பிழைப்புக்கு வாய்த்த தென்ன வடமொழியா? – பாரதிதாசன்

வடமொழி எதிர்ப்பு பூசாரி கன்னக்கோல் வடமொழிக்குப் பொதுப்பணத்தைச் செலவழித்துக் கழகமெல்லாம் ஆரியர் அமைத்திடவும் சட்டம் செய்தார் ஐயகோ அறிவிழந்தார் ஆளவந்தார் பேசத்தான் முடிவதுண்டா? அஞ்சல் ஒன்று பிறர்க்கெழுத முடிவதுண்டா அச்சொல்லாலே? வீசாத வாளுக்குப் படைவீடொன்றா? வெள்ளியிறை பிடிஒன்றா வெட்கக்கேடே! வடமொழியைத் தாய்மொழிஎன் றுரைக்கும் அந்த வஞ்சகர், தம் இல்லத்தில் பேசும் பேச்சு வடமொழியா? பிழைப்புக்கு வாய்த்த தென்ன வடமொழியா? கிழமைத்தாள், நாளின் ஏடு வடமொழியா? எழுதும்நூல் பாடும் பாட்டு வடமொழியா? நாடகங்கள் திரைப்படங்கள் வடமொழியா? மந்திரமென்று ஏமாற்றத்தான் வடமொழிஎன் றால்அதைத்தான் மதிப்பாருண்டோ திரவிடரை அயலார்கள்…

வேண்டவே வேண்டா சமற்கிருதமும் இந்தியும்

  சமற்கிருதத்திணிப்பிற்கும் இந்தித்திணிப்பிற்கும் எதிராகக் கூறுபவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? இவ்விரு மொழிகளையும் எதிர்க்கவில்லை; இவ்விருமொழிகளின் திணிப்புகளைத்தான் எதிர்க்கின்றோம் என்கின்றனர். ஆனால், நாம் அவ்வாறு கூறப்போவது இல்லை. விருப்பம் என்ற போர்வையில் இவை திணிக்கப்படுகின்றன; தமிழ் நாட்டில் தமிழ் மக்களிடம் இருந்து அவர்களின் தாய்மொழியாம் தமிழை அப்புறப்படுத்துகின்றன; பெரும்பான்மை என்ற தவறான புள்ளிவிவர அடிப்படையிலும், பொய்யான சிறப்புகள் அடிப்படையிலும் உலக மொழிகளின் தாய் மொழியான தமிழை அதன் தோற்றுவாயான தமிழகத்திலிருந்து ஒவ்வொரு துறையிலும் அழித்து வருகின்றன. எனவே, விருப்ப மொழி என்ற போர்வையிலும் இவை தமிழ்நாட்டில்…