தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் நிலத்தடி நீர்மட்டம் மளமளவெனச் சரிந்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.  தேவதானப்பட்டி, அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிகளில் பருவமழையாகப் பொழிந்த கோடைமழையானது பல ஆண்டுகளுக்குப் பின்னர் பொழிந்ததால் அப்பகுதிகளில் உள்ள கிணறுகள், ஏரிகள், நீர்நிலைகள் என அனைத்தும் நிரம்பி வந்தன. இந்நிலையில் அளவுக்கு அதிகமாகப் பெய்த கன மழையால் நீர்நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்தது. இருப்பினும் போதிய வாய்க்கால் அமைக்கப்படாதது, குளங்கள் கவர்வு(ஆக்கிரமிப்பு), குளத்தில் பரவலாக உள்ள கருவேல மரங்கள் இவற்றால் நீர்அதிக…