ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 4

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 3 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 4 நாவல் நாவல்‌ என்பது ஓர்‌ ஊரின்‌ பெயர்‌. தேவாரம்‌ பாடிய மூவருள்‌ ஒருவராகிய சுந்தரர்‌ அவ்வூரிலே பிறந்தருளினார்‌. ‘அருமறை நாவல்‌ ஆதி சைவன்‌ என்று பெரிய புராணம்‌ கூறுமாற்றால்‌ அவர்‌ பிறந்த ஊரும்‌ குலமும்‌ விளங்கும்‌. அந்நாவல்‌, சுந்தரர்‌ தோன்றிய பெருமையால்‌ திருநாவல்‌ ஆயிற்று. ஈசனால்‌ ஆட்‌ கொள்ளப்பெற்ற சுந்தரர்‌ அவரடியவராகவும்‌, தோழராகவும்‌ சிறந்து வாழ்ந்த நலத்தினை அறிந்த பிற்காலத்தார்‌ அவர்‌ பிறந்த ஊரைத்‌ திருநாவல்‌ நல்லூர்‌ என்று…

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 3

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 2 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 3 சோலை சோலை என்ற சொல்லும்‌ சில ஊர்ப்‌ பெயர்களில்‌ உண்டு. மதுரையின்‌ அருகேயுள்ள அழகர்‌ கோவில்‌ பழங்காலத்தில்‌ திருமால்‌ இருஞ்சோலை என்று பெயர்‌ பெற்றிருந்தது.32 பழமுதிர்‌ சோலை  முருகப்‌ பெருமானது படைவீடுகளில்‌ ஒன்று என்று திருமுருகாற்றுப்படை கூறும்‌.33 சேலம்‌ நாட்டில்‌ தலைச்சோலை என்பது ஓர்‌ ஊரின்‌ பெயர்‌. திருச்சிராப்பள்ளியில் திருவளர்சோலை என்னும்‌ ஊர் உள்ளது. தோப்பு மரஞ்‌ செடிகள்‌ தொகுப்பாக வளரும்‌ இடம் தோப்பு என்று அழைக்கப்படும்‌.34  தோப்பின்‌…

ஊரும் பேரும்:இரா.பி.சேது(ப்பிள்ளை):– 2

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 1 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 2 பழங்காலத்தில்‌ தமிழ்‌ நாட்டில்‌ மரம் செறிந்த காடுகள்‌ மலிந்திருந்தன. பண்டைத்‌ தமிழரசர்களாகிய கரிகால்‌ வளவன்‌ முதலியோர்‌ காடு கொன்று நாடாக்கினர்‌ என்று கூறப்படுகின்றது.19 ஆயினும்‌, அந்‌ நாளில்‌ இருந்து அழிபட்ட காடுகளின்‌ தன்மையைச்‌ சில ஊர்ப்பெயர்களால்‌, உணரலாம்‌. இக்காலத்தில்‌ பாடல்‌ பெற்ற தலங்கள்‌ என்று போற்றப்படுகின்ற ஊர்கள்‌ முற்காலத்தில்‌ பெரும்பாலும்‌ வனங்களாகவே இருந்தன என்பது சமய வரலாற்றால்‌ அறியப்படும்‌. சிதம்பரம்‌ ஆதியில்‌ தில்லைவனம்‌; மதுரை கடம்பவனம்‌; திருநெல்வேலி வேணுவனம்‌….

ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 1

(ஊரும் பேரும் – முகவுரையும் நன்றியுரையும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 1. தமிழகமும்‌ நிலமும்‌ தமிழகம் பழம்‌ பெருமை வாயந்த பாரதநாட்டின்‌ தென்பால்‌ விளங்குவது தமிழ்நாடு. சேர சோழ பாண்டியர்‌ என்னும்‌ மூவேந்தரால்‌ தமிழகம்‌ தொன்றுதொட்டு ஆளப்பட்ட தென்பர்‌. பொதுவுற தமிழகம்‌ நோக்கும்பொழுது பழந்‌ தமிழகத்தில்‌ மேல்நாடு சேரனுக்கும்‌, கீழ்நாடு சோழனுக்கும்‌, தென்னாடு பாண்டியனுக்கும்‌ உரியன வாயிருந்தன என்பது புலனாகும்‌. இங்ஙனம்‌ மூன்று கவடாய்‌ முளைத்தெழுந்த தமிழகம்‌ மூவேந்தரது ஆட்சியில்‌ தழைத்தோங்கி வளர்ந்தது.*1 நால்‌ வகைப்பட்ட நிலங்கள்‌. தமிழகத்தில்‌ அமைந்‌திருக்கக்‌ கண்டனர்‌ பண்டைத்‌ தமிழர்‌.*2…