சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ : ஓரங்க நாடகத்தின் பின்னுரை

(வைகாசி 3, 2015 / மே 17, 2015 தொடர்ச்சி) பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல சமயங்கள் உடைய, பல மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு சமயச் சண்டைகளும், இனச் சண்டைகளும், குழுச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும் பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைத்துப் போவது வருந்தத்தக்க வரலாற்றுக் கற்களாகும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைக்குப் பிறகு சமயப்போரை மறுபடியும் தொடக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத் தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன்…

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : காட்சி 5

(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி) காட்சி ஐந்து இலவா, குசா, இராமன் முதல் சந்திப்பு இடம்: காட்டுப் போர்க்களம். நேரம்: மாலை. பங்குகொள்வோர்: இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், இலவா, குசா, இராமன், சீதா.துறவக மருத்துவர், சீடர்கள். அரங்க அமைப்பு: பரதன் ஏவிய ஓரம்பில் இலவாவின் கரம் காயமானது! [வில்லைக் கீழே போட்டுவிட்டுக் குசா, இலவா கைக்குக் கட்டுப் போடுகிறான்] அடுத்துப் போரில் குசா பரதனைக் காயப்படுத்தி முடமாக்கினான். களங்கமற்ற சிறுவரைக் கண்டு வல்லமைமிக்க அனுமான் படையினர்…

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் :காட்சி 1

நாடகப் பாத்திரங்கள்: சீதை, இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், வால்மீகி, வசிட்டர், விசுவாமித்திரர், அனுமான், பத்து அல்லது பன்னிரண்டு அகவைச் சிறார் இலவா, குசா மற்றும் வால்மீகியின் ஆண் பெண் சீடர்கள், சேனையாட்கள்…. [தொடக்கக் காண்டம்: இலங்கைப் போரில் இராவணனைக் கொன்று சீதையை மீட்டு இராமன் இலட்சுமணன், அனுமான் படைகளுடன் அயோத்தியா புரிக்கு மீண்டு பட்டத்து அரசனாய் முடி சூட்டப்படுகிறான்] முதலாம் காட்சி சீதை நாடு கடத்தப்படல்   இடம்: அயோத்தியபுரி அரண்மனையில் மாமன்னன் இராமனின் தனி மாளிகை, நேரம்: பகல் வேளை. பங்கு…

சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் : முகவுரை

[இன்றைக்கு நாடகங்கள் அருகிவிட்டன. மேடை நாடகங்களும் சூழலுக்கேற்ற புரிதலைஉடைய பேச்சு வழக்காக உள்ளனவே தவிர, எப்பொழுதும் புரியும் தன்மையில் இருப்பதில்லை. நகைச்சுவை என்ற பெயரில் துணுக்குத் தோரணங்களாகப் பெரும்பாலான நாடகங்கள் உள்ளன. ஆனால்,நல்ல நாடகங்களைப் படைத்துத் தருவோர் நம்மில் இல்லாமல் இல்லை. அவர்களில் ஒருவராகக் கனடா அறிவியலர் சி.செயபாரதன் விளங்குகிறார். சீதையின் பிற்கால வாழ்வை அடிப்படையாகக் கொண்டு சீதாயணம் என்னும் பெயரில் அருமையான நாடகத்தை உருவாக்கியுள்ளார். இராமனின் மறுபக்கத்தைப் பெரும்பாலோர் மறைத்திருக்க, அதனை வெளிக்கொணருவோர் வேறு கருத்துலகில் உழலுவதால் ஏற்கப்படாச் சூழலே உள்ளது. இந்நிலையில்…