(இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்! – தொடர்ச்சி) திரைப்படங்களின் துவக்கத்தில் திருக்குறள் தேவை! திருவள்ளுவர் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் அனைவரும் உணர முதலில் இந்திய நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் திருவள்ளுவர் திருநாள் தேசியப் பெருநாளாகக் கொண்டாடப்பட வேண்டும்; திருவள்ளுவர் பிறந்த நாளுக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என வலியுறுத்தினார் பேரா. இலக்குவனார். மகாவீரர் போன்றவர்களுக்கு ஒன்றிய அரசு  இந்தியா முழுமையும் விடுமுறை விட்டுள்ளதால் இதனையும் நடைமுறைப்படுத்தலாம். இதன் மூலம் அனைத்து மக்களும்  திருக்குறளின் அருமை பெருமைகளை அறியச் செய்ய வேண்டும். பேரா.இலக்குவனார் தமிழ் உரிமைக்கு…