murasu03

கொட்டு முரசே!

எல்லார்க்கும் நல்லின்பம்

எல்லார்க்கும் செல்வங்கள்

எட்டும் விளைந்ததென்று

கொட்டுமுரசே – வாழ்வில்

கட்டுத் தொலைந்ததென்று

கொட்டு முரசே!

இல்லாமை என்னும்பிணி

இல்லாமல் கல்விநலம்

எல்லார்க்கும் என்றுசொல்லி

கொட்டுமுரசே – வாழ்வில்

பொல்லாங்கு தீர்ந்ததென்று

கொட்டு முரசே!

சான்றாண்மை இவ்வுலகில்

தேன்றத் துளிர்த்த தமிழ்

மூன்றும் செழித்ததென்று

கொட்டுமுரசே – வாழ்வில்

ஊன்றிய புகழ்சொல்லிக்

கொட்டு முரசே!

ஈன்று புறந்தருதல்

தாயின்கடன்! உழைத்தல்

எல்லார்க்கும் கடனென்று

கொட்டுமுரசே! – வாழ்வில்

தேன்மழை பெய்ததென்று

கொட்டு முரசே!

bharathidasan08– பாவேந்தர் பாரதிதாசன்