தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி  பேராசிரியர் சி.இலக்குவனார் [ங]  1.முன்னுரை  – முற்பகுதி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] 1.முன்னுரை – பிற்பகுதி   தேவை உறுநருக்கு உதவுவதும் கடமை தவறுநர்க்கு இடித்துரைப்பதும் போராளியின் கடமைதானே. மாணாக்கர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் அவர் பரப்பிய தமிழுணர்வு தமிழ் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. பரப்புரைகளில் இலக்கியச் சிறப்புகளுடன் தமிழுக்கு ஏற்பட்டுள்ள தீங்கையும் காக்கும் கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உள்ளதையும் விளக்கினார் பேராசிரியர். “தமிழ், தமிழினம், தமிழிலக்கியம் இவற்றில் ஒன்றுபோம் எனில் மற்றவும் ஒழியும்.” (பாவேந்தர் பாரதிதாசன்) என்பதையே எல்லா இடங்களிலும் தொடக்கம் முதலே வலியுறுத்தினார்…

புதுச்செருசியில் தமிழ்விழா 2016

ஆனி 17 – ஆனி 20, 2047 / சூலை 01 –  சூலை 04, 2016 பாவேந்தர் பாரதிதாசன் 125 ஆவது பிறந்தநாள் விழா தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா பேரவைத்தமிழ்விழா 2016 இயல், இசை, நாடகக் கலை நிகழ்ச்சிகள் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நியூசெர்சி தமிழ்ச்சங்கம்    

அன்றாடம் வணங்கியே அடிதொழும் நம்கரம்! – ப.கண்ணன்சேகர்

அன்றாடம் வணங்கியே அடிதொழும் நம்கரம்! புதுவையின் குயிலோசை புவியெலாம் ஒலித்திட புரட்சிக்கவி வண்ணத்தில் பொலிவென வந்தது! மதுமதி கலையென மனங்களும் சுவைத்திட மலர்ந்திட்ட கவிதையோ மயக்கத்தைத் தந்தது! எதுகையும் மோனையும் இலக்கியத் தமிழினில் எண்ணற்ற கவிதைகள் எண்ணத்தில் நின்றன! பதுமையின் பாவலர் பாடிய விடுதலை பாய்ந்திடும் அம்பென பழமையை வென்றது! பாரதியின் தாசனே பைந்தமிழின் நேசனே புதியதோர் உலகுசெய்ய புறப்பட்ட தமிழனே! பேராதிக்க வெறியினை பெயர்த்தெடுத்த எழுத்தாணி பொழிந்திட்ட காவியங்கள் புரட்சிகர அமிழ்தமே! வேரினில் பழுத்தபலா விதவையர் எனச்சொன்ன வாழ்வியல் கவிதைகள் வைரத்தின் மகுடமே!…

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! – பாரதிதாசன்

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே! வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே வீரனின் வீரமும், வெற்றியும் நீயே! தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ? தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ? சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய் தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ? செந்தமிழே! உயிரே! நறுந்தேனே! செயலினை மூச்சினை உனக்களித்தேனே! நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே! முந்திய நாளினில் அறிவும் இலாது மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது செந்தாமரைக் காடு பூத்தது போலே செழித்தஎன்…

தமிழன் ஆக்கிய துண்க! – பாரதிதாசன்

தமிழன் உணவே தமிழர்க்கு அமிழ்து!   உண்டி விற்கும் உண்மைத் தமிழரே அண்டிய தமிழர், அமிழ்தமிழ் தமிழ்தெனச் செப்பும் வண்ணம் செய்திறம் பெறுக! உண்டி கொள்ளும் உண்மைத் தமிழரே, தமிழன் உணவே தமிழர்க்கு அமிழ்து! தமிழர் தமிழனை ஆத ரிக்க! தஞ்சைத் தமிழன் செய்தது போல இனிதே யாயினும், எட்டியே ஆயினும், வாழ்வ தாயினும் சாவ தாயினும் தமிழன் ஆக்கிய துண்க தமிழகம் தன்னுரி மைபெறற் பொருட்டே! -பாவேந்தர் பாரதிதாசன்

இந்திக் கள்ளிப்பால் ஊற்றுதல் கட்டாயமாம்! – பாரதிதாசன்

இந்தியா கட்டாயம்? – பாரதிதாசன் தமிழ், அன்னைக்குச் சோறில்லை எம்மிடத்தில் — இந்தி அனைக்குத் தீனியும் கட்டாயமாம் சின்னபிள் ளைக்குத்தாய்ப் பாலினொடும் — இந்தத் தீநஞ்சை ஊட்டுதல் கட்டாயமாம். கல்லாமை என்னுமோர் கண்ணோய்க்கே — இந்திக் கள்ளிப்பால் ஊற்றுதல் கட்டாயமாம். இல்லாமை என்னுமோர் தொல்லைக்குமேல் — இந்தி இருட்டில் வீழ்வது கட்டாயமாம். அம்மா எனத்தாவும் கைக்குழந்தை —     இந்தி அம்மியில் முட்டுதல் காட்டாயமாம். இம்மா நிலத்தினில் கல்வித்திட்டம் —       இவ்வா றிட்டதோர் முட்டாளைக் கண்டதில்லை. தாய்மொழி நூற்றுக்கு நூறுபெயர் — பெறத் தக்கதொர் கட்டாயம்…

இந்தி எதிர்த்திட வாரீர் – பாரதிதாசன்

இந்தி எதிர்த்திட வாரீர் இந்தி எதிர்த்திட வாரீர் — நம் இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்        (இந்தி) முந்திய காலத்து மன்னர் நம் முத்தமிழ் நாட்டினில் தொத்திடு நோய்போல் வந்தவட மொழிதன்னை — விட்டு                                                                                 (5) வைத்ததனால்வந்த தீமையைக் கண்டோம்.  (இந்தி) செந்தமிழ் தன்னில் இல்லாத — பல சீமைக் கருத்துக்கள் இந்தியில் உண்டோ? எந்த நலம்செய்யும் இந்தி — எமக்கு இன்பம் பயப்பது செந்தமிழன்றோ.         (இந்தி)                                                      (10) தென்னாடு தான்எங்கள் நாடு — நல்ல செந்தமிழ் தான்எங்கள்…

இனி முழுக்க முழுக்க, மான மீட்புப்பரப்புரைகளே! வீரமணி சூளுரை

  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், இரண்டாம் நாளாகச் சித்திரை 13, 2046 / 26.4.2015 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.  முதல் நாள் நிகழ்வில் கருத்தரங்குடன், கலை நிகழ்ச்சியாக புரட்சிக் கவிஞர் பாடல் களுடன் குயில்மொழி குழுவினரின் நடனம் பார்வையாளர்களின் கருத்துகளைக் கவர்ந்தன.   இரண்டாம் நாள் நிகழ்வாக வாழ்வியல் பண்பாட்டு மீட்டுருவாக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் அ.இராமசாமி தலைமையில் புதுவை மாநிலப் பகுத்தறிவாளர்கழகத் துணைத்தலைவர் மு.ந. நடராசன் வரவேற்றார். எழுத்தாளர்…

தமிழ் மூன்றும் செழித்ததென்று கொட்டு முரசே! – பாவேந்தர் பாரதிதாசன்

கொட்டு முரசே! எல்லார்க்கும் நல்லின்பம் எல்லார்க்கும் செல்வங்கள் எட்டும் விளைந்ததென்று கொட்டுமுரசே – வாழ்வில் கட்டுத் தொலைந்ததென்று கொட்டு முரசே! இல்லாமை என்னும்பிணி இல்லாமல் கல்விநலம் எல்லார்க்கும் என்றுசொல்லி கொட்டுமுரசே – வாழ்வில் பொல்லாங்கு தீர்ந்ததென்று கொட்டு முரசே! சான்றாண்மை இவ்வுலகில் தேன்றத் துளிர்த்த தமிழ் மூன்றும் செழித்ததென்று கொட்டுமுரசே – வாழ்வில் ஊன்றிய புகழ்சொல்லிக் கொட்டு முரசே! ஈன்று புறந்தருதல் தாயின்கடன்! உழைத்தல் எல்லார்க்கும் கடனென்று கொட்டுமுரசே! – வாழ்வில் தேன்மழை பெய்ததென்று கொட்டு முரசே! – பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ் எங்கணும் பல்குக! பல்குக!- பாவேந்தர் பாரதிதாசன்

நன்று தமிழ் வளர்க! – தமிழ் நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக! என்றும் தமிழ் வளர்க! – கலை யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக! இன்பம் எனப்படுதல் – தமிழ் இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக! – பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ்மேல் ஆணை! – பாவேந்தர் பாரதிதாசன்

தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை! தமிழகமேல் ஆணை! துாயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான் தோழரே உரைக்கின்றேன்; நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார் நலிவதை நான் கண்டும், ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி உழைத்திட நான் தவறேன். தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன் தாய்தடுத் தாலும் விடேன்! எமைநத்து வாயென எதிரிகள் கோடி இட்டழைத் தாலும் தொடேன்! தமக்கொரு தீமை. என்று நற்றமிழர் எனைஅழைத்திடில் தாவி இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான் இனிதாம் என் ஆவி! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த என் மற…

ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்! – பாவேந்தர் பாரதிதாசன்

எந்நாள்? அந்த வாழ்வுதான் எந்த நாள் வரும்? அந்த வாழ்வுதான் இந்த மாநிலம் முழுதாண் டிருந்தார் இணையின்றி வாழ்ந்தார் தமிழ்நாட்டு வேந்தர் அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்? ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்; ஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம்! புலி, வில், கயல் கொடி மூன்றினால் புது வானமெங்கும் எழில் மேவிடும் அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்? குறைவற்ற செல்வம், வாழ்வில் இன்பவாழ்வு கொண்ட தமிழனுள்ளம் கண்ட தமிழிசை, பிற மாந்தர்க்கும் உயி ரானதே பெறலான பேறு சிறி தல்லவே! அந்த வாழ்வுதான் எந்தநாள்…