தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 2/2 : இரா.பி.சேது(ப்பிள்ளை)
[தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 – இரா.பி.சேது(ப்பிள்ளை)(தொடர்ச்சி] தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 2/2 இன்னும், இந் நாட்டைத் தந்தை நாடென்று கருதும் பொழுது, அத் தந்தையின் மக்களாய்ப் பிறந்த நமது உரிமை, மனத்தில் முனைந்து தோன்றுவதாகும். இவ்வுரிமைக் கருத்து உள்ளத்தைக் கவரும்பொழுது வீரம் கிளம்புகின்றது. தாயை அன்பின் உருவமாகவும், தந்தையை வீரத்தின் வடிவமாகவும் கருதிப் போற்றுதல் தமிழ் வழக்காகும். அந்த முறையில் தமிழ்நாட்டைத் தாய் நாடு என்று நினைக்கும் பொழுது அன்பினால் இன்பம் பிறக்கும்; தந்தை நாடு …
தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 – இரா.பி.சேது(ப்பிள்ளை)
தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 இவ்வுலகில் முன்னணியில் நிற்கும் நன்னாடுகளெல்லாம் தமது தாய்மொழியைத் தலைக்கொண்டு போற்றுகின்றன. தமிழ்நாட்டில் சில காலத்திற்கு முன்னர் அந்நிய மொழிகளில் பேசுவதும் எழுதுவதும் அறிவுடைமைக்கு அழகென்றும், தாய்மொழியைப் புறக்கணிப்பது தவறன்றென்றும் அறிவாளர் கருதுவாராயினார். ஆயினும், இப்பொழுது அத்தகைய கொள்கைகள் அகன்று ஒழிய, ஆர்வம் நிறைந்த தமிழ்மக்கள் தமிழ்த்தாயை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர். தமிழ்மொழியின் நயமறிந்த கவிஞரும் அறிஞரும் அம் மொழி பயிலும் தமிழகத்தை அன்பு ததும்பும் இன்ப மொழிகளாற் போற்றும் அழகு எல்லை யற்ற இன்பம் தருவதாகும். …
தனித்தமிழ் இயக்கவிழா, மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் இயங்கும் ‘செந்தமிழ் நாடு’ என்னும் அமைப்பு தனித்தமிழ் இயக்கவிழாவை முனைவர் செம்பியன் தலைமையில் நடத்தியது. தங்க.முருகதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். புதுச்சேரித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் ‘தனித்தமிழ் இயக்கத்தின் தேவை’ என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். முனைவர் கலைவாணி பெற்ற நுாற்பரிசுக்காக அவர் பாராட்டப்பெற்றார். முனைவர் க.தமிழமல்லன் அவர்க்குக் கேடயம் பரிசளித்தார். இறுதியில் சுரேசுக்குமார் நன்றி கூறினார். செயலர் முனைவர் தமிழ்வேலு, முனைவர் சீ. இளையராசா, முனைவர் ச.அருள், புரவலர் கி.கலியபெருமாள் முதலியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.