இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 2/2 : புகழேந்தி தங்கராசு

(இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 1 இன் தொடர்ச்சி) 2   பாரீசு வன்கொடுமையைத் திரித்துக் கூறி, போர்க் குற்றத்துக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க இலங்கை முயல்வது இயல்பானது. எந்த இண்டுஇடுக்கையாவது பயன்படுத்தித் தப்பிக்க நினைப்பது குற்றவாளிகளின் இயல்வு. நம்மைப் பொறுத்த வரை, கொல்லப்பட்ட நூற்றைம்பதாயிரம் உறவுகளுக்கு நீதி கிடைக்க எது தடையாக இருந்தாலும் அதைத் தகர்த்தாக வேண்டும்.   ஐ.நா போன்ற பன்னாட்டு அமைப்புகளில் இடம்பெறாத தனித்த அமைப்புகளின் வன்கொடுமையைக் காட்டிலும், பன்னாட்டு அமைப்புகளில் இருக்கும் ஓர் அரசின் வன்கொடுமை கடுமையானது.   பன்னாட்டு அமைப்புகளில்…

இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 1/2 : புகழேந்தி தங்கராசு

1  பாரீசு கொடுமையைக் குறிப்பிடும்போது, ஏறத்தாழ எல்லா ஊடகங்களுமே, ‘மென்மையான இலக்கு’ (SOFT TARGET) என்கிற சொல்லைப் பயன்படுத்துகின்றன. ஒற்றைக் கையால் நூறு பேரை அடித்துத் துவைக்கிற தமிழ்த் திரைப்படக் கதைத்தலைவனை வழிக்குக் கொண்டு வர, அவன் குழந்தையைக் கடத்துகிற கயவனை(வில்லனை) எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிற நமக்கு மென்மையான இலக்கு என்கிற சொல் புதிதன்று! அதுதான் இது!   பிரான்சுப் படுகொலைகளைத் தொடர்ந்து, கயவன் யார், கதைத்தலைவன் யார் எனவெல்லாம் அக்பர் சாலை ஏதிலியர்கள்(அகதிகள்) முதல் ஆசம்கான்கள் வரை ஆளாளுக்குப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்….

செத்து மடிந்தது போதுமடா – உலோக நாதன்

செந்தமிழா சேர்ந்தெழடா ! உலகத் தமிழினம் உறைந்தது ஒருகணம் ஊமை விழிகளும் உற்றங்கு பார்த்தது புலரும் பொழுதினில் புத்தனின் தத்துவம் போட்டது குண்டினை, புறா அங்கு வீழ்ந்தது நித்திய புன்னகை நீள்துயில் கொண்டதுசத்திய சோதனையா? செத்து மடிந்தது போதுமடா செந்தமிழா சேர்ந்தெழடா ! கத்திக்கத்தி பேசி, காலம் கடத்தியேகல் நட்டது போதுமடா! சொல் வட்டத்துக்குள் நின்று குட்டக்குட்ட குனிந்தது போதுமடா! கொத்தும் கழுகோடு குள்ளநரிகளும்ஒத்திங்கு ஊதுதடா! வாய் பொத்திக்கிடந்தது போதுமடா வாள் கத்தி கொண்டு நீ எழடா புலரும் பொழுதினில் புத்தனின் தத்துவம் போட்டது…

செய்ந் நன்றி கொன்ற இந்தியம் – வேங்கடசாமி சீனிவாசன்

  உதவுநர் இனத்தை அழிக்கத் துணை நிற்கும் இந்தியம்! ஐம்பது ஆண்டுகளுக்கு, இதே மாதத்தில் (20.11.1964 அன்று சென்னையில் ) இந்தியத் தேசியப் பாதுகாப்பு நிதியாக (இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக ) அன்றைய தலைமை அமைச்சர் இலால் பகதூர் சாத்திரி அவர்களிடம் 1,00,00,000 கிராம் தங்கத்தைத் தமிழ்த் தாயின் பிள்ளைகள் வாரிக் கொடுத்தார்கள் ! ஆனால் … சொந்த உடன் பிறப்புகள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப் பட்டது கண்டு தமிழகம் துடித்த போதும் , தன் பிள்ளைகள் தன் கண்ணெதிரே கொன்று குவிக்கப் படுவதை…

‘நாங்கள்’ யார்? – அ.ஈழம் சேகுவேரா

‘நாங்கள்’ புசிப்பது தசை புணர்வது பிணம் முகர்வது இரத்தம் நாற் சுவர்களுக்குள் நடப்பதை நாற்சந்தியில் நடத்துவோம் அது ‘தாரமாக’ இருந்தாலும், மூலை முடுக்கெல்லாம் தேடி ஒதுங்கமாட்டோம் ‘தங்கை’ ஒருத்தி இருந்தால் அம்மணமாக்கி இரசிப்போம் ‘தோழி’ ஒருத்தி கிடைத்தால் அதிரப்புணர்வோம் நண்பர்கள் குழுவாகச் சேர்ந்தால் ‘தாயையும்’ கூட்டாகப் புணர்வோம் ‘அக்காளை’ நீலப்படம் எடுத்து காசு பார்ப்போம் ‘நாங்கள்’ யார்? பிரித்தானியாவின் ‘அலைவரிசை 4’ பார்த்திருந்தால், எங்கள் ‘குலம் கோத்திரம்’ பற்றியெல்லாம் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை! தாயகக் கவிஞர் அ.ஈழம் சேகுவேரா (இலங்கை, முல்லைத்தீவிலிருந்து) கருத்துகள் மற்றும்…

புத்த வெறியல்ல… இரத்த வெறி! -புகழேந்தி தங்கராசு

புத்த வெறியல்ல… இரத்த வெறி!   பௌத்த, சிங்கள இனவெறிக்கு இரண்டு முகங்கள். ஒருமுகம், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் பாலியல் வன்முறைகள் தொடர்பாகவும் இலங்கைப் படையினரை உசாவவே (விசாரிக்கவே) கூடாது என்கிறது. இன்னொரு முகம், எந்த வழக்கும் இல்லாமல் வெறும் ஐயப்பாட்டின் (சந்தேகத்தின்) அடிப்படையில் பல்லாண்டுக் காலமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவே கூடாது என்கிறது.    எடுத்த எடுப்பில், ‘தமிழ் அரசியல் கைதிகள் யாரும் சிறையில் இல்லை’ என்று ஒட்டுமொத்தமாகப் பூசி மெழுகப் பார்த்தது இலங்கை. விக்கினேசுவரனின் கூர்மையான அணுகுமுறையால், அந்தப்…

நல்லிணக்கத்தைத் திணிக்க முடியுமா? – புகழேந்தி தங்கராசு

இனப்படுகொலையாளிகளின் கேடயம் நல்லிணக்கம் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுதம் பன்னாட்டு விசாரணை   வடமாகாண அவை முதல்வர் விக்னேசுவரன், வள்ளுவத்தை நேசிப்பவர். அவரது அறிக்கைகளில் பொருத்தமான திருக்குறள் இடம்பெறுவதைத் தொடர்ந்து கவனிக்கிறேன். ஈரடி தான் என்றாலும், சுற்றிவளைக்காமல் நேரடியாகக் செய்திக்கு வருவது குறளின் தனிச்சிறப்பு. அதை நேசிக்கிற விக்னேசுவரனுக்கும் இந்தத் திறன் கைவரப் பெற்றிருக்கிறது.  சொற்சிக்கனத்தை, வள்ளுவத்தின் வாயிலாகவே கற்றிருக்க வேண்டும் விக்னேசுவரன். சுருக்கமான சொற்களால் நறுக்குத் தெறித்தாற்போல் பளிச்செனப் பேசிவிடுகிற அவரது சொல்லாற்றல், ‘சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மையறிந்து’ என்கிற…

நாடகமன்றோ நடக்கிறது! ஐ.நா-வில் அமெரிக்கத் தீர்மானங்கள்

ஐ.நா.-வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தின் முழுமையான வடிவம்   பல கண்ணோட்டங்களையும், எதிர்வு கூறல்களையும் கொண்டதாகவும், தமிழர்களினதும் பன்னாட்டினதும் எதிர்பார்ப்பைக் கொண்டதுமான அமெரிக்கத் தீர்மானம் ௧-௧௦-௨௦௧௫ (1.10.2015) வியாழக்கிழமை அன்று வாக்கெடுப்பின்றி ஒருமனமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ‘இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் அமெரிக்காவினால் இலங்கை குறித்தான திருத்தப்பட்ட தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வரைபை விடத் திருத்தப்பட்ட புதிய தீர்மானத்தில் பல விதயங்கள் மாற்றப்பட்டுள்ளன.   முன்னைய வரைபில் காணப்பட்ட சில பத்திகள் சுருக்கப்பட்டுள்ளதுடன் 26 பத்திகள் 20 பத்திகளாகக்…

குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்துவிட்டது!: கருணாநிதி

குதிரை குப்புறத் தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்துவிட்டது! கலைஞர் மு.கருணாநிதி ” ‘தாமதப்படுத்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி ஆகும்’ என்று இலக்கணம் வகுக்கப்பட்டிருந்தாலும் இலங்கையின் ஆதிக் குடி மக்களான ஈழத் தமிழர்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டு வந்த எண்ணிலடங்காத கொடுமைகளுக்கும், இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றுக்கும் தாமதமாகவேனும் நீதியும் நியாயமும் கிடைக்குமென்று உலகத் தமிழர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், திகைப்புத் தரும் விதமாக அமைந்திருக்கிறது ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் நேற்று (௨-௧௦-௨௦௧௫ ) நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம்.   அதில், அமெரிக்கா…

திருடன் கையில் திறவுகோல் – இராமதாசு

ஐ.நா தீர்மானம் திருடன் கையில் திறவுகோலை ஒப்படைப்பதற்கு இணையானது:  மரு.இராமதாசு   “இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து அந்நாட்டு நீதிமன்றத்தின் மூலமாகவே உசாவல் நடத்த வகை செய்யும் அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இந்தியா முதலான நாடுகளின் ஒத்துழைப்புடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. போர்க்குற்றங்களையும், இனப் படுகொலையையும் நடத்திய கொடுமதியானவர்கள் தண்டனையின்றித் தப்பிக்கவும், சொந்தங்களைப் பறி கொடுத்தவர்கள் இறுதி வரை நீதி கிடைக்காமல் வாடவும்தான் இந்தத் தீர்மானம் வகை செய்யும்.   இலங்கையில் ௨௦௦௯ (2009) ஆம் ஆண்டு நடந்த இறுதிப்…

அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் அளிக்கிறது: செயலலிதா

அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் அளிக்கிறது: தமிழ்நாட்டு முதல்வர் செ.செயலலிதா   “தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் ௧௬-௦௯-௨௦௧௫ (16.9.2015) அன்று ஒருமனமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குச் செயல் வடிவம் கொடுக்க நடுவண் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதையே தற்பொழுது ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எடுத்துரைக்கிறது.   ஒட்டுமொத்தத் தமிழினத்தின் குறிக்கோளுக்கும், இலங்கை வடக்கு மாகாண அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையிலும், இலங்கை வாழ்தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் வகையிலும், இலங்கையில் உள்நாட்டுப் போர்…

ஐ.நா.வில் படுகொலை செய்யப்பட்டது நீதி! – வைகோ

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கத் தீர்மான நிறைவேற்றத்தால் படுகொலை செய்யப்பட்டது நீதி! – வைகோ   “இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனத்தைப் படுகொலை செய்த சிங்களப் பேரினச்சார்பு அரசை அனைத்துலக நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய ஐ.நா-வின் மனித உரிமை ஆணையத்தில் தமிழர்களுக்கான நீதி சாகடிக்கப்பட்டு, அநீதிக்கு மகுடம் சூட்டப்பட்டு விட்டது. ஐ.நா-வின் வரலாற்றிலேயே ௨௦௧௫ (2015) அக்டோபர் ௧ (1) ஆம் நாள் களங்கத்தைச் சுமக்கும் கருப்பு நாளாகிவிட்டது.   ௨௦௦௯ (2009) ஆம் ஆண்டில் கொலைகாரச் சிங்கள…