தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 17/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 16/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி: 17/17   உயர்வுபெற வேண்டுமெனின் ஒவ்வொரு குலத்தினரும்அயர்வின்றிப் பலதுறைநூல் ஆயவேண்டும் அம்மானைஅயர்வின்றிப் பலதுறைநூல் அனைவரும் ஆராயின்உயர்ந்தோர்க்குத் தாழ்குலத்தோர் ஒடுங்குவரோ அம்மானைஉயர்வுதாழ்வு பேசினினி ஒறுப்புண்டாம் அம்மானை       (81) தமிழ்நாட்டெல்லை நன்கு வளம்பெற்ற நம்தமிழ் நாட்டெல்லைதென்குமரி முதலாகத் திருப்பதியாம் அம்மானைதென்குமரி முதலாகத் திருப்பதிநம் எல்லையெனில்இன்று சிலரதனை எதிர்ப்பதேன் அம்மானைஎதிர்ப்பவரை எதிர்த்தால்நம் இடம்பெறலாம் அம்மானை    (82) முன்னைநாள் தொட்டுமே மொய்த்துத் தமிழர்வாழ்சென்னை தமிழருக்கே சேரவேண்டும் அம்மானைசென்னை தமிழருக்கே…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 16/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 15/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி: 16/17   இன்னும் ஆரியப்பெயரை இயம்பாது பொருள்கட்குநண்ணுபெயர் களைத்தமிழில் நவிலவேண்டும் அம்மானைநண்ணுபெயர் களைத்தமிழில் நவிலவேண்டு மென்றிடினேதண்ணீர், சோறு எனும் தமிழைத் தாழ்த்துவதேன் அம்மானைதாழ்த்தியவர் ஆரியராம் தகையிலிகள் அம்மானை       (76)   தாயில்மொழியாம் தனித்தமிழ்தும் நாட்டிலுறுகோயிலில் நம்தமிழே குலவவேண்டும் அம்மானைகோயிலில் நம்தமிழே குலவவேண்டு மாமாயின்வாயில் வடமொழியின் வாழ்வென்ன அம்மானைசுந்தரரைச் சிவன்தமிழே சொல்லென்றான் அம்மானை       (77) ஆங்கிலத்திற் கடிமையாய் அல்லலுற்ற தமிழ்த்தாயைஈங்கினிமேல் தலைமகளாய்…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 15/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 14/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி: 15/17   இனித்தநறுந் தமிழ்மக்கள் இயன்றவரை தமக்குரியதனித்தமிழில் எழுதுவதே தகுதியுடைத் தம்மானைதனித்தமிழில் எழுதுவதே தகுதியுடைத் தாமாயின்தனித்தமிழ்ச் சொற்கள் சில தமிழிலில்லை யம்மானைஇல்லையென் றாற்புதிதாய் இயற்றவேண்டும் அம்மானை   (71) பழித்தற் கிடமின்றித் தமிழ்நாட்டுப் பண்புகளைஎழுத்தாளர் தமிழ்நடையில் எழுதவேண்டும் அம்மானைஎழுத்தாளர் தமிழ்நடையில் எழுதவில்லை எனினினிமேல்விழித்த தமிழ்மக்கள் விடுவரோ அம்மானைவிடமாட்டார் அன்னவரை வெறுத்திடுவார் அம்மானை       (72) வீசும் புகழொளிசால் வியன்தமிழர் எஞ்ஞான்றும்பேசும் போதாங்கிலத்தில் பேசுவதோ அம்மானைபேசும்போதாங்கிலத்தில் பேசவேண்…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 14/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 13/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி: 14/17 தமிழ்க்கிளர்ச்சி தனைவிரும்பித் தமிழ்மறவர் சிலர்முன்புதமிழ்தமிழ்செந் தமிழென்று தவித்தார்கள் அம்மானைதமிழ்தமிழ்செந் தமிழென்று தவித்தவரைக் கொடியசிலதமிழரே தண்டித்து வெறுத்தனர் அம்மானைவெறுத்தோர் எலாம்இன்று விரும்புகின்றார் அம்மானை       (66) உரிமை இனியும் தமிழர்கள் ஏமாற இயலாதால்தனியாக தமிழர்க்குத் தரவேண்டும் அம்மானைதனியாக தமிழர்க்குத் தரவேண்டின் இணைந்துள்ளஇனியநல் இந்தியத்தை எதிர்ப்பதாமே அம்மானைஎதிர்க்காது தமிழுரிமை ஈயக்கேள் அம்மானை       (67) தண்ணியசெந் தமிழ்நாடு தமிழர்க்கே அம்மானைதண்ணியசெந் தமிழ்நாடு தமிழர்க்கே யாமாயின்நண்ணு…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 13/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 12/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 13/17 பெண்களே நாட்டிற்குப் பெருவிளக்காம் ஆதலின்நம்பெண்களைத் தாழ்த்துவது பேதமையாம் அம்மானைபெண்களைத் தாழ்த்துவது பேதமையாம் என்றக்கால்பெண்புத்தி பின்புத்தி என்றதேன் அம்மானைஎனல்தவறு முன்னேற்றம் ஈயவேண்டும் அம்மானை       (61) சீரிய பண்புடைய செந்தமிழ்ப் பெண்மக்கள்கூரியநல் மதிநுட்பம் கொண்டவர்காண் அம்மானைகூரியநல் மதிநுட்பம் கொண்டவர்கள் என்பதைநீநேரிய சான்றொன்றால் நிறுவிடுவாய் அம்மானைசங்ககால ஒளவைமுதல் சான்றுபலர் அம்மானை       (62) காய்கனிகள் வளமிக்க கவின்தமிழ்நாடு ஓங்கநம்தாய்கட்கு வீரம் தழைக்கவேண்டும் அம்மானைதாய்கட்கு வீரம்…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 12/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 11/17 தொடர்ச்சி)       தனித்தமிழ்க் கிளர்ச்சி 12/17 பல்வகை இன்பம் படைத்துமே காக்கும்நற்செல்வம் தமிழர்க்குச் செந்தமிழே அம்மானைசெல்வம் தமிழர்க்குச் செந்தமிழேல் அத்தமிழ்க்கல்வி பலர்கற்காக் காரணம்என் அம்மானைஅறியாமை காரணம் இன்(று) அகன்றுவிட்ட தம்மானை       (56) அடுத்துமே பள்ளிதனில் அருங்கல்வி பெறாதோர்க்குப்படத்தினால் கல்விதனைப் பரப்பலாம் அம்மானைபடத்தினால் கல்வி பரவுமென்றாற் படத்தைநடத்துபவர் அதில்கருத்து நாட்டவேண்டும் அம்மானைநாட்டின் நம்நாட்டிற்கே நலமுண்டாம் அம்மானை       (57) ஏர்மிகு பல்வளங்கள் இயையத் தமிழர்வாழ்ஊர்தோறும் நூல்நிலையம்…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 11/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 10/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி : 11/17   தடமொழியாம் நம்முடைய தமிழ்ப்போர்வை தாம்போர்த்திவடமொழியைச் சிலமனிதர் வளர்க்கின்றார் அம்மானைவடமொழியைச் சிலமனிதர் வளர்க்கின்றா ரெனிலவர்கள்படையின்றிச் சூழ்ச்சியால்நம் பதவிகொள்வார் அம்மானைபதவிகொள இனிவிடின்நாம் பதராவோம் அம்மானை       (51) கடல்சூழும் இவ்வுலகில் கவினியநம் தமிழர்க்குஉடல்பொருள் ஆவிகள் ஓண்தமிழே அம்மானைஉடல்பொருள் ஆவிகள் ஓண்டமிழே யாமாயின்அடல்வேண்டும் தமிழை அழிப்பவரை அம்மானைஅடல்தவறாம் இனிஅவரே அழிந்திடுவார் அம்மானை       (52) தமிழ்நாட்டில் தமிழையே தாய்மொழியாக் கொண்டசிலதமிழரே முன்தமிழைத் தாழ்ந்ததென்றார் அம்மானைதமிழரே முன்தமிழைத் தாழ்ந்ததென்றா ராமாயின்தமிழ்க்…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 10/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 9/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 10/17 முடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரம்மானைமுடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரெனிற்பின்னர்அடிமையில் நம்தமிழர் ஆழ்ந்ததேன் அம்மானைஆழ்ந்ததோ ஒற்றுமையின் அகன்றதால் அம்மானை       (46) புலவர் அன்று தொடங்கி அருந்தமிழ்நற் புலவோர்கள்சென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ரம்மானைசென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ராமாயின்இன்று முதற்பெருமை இலாததேன் அம்மானைநன்று சொனாயினியும் நழுவவிடா ரம்மானை       (47) வரிசை பலசெய்து வண்தமிழ்நற் புலவோர்கள்அரசர் அடங்கிமிக அரசாண்டார் அம்மானைஅரசர்…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 9/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 8/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 9/17   திருமணம் காதலனும் காதலியும் கருத்தொன்றிக் கலந்ததமிழ்க்காதல் மணமேயக் காலத்தில் அம்மானைகாதல் மணமேயக் காலத்தி லாமாயின்ஈதல் கிழவனுக்கின் றேற்றதோ அம்மானைசாதல் கிழமணத்தின் சாலவுநன் றம்மானை       (41) நந்தமிழ் மக்கள்செய் நல்லதொரு திருமணத்தில்செந்தமிழினால் நிகழ்ச்சி செய்யவேண்டும் அம்மானைசெந்தமிழி னால்நிகழ்ச்சி செய்யவேண்டு மாமாயின்வந்தவட மொழிபோகும் வழியென்ன அம்மானைவந்தவழி யேபோகும் வடமொழிதான் அம்மானை       (42) தமிழர்தம் திருமணத்தில் தக்கமண நிகழ்ச்சிகளைத்தமிழ்ப்பெரியார் நிகழ்த்துதலே…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 8/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் :7 /17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 8/17   சமயம் புதுப்புதிய சுவைதன்னைப் புலனாக்கும் தமிழ்மொழிதான்மதிப்புள்ள சங்கநூல் மாண்புடைய தம்மானைமதிப்புள்ள சங்கநூல் மாண்பிருக்கப் பித்தானமதச்சண்டை நம்தமிழில் மண்டியதேன் அம்மானைமண்டியதவ் ஆரியர்செய் மயக்கத்தால் அம்மானை       (36) உய்வதனைக் கருதி உயர்ந்திடுநம் தமிழ்முன்னோர்தெய்வ வணக்கந்தாம் செய்துவந்தார் அம்மானைதெய்வ வணக்கந்தாம் செய்பவரை இன்றுசிலர்எய்வதுபோல் கடுமொழியால் எதிர்ப்பதேன் அம்மானைஎதிர்க்கலாம் ஆரியர்கள் ஏய்ப்பதையே அம்மானை       (37) இயற்கை வடிவுடைய இறைவனை முன்தமிழர்இயற்கை முறைக்கேற்ப ஏத்தினர்காண்…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 7/17

 (தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 6/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 7/17   அடையும் எளியவர்கட்(கு) அகமகிழ்ந்தே கொடுக்கும்கொடையிற் சிறந்தவர்நற் குணத்தமிழர் அம்மானைகொடையிற் சிறந்தவர்நற் குணத்தமிழ ராமாயின்படையின்றி அவர்பொருளைப் பறிக்கலாமே அம்மானைபறித்துபறித்(து) அயலார்கள் பரவினர்காண் அம்மானை       (31) மருந்தா யினும்தமிழ் மக்கள் பிறர்க்களித்துவிருந்தோம்பும் வேளாண்மை விரும்புபவர் அம்மானைவிருந்தோம்பும் வேளாண்மை விரும்பிமிகச் செய்திடினேவருந்திப்பின் வறுமையால் வாடாரோ அம்மானைஅவ்வருத்தம் அவர்கட்கோர் அணிகலமாம் அம்மானை       (32) பொன்னான நம்தமிழர், புல்லிய எண்ணமுடன்இன்னாமை செய்தார்க்கும் இனிமை…

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 6/17

(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 5/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 6/17   ஏர்திருந்து வளமுடைய இன்தமிழ்நாட் டினில்இன்றுசீர்திருத்தம் மிகப்பெரிதும் செய்யவேண்டும் அம்மானைசீர்திருத்தம் மிகப்பெரிதும் செய்யவேண்டும் என்றிடினச்சீர்திருத்த வழியொன்று செப்பிடுவாய் அம்மானைநாடகத்தால் சீர்திருத்தம் நாட்டவேண்டும் அம்மானை       (26) தமிழர் நாகரிகம் நாகரிகத் தினைப்பெரிதும் நாடுகின்ற இவ்வுலகில்நாகரிகத் திற்சிறந்தோர் நந்தமிழர் அம்மானைநாகரிகத் திற்சிறந்தோர் நந்தமிழ ராமாயின்நாகரிகம் எதுவென்று நவின்றிடுவாய் அம்மானைநயமான நற்குணமே நாகரிகம் அம்மானை       (27) விருந்து புறத்திருக்க விலாப்புடைக்க உண்ணாநம்அருந்தமிழ்…