ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1201-1210) – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1191-1200) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (திருவள்ளுவர், திருக்குறள்,)  காமத்துப்பால் 121. நினைந்தவர் புலம்பல் 121. கள்ளைவிட இனிது காதல். (1201) 122. பிரிந்தாலும் நினைத்தால் இனியது காதலே! (1202) 123. வருவதுபோன்ற தும்மல் வரவில்லையே! அவரும் நினைப்பவர்போல் நினைக்கவில்லையோ? (1203) 124. என் நெஞ்சில் காதலர்! அவர் நெஞ்சில் நானோ?(1204) 125. அவர் நெஞ்சுள் வரவிடாதார், எம் நெஞ்சுள் வர நாணவில்லையா?(1205) 126. அவருடனான நாளை நினைப்பதாலே வாழ்கிறேன். (1206) 127. மறக்காதபோதே பிரிவு சுடுகிறதே! மறந்தால் … ?…

திருக்குறள் அறுசொல் உரை : 121. நினைந்தவர் புலம்பல்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால்  15.கற்பு இயல்  நினைந்தவர் புலம்பல்    இருவரும் கூடிப்பெற்ற இன்பத்தைப், பிரிவினில் நினைந்து புலம்புதல்.   (01-02 தலைவன் சொல்லியவை)  உள்ளினும், தீராப் பெருமகிழ் செய்தலால்,       கள்ளினும், காமம் இனிது. காதலை, நினைத்தாலே இனிக்கும்; கள்ளைவிடவும், காதலே இனிக்கும்.   எனைத்(து)ஒன்(று) இனிதேகாண், காமம்;தாம் வீழ்வார்       நினைப்ப, வருவ(து)ஒன்(று) இல். காதலியை நினைத்தாலே துன்பம் வாராதே; காதல்தானே இனிது.   [03-10 தலைவி…