புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.23-28
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.21-22 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 4.தலைமக்கட் படலம் 23. மாரி போற்பொரு ளீந்துமே தாய்மொழி வளர்த்த சேர சோழபாண் டியரெனத் தமிழர்கள் செப்ப வீர ராகவும் புலவர்க ளாகவும் வெருவாச் சூர ராகவும் விளங்கினா ரிவர்வழித் தோன்றல். 24. அன்ன மூவருந் தன்னின்கீ ழன்னசிற் றரசர் தன்னை யேற்படுத் தியல்பொடு தமிழகந் தன்னைப் பன்னு நூற்றுறை பழுத்தநற் பழந்தமிழ்ப் புலவர் சொன்ன சொற்படி…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.17-22
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3. 11-16 தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 4. தலைமக்கட் படலம் 17. இன்ன போலவே கிழக்குநா டென்னுமவ் விடத்திற் கன்னை போவோ ரின்புடைத் தமிழ்மகன் தன்னை மன்ன னாக்கினன் அன்னனும் வண்டமிழ் வளர்த்தான் இன்ன வன்மர பெழுந்தரே யிசையுடைச் சோழர். 18. ஓகை யோடவர் வானினுங் கொடுமுடி யுயர்ந்த நாகை மாநகர் தனிலினி திருந்துநா ணாளும் ஈகை யோடுசெங் கோலற முதலிய வெவற்றும் வாகை…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.11-16
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.6-10 தொடர்ச்சி) இராவண காவியம்1. தமிழகக் காண்டம் 4. தலைமக்கட் படலம் 11. ஈங்குபல் லாண்டு செல்ல விருந்தமி ழகத்தில் வாழும் ஓங்குநல் லறிவு வாய்ந்த யுயர்தமிழ் மக்க ளெல்லாம் தாங்குநா னிலத்த ராகித் தனித்தனி வாழ்தல் நீத்துத் தேங்குமோர் குடையி னீழற் றிகழ்ந்திட மனக்கொண் டாரே. மாபெருந் தலைவன் 12. தண்டமி ழகத்தை முற்றுந் தனியர சோச்சத் தாழ்வில் திண்டிற லொழுக்க மேன்மை திறம்பிடா நீர்மை மேய …
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4. 6-10
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3. 1-5 தொடர்ச்சி) இராவண காவியம்1. தமிழகக் காண்டம் 4. தலைமக்கட் படலம் 6. ஏந்திய செல்வ மோங்கு மிரும்புனல் மருதந் தன்னில் வாழ்ந்தவே ருழவ ரோங்க வருமுதற் றலைவர் முன்பு போந்தவ னரணந் தங்கிப் பொருள்வளம் பொலியக் காத்து வேந்தனென் றானா னப்பேர் மேவினார் வழிவந் தோரும். 7. கடல்கடந் தயனா டேகிக் கலனிறை பொருள ராகி மடலுடைத் தாழைச் சேர்ப்பின் மணலுடை நெய்தல் வாழும் மிடலுடை நுளையர்…
புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.1-5
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.21-26 தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 4. தலைமக்கட் படலம் அறுசீர் விருத்தம் 1. குறிஞ்சியி லிருந்து முல்லை குறுகிப்பின் மருத நண்ணித் திறஞ்செறி வடைந்த பின்னர்த் திரைகடல் நெய்தல் மேவி மறஞ்சிறந் தயனா டேகி வணிகத்தாற் பொருணன் கீட்டி அறம்பொரு ளின்ப முற்றி யழகொடு வாழுங் காலை; 2. தங்களுக் குள்ளே தங்கள் தலைவரைத் தேர்ந்தெ டுத்தாங் கங்கவ ராணைக் குட்பட் டச்சமொன் றின்றி யன்னார் …