‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை: சுவையினுக்குச் சுவை கூட்டுகிறது
(புதிய புரட்சிக்கவிக்குச் சுரதாவின் அணிந்துரை தொடர்ச்சி) ‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை: சுவையினுக்குச் சுவை கூட்டுகிறது பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ‘புரட்சிக்கவி’ என்னும் தலைப்பில் ஒரு குறுங்காப்பியத்தை 1937ஆம் ஆண்டில் இயற்றினார். ‘பில்கணியம்’ என்னும் வடமொழி நூலைத் தழுவி இந்நூல் எழுதப்பட்டது என அவரே குறிப்பிட்டுள்ளார். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவர் ‘சீவகசிந்தாமணி காப்பியத்தைப் படைத்துத் தழுவல் இலக்கியம் என்ற புதிய போக்கைத் தமிழ் இலக்கியத்தில் தொடக்கி வைத்தார். பிறமொழிக் காப்பியங்களைத் தமிழ் இலக்கிய – இலக்கண மரபுகளுக்கேற்ப வடிவமைக்க வழிகாட்டினார். …
தினமணிக்குக் கண்டனக் கூட்டம் – 10.12.2020
தெற்கெல்லையில் ஒரு தமிழினப் போராளி மணி நூல் வெளியீட்டு விழா
பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 காலை 9.30 மணி நிகழ்விடம் : இளைஞர் விடுதி, இந்திரா நகர், சென்னை நூல் வெளியீடு: பழ.நெடுமாறன் படத்திறப்பு: கி.வேங்கடராமன் சிறப்புரை: பெ.மணியரசன் நாஞ்சில் நாடன் ஏற்புரை: முனைவர் பி.(இ)யோகீசுவரன் அழைக்கும் அரசி பதிப்பகம்
கி.த.பச்சையப்பனார் நினைவேந்தல், வண்ணாரப்பேட்டை,சென்னை
புரட்டாசி 14, 2049/ஞாயிறு/ 30.09.2018 மாலை 6.00 வெற்றி திருமண மாளிகை, குறுக்குச் சாலை புது வண்ணை,சென்னை 81 முதுபெரும் தமிழறிஞர் கி.த.பச்சையப்பனார் நினைவேந்தல் படத்திறப்பு: பழ.நெடுமாறன் கி.த.ப.குடும்பத்தினர் 7502489272, 6382280116,9941112212,8667661234
கண்டனப் பொதுக்கூட்டம் , சென்னை
வைகாசி 06, 2049 புதன் 20.6.2018 அன்று மாலை 5 மணி தியாகராயர் நகர், முத்துரங்கம் சாலை, சென்னை தமிழக மக்கள் முன்னணி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைதைக் கண்டித்தும், தோழர்.பெ.மணியரசன் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும் கண்டனப் பொதுக்கூட்டம் தலைமை : தோழர்.பொழிலன் ஐயா.பழ.நெடுமாறன், தோழர் ்தியாகு, தோழர்.திருமாவளவன், தோழர்.தெகலான்பாகவி, திருமுருகன்காந்தி, ஒய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அணிவகுக்கின்றனர் !
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, திருச்சிராப்பள்ளி.
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, திருச்சிராப்பள்ளி. ஆனி/ஆடவை 31, 2048 / சூலை 15, 2017 காலை 9.45 முதல் இரவு 7.30 வரை தூய வளனார் கல்லூரிக்குமுகாய மன்றம், திருச்சிராப்பள்ளி
சிங்கள அரசின் ஏமாற்று வேலை – பழ. நெடுமாறன்
சிங்கள அரசின் ஏமாற்று வேலை இலங்கையில் 2009-ஆம் ஆண்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் ஏறத்தாழ 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் உசாவல் நடத்துமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் 2009 மே மாதம் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு சூன் மாதம் ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் அமைத்த சட்ட வல்லுநர் குழு இதே கோரிக்கையைப் பரிந்துரைத்தது. 2010 சனவரியில் தபிளின்(Dublin) மக்கள் தீர்ப்பாயம்…
‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’: அணிந்துரை: பழ.நெடுமாறன்
‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’ : அணிந்துரை: பழ.நெடுமாறன் புலவர் சா.பன்னீர்செல்வம் அவர்கள் ‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’ என்னும் தலைப்பில் தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றைக் குறித்து எழுதிய 10 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. தொல்காப்பியர் கூறிய திசைச் சொல் என்பதின் சரியான விளக்கம் யாது என்பதைச் ‘செந்தமிழா கொடுந்தமிழா?‘ என்னும் தலைப்பிலான கட்டுரை கூறுகிறது. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி எனத் தொல்காப்பியர் கூறுவதற்கு இளம்பூரணர், “செந்தமிழ்…
காசி ஆனந்தன் எழுதிய ‘தம்பி செயத்துக்கு…. ( கடிதம் – 2 )’ நூல் வெளியீடு
உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய ‘தம்பி செயத்துக்கு…. ( கடிதம் – 2 )’ நூல் வெளியீடு மார்கழி 20, 2047 புதன்கிழமை 04/01/2017 மாலை 5 மணி சந்திரசேகர் திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை தலைமை : பழ.நெடுமாறன் ( தலைவர்- தமிழர் தேசிய முன்னணி ) நூல் வெளியீடு : வைகோ ( பொதுச்செயலாளர் – ம.தி.மு.க) நூல் பெறுபவர் : ம.நடராசன் ( ஆசிரியர் – புதிய பார்வை ) நிகழ்வு நெறியாளர்: இலக்கியர் செயபாசுகரன்…
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா – ஒளிப்படங்கள்
மறைமலையடிகள் விருது,பொற்கிழி வழங்கல், பல்லவபுரம், சென்னை
புரட்டாசி 09, 2047 / செட்டம்பர் 25, 2016 மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா விருது, பொற்கிழி பெறுநர் : பழ.நெடுமாறன் மறை.தி.தாயுமானவன்
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் க.தமிழமல்லன்
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் க.தமிழமல்லன் ஆடி 01, 2047 / சூ லை 16,2016 அன்று தஞ்சையில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா மாநாட்டில் முனைவர் க.தமிழமல்லன பங்கேற்றார். மூன்று நாள் விழாவின் இராண்டாம் நாளான அன்று காலையில் புலவர்மணி இரா.இளங்குமரனார் அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. புதுச்சேரித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் ‘தனித்தமிழில் பெயர் வைத்தல்‘ எனும் தலைப்பில் உரையாற்றினார். நண்பகல் 1.50மணிமுதல் 2.30மணிவரையில் நிகழ்த்திய அவருடைய சொற்பொழிவை மக்கள் விரும்பிக் கேட்டனர். அவருடைய சொற்பொழிவுக்குச்…