பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)
நூன்மரபு
21.
இடையெழுத்து என்ப ய, ர, ல, வ, ழ, ள.
ய, ர, ல, வ, ழ, ள என்பன இடையெழுத்துகள் என்று சொல்லப்படும்.
மெய்யெழுத்துகளை வல்லினம், மெல்லினம், இடையினம் என வகுத்திருப்பது அவற்றின் ஒலிப்பு முறையால் ஆகும். மேலைநாட்டு மொழிநூலார் எழுத்துகளின் பிறப்பிடத்தால் வகைப்படுத்தியுள்ளனர்.
22.
அம்மூவாறும் வழங்கியல் மருங்கின்
மெய்ம்மயக்கு உடனிலை தெரியுங்காலை
ஆராயுமிடத்து, அங்ஙனம் ...