விண் தொலைக்காட்சி எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் இலக்குவனார் திருவள்ளுவன்

விண் தொலைக்காட்சியில் கார்த்திகை 12, 2046 / நவம்பர் 28, 2015 சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன்.   இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய அரசியல் யாப்பு, அம்பேத்கார்,நேரு குறித்து நடைபெறும் வாதுரை தொடர்பான வாதுரையாக இந்நிகழ்வு அமையும்.   மறு ஒளிபரப்பு இன்று யாமம் 1.00 மணி. http://wintvindia.com இணையத் தளத்திலும் காணலாம்.   வாய்ப்புள்ளவர்கள் காண்க.   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடும் கட்சிகள்

  (ஐக்கிய) சனதா தளம் அகில இந்திய  பார்வடு பிளாக் அகில இந்திய சமத்துவ  மக்கள் கட்சி அகில இந்திய சனநாயக மக்கள் கட்சி அகில இந்திய திரிணமுல் காங்கிரசு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி அம்பேத்கர் மக்கள் இயக்கம் அனைத்து இந்திய  மூவேந்தர் முன்னணிக் கழகம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்திய  மக்கள் கட்சி (சமயச் சார்பற்றது) இந்திய ஒன்றிய முசுலிம் அமைப்பு இந்திய தேசிய  அமைப்பு இந்தியச் சனநாயக கட்சி இந்தியத் தேசிய காங்கிரசு இந்தியப்…

நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் எண்ணிக்கை – தொகுதி வாரியாக

வடசென்னை  40 தென்சென்னை 42 மத்திய சென்னை  20 திருப்பெரும்புதூர்  21 காஞ்சிபுரம்  11 அரக்கோணம்  24 வேலூர்  24 கிருட்டிணகிரி  24 திருவண்ணாமலை  24 ஆரணி 19 சேலம்  25 நாமக்கல்  26 திருப்பூர்  26 நீலகிரி  10 கோவை  25 திண்டுக்கல்  18 கரூர்  25 திருச்சி  29 பெரம்பலூர்  21 கடலூர்  17 சிதம்பரம்  15 நாகை  9 தஞ்சை  12 சிவகங்கை  27 மதுரை  31 தேனி  23 விருதுநகர் 26 இராமநாதபுரம்  31 தூத்துக்குடி  14 தென்காசி…

நரேந்திர மோடி தலைமையாளரானால் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு இருக்காது-தொல்.திருமாவளவன்

  திருவள்ளூர்(தனி) நாடாளுமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் இரவிக்குமாரை ஆதரித்து தொல்.திருமாவளவன் திருவள்ளூர், ஈக்காடு, திருப்பாசூர், திருவாலங்காடு போன்ற பகுதிகளில்  தேர்தல் பரப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– “நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் ஒரு சிறப்பான சனநாயக முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் இரவிக்குமாரை வெற்றி பெறச் செய்து மக்கள் பணியாற்ற அவருக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். நரேந்திரமோடி தலைமையாளரானால் -பிரதமரானால்- தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு…

கருணாநிதி இடஒதுக்கீட்டின் பாதுகாவலராக விளங்குகிறார்: திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சனநாயக முற்போக்குக் கூட்டணியின் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளருமான திருமாவளவன் செயங்கொண்டம், தா.பழூர் ஒன்றியத்தில் மோதிரம் சின்னத்திற்கு வாக்கு  திரட்டினார். “தா.பழூர் ஒன்றியத்தில் சிலால், கோடங்குடி, பொற்பதிந்த நல்லூர், நாயகனைப்பிரியாள், சிங்கராயபுரம், பாண்டி அங்காடி, அழிசுக்குடி, சுத்தமல்லி, நாச்சியார்பேட்டை, ஆதிச்சனூர், நத்தவெளி, விக்கிரமங்கலம், முட்டுவாஞ்சேரி, அருள்மொழி, தா.பழூர்  முதலான ஐம்பதுக்கும் மேற்பட்ட  ஊர்களிலும்  வாக்கு கேட்டார். சிலால் என்னுமிடத்தில்  பரப்புரையைத் தொடங்கி வைத்து திருமாவளவன் பேசியதாவது:– இந்தத் தேர்தல்  சமயவாதத்திற்கும், மக்கள்நாயகத்திற்கும் இடையே நடக்கின்ற போர் தலைவர் கலைஞர்…

காங். ஆட்சியில் இந்தியா ஏழை நாடாகி விட்டது: சரத்குமார்

 நெல்லை  நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து, சமக தலைவர் நடிகர் சரத்குமார் களக்காடு, மாவடி, டோனாவூர் பகுதியில் திறந்த ஊர்தியில் பரப்புரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:– ‘‘மத்தியில் காங்கிரசு ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் நாட்டின் முன்னேற்றம் பாதிப்பு அடைந்துள்ளது. பொதுமக்களின் வாழ்க்கைத் தரமும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 14 ஆண்டுகளாக, காங்கிரசுடன் திமுக கூட்டணியில் இருந்து பதவி நலத்தைத் துய்த்துள்ளனர். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விட்டது என்கிறார்  தாலின். இந்தியாவில்  எரிவளி விலை, …

செயலலிதா தலைமையாளராகும் கனவு பலிக்காது: அன்புமணி

அதிமுக ஆட்சியில் 6,500 கொலைகள்:  செயலலிதா  தலைமையாளராகும் கனவு பலிக்காது: அன்புமணி  இராமதாசு பேச்சு தேசிய சனநாயகக் கூட்டணி சார்பில் தருமபுரி  நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க. சார்பில்  மரு. அன்புமணிஇராமதாசு போட்டியிடுகிறார். இதனையொட்டி தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தேசிய சனநாயக் கூட்டணிச் செயல்வீரர்கள்  கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி இராமதாசு பேசியதாவது:- வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு வெற்றிக்கூட்டணியை உருவாக்கி உள்ளோம். இந்தத் தேசியசனநாயகக் கூட்டணியை உடைக்க வேண்டும் என்று பலர் முயன்றனர். அவர்களின் முயற்சி பலிக்காது. இந்தியாவின் தலைமையாளருக்கான…

தமிழக மக்களுக்கு நல்லது செய்வது தான் முதல்பணி – விசயகாந்து

    தமிழக மக்களுக்கு நல்லது செய்வது தான் முதல்பணி, விசயகாந்த்து முதலமைச்சராவது இரண்டாம்நிலைதான், என தே.மு.தி.க., தலைவர் விசயகாந்து தூத்துக்குடியில் பேசினார்.   வேலை வாய்ப்பு இல்லை: செல்வநாயகபுரம்  சாலையில் ம.தி.மு.க., வேட்பாளர்  சோயலை ஆதரித்து விசயகாந்த்து பேசியதாவது: தூத்துக்குடி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு மீனவர்கள், கோவில்பட்டியில் தீப்பெட்டித்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். ஆனால் இங்கு வேலை வாயப்பு இல்லாமல் தொழிலாளர்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் இல்லை: அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் இங்குள்ளது. தமிழகத்தின்…

அதிமுக–திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்: விசயகாந்து

நாகை  நாடாளுமன்றத் தொகுதி தேசிய சனநாயகக் கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் இராவணன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விசயகாந்து  திருவாரூர் கீழவீதியில்  பரப்புரை ஆற்றினார். “கடந்த முறை தேர்தல்  பரப்புரையின்பொழுது தவிர்க்க இயலாத காரணத்தினால் திருவாரூர் வர இயலவில்லை. அதற்காக முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எங்கள் கூட்டணி மக்கள் கூட்டணி, வெற்றிக் கூட்டணி, தேசிய சனநாயகக் கூட்டணி. தமிழக மக்களுக்கு நல்லது நடப்பதற்காகக் கூட்டணி வைத்துள்ளோம். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. தண்ணீர் இல்லை, மின்சாரம்…

திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள்: விசயகாந்து பேச்சு

  “திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஊழல் செய்த கட்சிகள்” என தேமுதிக தலைவர் விசயகாந்து தெரிவித்தார். தேசிய சனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் பேராசிரியர்  சே.கே.இரவீந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து தேமுதிக தலைவர் விசயகாந்து யானைக்கவுனியில் வாக்கு  திரட்டினார். அப்போது, விசயகாந்து பேசிய தாவது: “தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இந்நிலையில், முதல்வர் செயலலிதா குசராத்தை ஒப்பிட்டுப் பேசுகிறார். ஏற்கெனவே, மதுரவாயல் மேம்பாலம் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. மதுரவாயல் பாலம் திட்டத்துக்கு, ஏற்கெனவே…

நாங்கள் அமைத்து இருப்பது வெற்றிக்கூட்டணி: விசயகாந்து முழக்கம்!

  மத்திய சென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சே.கா.இரவீந்திரனை ஆதரித்து, யானைகவுனி, பட்டாளம், வில்லிவாக்கம், முதலான பகுதிகளில் தே.மு.தி.க. தலைவர் விசயகாந்து பரப்புரை மேற்கொண்டார். யானைகவுனியில் திறந்த  ஊர்தியில் நின்றபடி, விசயகாந்து பேசியதாவது:-  “குசராத்து தமிழ்நாடு மாதிரி முன்னேறவில்லை என்று கூறுகிறார்கள். அது உண்மை தான். தமிழ்நாட்டில்  கையூட்டு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஆனால் குசராத்து கையூட்டில்  முன்னேற்றம் அடையவில்லை.  அதேபோல், தமிழ்நாடு  அரசின் மதுபானக்கடை விற்பனையில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. ஆனால் குசராத்து அதில் முன்னேற்றம் அடையாமல்தான் இருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டின் முன்னேற்றமாகச் சொல்கிறார்கள்….

எரிநெய், எரிவளி விலையை ஏற்றியவர்களுக்குத் தண்டனை கொடுங்கள்: வைகோ

 எரிநெய், கன்னெய். எரிவளி விலை ஏற்றத்துக்குக் காரணமானவர்களுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தண்டனை கொடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கேட்டுக் கொண்டார். திருபெரும்புதூர் தொகுதி மதிமுக வேட்பாளர் மாசிலாமணியை ஆதரித்து அம்பத்தூர்  பேருந்து நிலையம் அருகே வைகோ ஞாயிற்றுக்கிழமை  தேர்தல் உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது: “இரண்டு நாட்களுக்கு முன்பு தருமபுரியில் அன்புமணி இராமதாசைக் குறிவைத்துத் தாக்குதல் நடந்துள்ளது. இரண்டே கால் கிலோ எடை கொண்ட கல்லைக் கொண்டு அவரைக் கொலை செய்ய முயன்றுள்ளனர். நல்லவேளையாக அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்….