நமது நாட்டிற் போலவே வேறு பல நாடுகளிலும் யாழ்க்கருவி தெய்வமாகப் போற்றப்பட்டது. பண்டை நாளிலே சீரும் சிறப்பும் எய்தியிருந்த மிசிரம் என்னும் எகிப்து நாட்டிலும், பாரசீக கடற்கரையிலிருந்து அழிந்து போன சுமேரியா நாட்டிலும், சோழர் குடியேறினமையாலே சோழதேயம் என்னும் பெயரினை எய்திப் பிற்காலத்திலே மொழிச் சிதைவினாலே சால்தேயா என வழங்கப்பட்ட தொல்பதியினிலும், சேரர் குலத்தார் கலத்திற் சென்று வெற்றி பெற்றுத் தம்மாணை செலுத்திய கிரேக்கத் தீவிலும், அதற்கணித்தாகிய யவனபுரத்திலும், உரோமர் வருவதற்கு முன்பழைய இத்தாலி தேசத்திலும், ஐபீரியா எனப்பட்ட பழைய இஃச்பெயின் சேத்திலும்,…