவரும்  பின்னவரும்   ...

வேலை வாய்ப்புகள்

இளநிலை அறிவியல் அலுவலர், பயிற்சி அலுவலர், உதவிப்பதிவாளர், மேற்பார்வையர் முதலான 84 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு மத்தியப்  பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இணைய வழி விண்ணப்பிப்பதற்கான கடைசி  நாள்: 28.11.2013 முழு விவரங்களுக்கு அதன் இணைய தளத்தைக் (www.upsconline.nic.in ) காணவும். +++ உருக்குத் துறை நிறுவனமான செயில்  எனப் பெறும் இந்திய உருக்கு நிறுவனம் ( Steel Authority of India)  ...

இராசபட்சவின் இராசதந்திரம்!

 - தினமணி ஆசிரியர் (நவ.13.,2013)   1976இல் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்குப் பிறகு இலங்கையில் நடக்க இருக்கும் பெரிய பன்னாட்டு நிகழ்வு  பொதுவளஆய மாநாடுதான். இந்த இடைவெளியில் அங்கே எந்தவொரு  பன்னாட்டு நிகழ்வும் நடைபெறாமல் இருந்ததற்குக் காரணம், அங்கிருந்த அரசியல் சூழல். இப்போது, இப்படி ஒரு மாநாட்டைக் கூட்டி, இலங்கையில் எல்லாமே இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது என்று ...

புதுதில்லியில், இனப்படுகொலைகாரர்களைத் தண்டிக்காமைக்கு எதிரான கண்டனப்பேரணி

புதுதில்லியில், இனப்படுகொலைகாரர்களைத் தண்டிக்காமைக்கு எதிரான கண்டனப்பேரணி உச்ச நீதி மன்ற வழக்குரைஞர்களும் தில்லித்தமிழ் வழக்குரைஞர்கள் சங்கமும் இணைந்து சிங்கள அரசின் இனப்படுகொலைக்கு எதிராக அமைதி காக்கும் பன்னாட்டுக் குமுகாயத்திற்கு எதிரான மாபெரும் எதிர்ப்புப் பேரணியை 17.11.2013 காலை 9.00 மணிக்குத் தில்லியில் மாண்டி இல்லத்திலிருந்து நாடாளுமன்றத் தெரு வரை நடத்துகின்றன.   -இராம்சங்கர், தில்லித் தமிழ் வழக்குரைஞர்கள் சங்கம்,

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்!

  இந்திய – சிங்களக் கூட்டுப் படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நினைவேந்தும் விதமாக, தஞ்சை விளாரில், உலகத் தமிழர் பேரமைப்பால் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுவரையும், பூங்காவையும் இடித்த தமிழக அரசின் வன்செயலைக் கண்டித்தும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 போராளிகளை ...

மதிமுக வழக்குரைஞர் மாநாடு : விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி தீர்மானம்

    மதிமுகக் கழக வழக்குரைஞர் மாநாடு 16.11.13 சனிக்கிழமை காலை 10.00 மணிக்குச்  சென்னை, எழும்பூர், வேனல்சு சாலை, இம்ப்பீரியல் வளாகத்தில் உள்ள சிராசு மகாலில் கழகச் சட்டத்துறைச் செயலாளர் வழக்குரைஞர் தேவதாசு தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் காலை அமர்வில் பின்குறிப்பிட்டுள்ள தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானம் எண். 1 சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குக! தீர்மானம் எண். ...
image-102

ஏற்காடு இடைத்தேர்தல் : 27 பேர் வேட்புப் பதிவு

ஏற்காடு இடைத்தேர்தலில்,  திசம்பர், 4 இல் நடைபெற உள்ள, ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான, வேட்புப்பதிவு கடந்த, 9 ஆம் நாள் தொடங்கி, நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதுவரை, அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள் உட்பட, 27 பேர்  விண்ணப்பித்துள்ளனர்.  இவர்களில், இரண்டு பேர், அ.தி.மு.க., வேட்பாளர் சரோசா, தி.மு.க., வேட்பாளர் மாறன். மற்ற இரண்டு ...

யாழில் காவல்துறையினர் கொடூரமான தாக்குதல்: உலகத் தலைவர்கள் அதிர்ச்சி

  காணாமல் போனவர்களுடைய உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைப்  பொறுத்துக் கொள்ள இயலாத சிங்களக்காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக பெண்கள் என்று பாராமல் எம்மையும் பாதிரியார்களையும் தாக்கினர். கவனயீர்ப்புப் போராட்டத்தில் பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சரவணபவன், சுரேசு பிரேமச்சந்திரன், வடமாகாணஅவை உறுப்பினர் பசுபதி(ப்பிள்ளை), ஆனந்தி சசிதரன்  முதலானவர்கள் விவரித்தனர்.