எல்லாம் தமிழிலே! – செ.சீனிநைனா முகமது

எல்லாம் தமிழிலே! அன்னை என்னைக் கொஞ்சிக் கொஞ்சி அன்பு பொழிந்தது தமிழிலே என் சின்னச் சின்ன இதழ்கள் அன்று சிந்திய மழலை தமிழிலே. நிலவு காட்டி அமுதம் ஊட்டிக் கதைகள் சொன்னது தமிழிலே அவள் புலமை காட்டி என்னைத் தாலாட்டி உறங்க வைத்தது தமிழிலே பிள்ளை என்று தந்தை சொல்லிப் பெருமை கொண்டது தமிழிலே நான் பள்ளிசென்றே அகரம் எழுதப் பழகிக் கொண்டது தமிழிலே. பருவம் வந்து காதல் வந்து பாட்டு வந்தது தமிழிலே அவள் உருவம் பார்த்தே உருகும் போதில் உவமை வந்தது…

மூச்சே நம் மொழி! – மின்னூர் சீனிவாசன்

குழல்து ளைகளில் மேவும் செம்மொழிகுயில் குரலின் நெடிலிசை கூவும் செம்மொழி! மழலை மொழிக்கிளி பேசும் செம்மொழிமுடி மன்னர் மக்களோ டுயர்ந்த நம்மொழி! தாயாம் இயற்கையே தந்த செம்மொழிஇது தன்னோர் யானைவெண் தந்தச் செம்மொழி! ஓயாக் கடலொலி இழிழாம் எண்ணுவீர்நாம் உணர்ந்து வளர்த்தது தமிழாம் எண்ணுவீர்! முத்தமிழ்க்கலை யறிந்த செம்மொழிசுடர் முத்து அமிழ்கடல் செறிந்த நம்மொழி! வித்தாம் அறிவியல் போற்றும் செம்மொழிபுகழ் விரியும் விசும்புடைக் காற்றும் செம்மொழி! கண்ணோர் திருக்குறள் யாத்த செம்மொழி – சிலம்புக் கலையின் களஞ்சியம் படைத்த செம்மொழி! நண்ணும் மானுட வெற்றிச்செம்மொழி…

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழிஆக்கிடு! தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர்மாற்றம் செய்திடு! வழக்குரைஞர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கைவிடுக! உயர்நீதிமன்றத்தில் உள்ள நடுவண் படையைத் திரும்பப் பெறு! சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகில் தை 21, 2047 / பிப்.04, 2016 வியாழன் மாலை 3 30 மணி அளவில்   உயர்நீதிமன்றத்தில் தமிழ் உரிமையை நிலைநாட்ட தமிழர்களே திரண்டு வாரீர்! அழைக்கிறது தமிழ் உரிமைக் கூட்டமைப்பு தமிழ்த் தேச மக்கள் கட்சி   தமிழ்மகன்…

வாயிலுக்கு வெளியேதான் ஓட வேண்டும்! – க.தமிழமல்லன்

என்நாட்டில் என்மொழியி்ல் எல்லாம் செய்வேன் எவன்தடுப்பான்? முன்வரட்டும் எலிபோல் சாவான்! என்வீட்டில் நான் பேசி வாழ்வ தற்கே எச்சட்டம் தடுக்க வரும்? நெருப்பில் வேகும்! என்அன்னைத் தமிழ்மக்கள் அமைத்தார் கோயில் எவன்தடுப்பான் தமிழ்உரிமை? கால்கள் போகும்! என்மக்கள் ஏமாறி வாழ்க்கை தந்தால் என்மொழியை உதைக்கின்றார் வாழ்க்கை சாகும்! சமற்கிருதம் எனச்செய்த மொழியை என்றும் சரியாகப் பேசியவர் எவரு மில்லை சமற்கிருதப் பிணந் தூக்கிப் பணத்தைஎண்ணிச் சமயத்தால் மேலேறிச் சாதி செய்தோர் நமக்குள்ளே வேற்றுமைத் தீ மூட்டிவிட்டார் நம்மவரே சமற்கிருதம் தூக்க லானார் சமற்கிருதம் செத்தமொழி…

தமிழெல்லாம் எந்தமக்கே அருளு வாயே! – கவிக்கோ ஞானச்செல்வன்

ஞாலமெனும் கோளமதில் முன்பி றந்து ஞாயிற்றின் சுடரெனவே ஒளிப ரப்பிக் காலமெலாம் நின்றிருக்கும் நூல்கள் தந்து கவின்பெற்றுக் கலையுற்று வாழும் தாயே தாலசைத்தால் தமிழாகும் இயற்கை சொல்லும் தத்துவத்தின் வித்தகமாய் இலங்கு வாயே சாலவுனை வேண்டுவது தவத்தின் மேலாம் தமிழெல்லாம் எந்தமக்கே அருளு வாயே! நற்றிணையும் குறுந்தொகையாம் வரிசை எட்டும் நல்லதிரு முருகாற்றுப் படைதொ டங்கிச் சொற்றிறங்கள் காட்டுகின்ற பத்துப் பாட்டும் சுவையூட்டும் காப்பியங்கள் ஐந்தும் ஆகி மற்றுமுயர் பலசமய நூல்கள் தாமும் மாற்றரிய புதுமைசெயும் புலவோர் நூலும் எற்றானும் உனைமறவா நிலையில் நாளும்…

எந்தாய்த் தமிழே போற்றி! – திருவள்ளுவரடிமை முருகு

அறிவொளி இறைவா போற்றி போற்றி அம்மை யப்பா போற்றி போற்றி எந்தாய்த் தமிழே போற்றி போற்றி எந்தை நாடே போற்றி போற்றி தெய்வப் புலவா போற்றி போற்றி திருத்தகு குருவீர் போற்றி போற்றி திருவெலாந் தருவீர் போற்றி ஓம்! – திருக்குறள் ஞாயிறு திருவள்ளுவரடிமை முருகு : ஈசனடி போற்றி

தமிழுக்குப் பெயர் வைத்தவர் தமிழரே! – கி.வா.சகந்நாதன்

“தமிழின் பெயரை அப்படியே சொல்லாமல் ஏன் மற்றவர்கள் மாற்றிச் சொன்னார்கள்?” என்று கேட்கலாம். மாற்றவேண்டிய அவசியம் வந்துவிட்டது. தமிழிலன்றி மற்ற மொழிகளில் ழகரம் இல்லை. அதனால் மாற்றிக்கொண்டார்கள். பழங்காலத்தில் தமிழுக்குத் திராவிடமென்ற பெயர் இயற்கையாக வழங்கியிருந்தால், அந்தச் சொல்லைப் பழைய தமிழர்கள் எங்கேனும் சொல்லியிருக்கவேண்டும். தொல்காப்பியத்திலோ அதன்பின் வந்த சங்க நூல்களிலோ திராவிடம் என்ற சொல் இல்லை. தமிழ் என்ற சொல்லே வழங்குகிறது. தமிழ் நாட்டார் தாங்கள் வழங்கும் மொழிக்குரிய பெயரைப் பிறரிடமிருந்து கடன்வாங்கினார் என்பது கேலிக் கூத்து. தமிழ் என்ற பெயர் முதல்…

நம் தமிழ்மொழிக்குப் பெயர் வைத்தவர் யார்? – கி.வா.சகந்நாதன்

ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. அதைப் பாராட்டிப் போற்றி வளர்க்கும் உரிமையும் ஆவலும் உடைய தாய்தகப்பன்மார் குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள். அந்தப் பெயர் சம்பிரதாயத்துக்காக வைத்த நீண்ட பெயராக இருந்தால், குறுகலான பெயர் ஒன்றை வைத்துத் தாயோ, பாட்டியோ அழைக்கிறாள். அந்தப் பெயரே ஊரெல்லாம் பரவிப் போகிறது. சுப்பிரமணியன் என்று பெயர் வைத்தாலும், வழக்கத்தில் மணி யென்றும் சுப்பு என்றும் அது குறுகிப் போவதைப் பார்க்கிறோம். எனவே, குழந்தைக்கு வீட்டில் என்ன பெயர் வழங்குகிறதோ அதுவே நாட்டிலும் வழங்கும். இது தான் இயற்கை….

தமிழையே கருதி உறுதி கொண் டெழுவீர் ! – சுத்தானந்த பாரதியார்

எண்ணுறும் போது தமிழையே  யெண்ணீர் இசைத்துழி தமிழையே  யிசைப்பீர் பண்ணுறும் போது தமிழ்ப்பணி தனையே பழுதறப் பண்ணியின் புறுவீர் உண்ணிடும் போதும் உறங்கிடும் போதும் உயிருளந் துடித்திடும் போதும் பண்ணினு மரிய தமிழையே  கருதிக் காரிய வுறுதி கொண் டெழுவீர் ! கவியோகி சுத்தானந்த பாரதியார்

நடைமுறைப் புத்தாண்டில் உறுதி கொள்வீர்!

உறுதி கொள்வீர்! – கவிஞர் முடியரசன் முதலோடு முடிவில்லாப் பெருமை, நான்கு மொழிபெற்றும் மூப்பில்லா இளமைத் தன்மை, அதனோடு மிகுமினிமை, காலஞ் சொல்ல அமையாத பழந்தொன்மை, தனித்தி யங்கி உதவுநிலை, வளர்பண்பும், எளிமை, யாவும் உயர்தனிச்செந் தமிழுக்கே உண்டாம்; மேலும் புதுமைபெற முடிசூடி அரசு தாங்கப் புலவரெலாம் இளைஞரெலாம் உறுதி கொள்வீர்! தெலுங்குமொழி பிறமொழிகள் உயர்தல் காண்பார் தேன்மொழியாம் தமிழ்மொழியை வாழ்க என்றால் கலங்குகின்றார் ஒருசிலர்தாம்; உயிரா போகும்? கலங்கற்க! தமிழ்வாழ்ந்தால் யாரும் வாழ்வர்; புலங்கெட்டுப் போகாதீர்! ஆட்சி செய்யப் புன்மொழிகள் வேண்டாதீர்! தமிழின்…

தமிழ் ஆரியத்திற்கும் தாயே! – பேரா.சி.இலக்குவனார்

இந்திய மொழிகளின் தாயாம் தமிழ் ஆரியத்திற்கும் தாயே!             இவ்வாறு தமிழுக்கே உரிய இடைச்சொல் உரிச்சொல்களை ஆராய்கின்ற முறைமை வடமொழி நூலாராம் யாசுகருடைய நிருத்தத்தில் காணப்படுகின்றதாம். ஆகவே யாசுகரைப் பின்பற்றித் தொல்காப்பியர் கூறியிருப்பர் என அறிஞர் சுப்பிரமணிய சாத்திரியார் கருதுகிறார். (History of grammatical theories in Tamil : pages 198, 301) யாசுகருடைய காலம் தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்டமையின், அவ்வாறு கருதுதல் பொருந்தாது. யாசுகர் தொல்காப்பியரைப் பின்பற்றி நூல் செய்திருத்தல் கூடும் என்று கூறினால் மிக மிகப் பொருந்துவதாகும். ஆனால் சாத்திரியார்…

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3   தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்தியதால் இந்தியப்பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறைவாழ்க்கை பெற்ற பேராசிரியர்(1965), தமிழ்க்கல்வித்திட்டம் பற்றியும் பின்வருமாறு அகநானூற்றுப் பாடல் 55 இல் வரும் வெண்ணிப்போர் விளக்கம் மூலம் வலியுறுத்துகிறார்.   வெண்ணிப்போர்: ‘வெண்ணி’ , ‘கோவில் வெண்ணி’ என்ற பெயரின் சுருக்கமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றும் உள்ளது. . . . இங்கு நடந்த போரைப்பற்றி புலவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. ஆயினும் நம் தமிழ் மாணவர்கள் மேனாட்டில் நடைபெற்ற போர்களைப்…