தேனிப் பகுதியில் காளான்கள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்குகின்றனர். மழை பொழியும் நேரத்தில் இடி இடித்தால் இயற்கையாகவே காளான்கள் வெளிவரத் தொடங்கும். இதில் பேய்க்காளான், வெண்மை நிறக்காளான் என இரண்டு வகைப்படும். வெண்மை நிறக்காளான்கள் மருத்துவகுணம் உடையது. மேலும் சைவப்பிரியர்கள் அசைவம் சாப்பிட்டதைப்போன்று உணரும் தன்மை உடையது, இக்காளான்கள் அரிதாகத்தான் கிடைக்கும். மேலும் இடிஇடிக்கும்போது பூமியிலிருந்து தானாகவே வளரும் தன்மை உடையது. தற்பொழுது இடி மின்னலுடன் கூடிய மழை பொழிவதால் தென்னந்தோப்புகள், வயல் வெளிகளில் காளான்கள் தன்னியல்பில் முளைத்து வருகின்றன. தோட்ட…