வளர்த்திடுவீர் செந்தமிழை! – இலக்கியன்

வருக இன்றே! எல்லாரும் எழுதுகின்றார் பேசு கின்றார் இதுவரைக்கும் நந்தமிழ்க்கோ ஆட்சி யில்லை வல்லவராம் வாய்ப்பேச்சில் எழுத்தில், ஆய்வில் வளர்ப்பதுவோ தம்பெருமை, வருவாய்க் காகச் செல்வரெங்கும் வண்டமிழைப் புகழ்வர் எங்கும்! செழித்ததுவோ செந்தமிழும்! முனைவ ரெல்லாம் பொல்லாரே! காசுக்கே வாழு கின்ற போலிகளே! இவராலே தமிழா வாழும்? முனைவரென்ற பேராலே பல்லோர் உண்டு முன்வந்து தமிழ் வளர்க்க யாரு மில்லை தினமணியில் கட்டுரைகள் எழுதிச் செல்வார் திணையளவும் தமிழ்த்தொண்டில் நாட்ட மில்லார் வினைத்தூய்மை வினைத்திட்பம் கற்றி ருந்தும் விளையாட்டாய் இருக்கின்றார் பயனே இல்லார்! பனைமட்டைச்…

இன்பத் தமிழினிற் பாடு! – புலவர் பொதிகைச்செல்வன்

யாழெடு யாழெடு கண்ணே! – யாழில் இங்கே இசைத்திடோர் பண்ணே! ஊழிடு துன்பம் பறக்க – நெஞ்சில் ஓங்கியே இன்பம் சிறக்க –             (யாழெடு) வேயின் குழலிசை யோடு – இள வேனிற் குயிலெனப் பாடு! நோயின் துயரெலாம் ஓட – உயர் நோக்கமும் ஆக்கமும் கூட –           (யாழெடு) இன்பத் தமிழினிற் பாடு! – இனம் ஏற்ற முறத்தினம் நாடு! அன்னைத் தமிழ்த்திரு நாடு – நலம் ஆர்ந்திடவே வழி தேடு! –         (யாழெடு) நற்றமிழ் கற்றுநீ தேய்வாய்! – பாரில் நம்மினத்…

எது பொங்கல்? – பாவலர் அன்பு ஆறுமுகம்

வள்ளுவனார் வகுத்தளித்த இன்பப் பொங்கல் வாழ்வினிலே வெற்றிபெற அன்புப் பொங்கல் தெள்ளுதமிழ் நாட்டினிலே எழுச்சிப் பொங்கல் தேமதுர மொழிபரப்பும் உணர்வுப் பொங்கல் உள்ளுகின்ற சிந்தையெல்லாம் வெற்றிப் பொங்கல் ஓதுவது திருக்குறளே அறிவுப் பொங்கல் கள்ளமில்லா உள்ளந்தான் அமைதிப் பொங்கல் கலைகளினை வளர்ப்பதுவே மகிழ்வுப் பொங்கல்! ஆற்றலினை வளர்ப்பதுதான் வாழ்க்கைப் பொங்கல் ஆணவத்தை அழிப்பதுதான் உயர்வுப் பொங்கல் போற்றுவது பெரியோரை கடமைப் பொங்கல் போலிகளை வேரறுத்தல் கல்விப் பொங்கல் மாற்றத்திற்கு வேண்டும்மறு மலர்ச்சிப் பொங்கல் மடமையிருள் ஒழிப்பதற்கு நெருப்புப் பொங்கல் போற்றுவது தாய்மொழியை, பக்திப் பொங்கல்…