புது இங்கிலாந்து தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழா

  புது இங்கிலாந்து தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா லிட்டில்டன், மச்சசுசீத்சுசில் பிப்ரவரி 09 ஆம் நாள் இனிதே கொண்டாடப்பட்டது. இயல், இசை, நாடகம் என சின்னஞ்சிறார் மட்டும் அன்றிப் பெரியவரும் பங்குபெற்று பார்வையாளர்களை மகிழ்வித்தனர். சிசுபாரதி மாணவர்கள் மூலம்,’கல்வியின் சிறப்பை’ எடுத்துரைக்கும் வகையில் நாடகத்தை இயற்கையாகவும் நகைச்சுவையுடனும் நையாண்டி பாடல்களோடு எழுதி வடிவமைத்திருந்தார் உமா நெல்லையப்பன். இனியா,  (இ)லையா, அசுமிதா,அட்சயா, கேசவு, சூரியா, சனனி,அமியா, வர்சிணி, சிந்து,அரிணி,அம்சா, சஞ்சனா ஆகியோர் பங்கேற்று, திருவள்ளுவர், ஒளவையார், பாரதியார் ஆகியோரின் கல்வி தொடர்பான கருத்துகளை மேற்கோளாக எடுத்துரைத்துச்…

புளோரிடாவில் பொங்கல் விழா

புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ நகரில் தைப்பொங்கல் பண்டிகை, மத்திய புளோரிடா முத்தமிழ்ச் சங்கம் சார்பில் வெகு  சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.      ஆர்லாண்டோ நகரில் வசிக்கும் தமிழர்கள் ஆலயத்தில் ஒன்று கூடிப் பொங்கலிட்டுச் சூரியனுக்குப் படையலிட்டனர்.     இதனைத் தொடர்ந்து, சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.   விழாவில் சிறுவர்கள், பெரியவர்கள் எனக் கலந்து கொண்ட அனைவரும் நமது  பரம்பரை உடையில் வந்திருந்திருந்தது விழாவிற்குக் கூடுதல் சிறப்பு சேர்ப்பதாக அமைந்திருந்தது. இவ்விழாவில் ஏராளமானோர்…