தேவதானப்பட்டிப் பகுதியில் களமாக மாறிவரும் பாலங்கள் தேவதானப்பட்டிப் பகுதியில் பாலங்கள் சாலைகள் ஆகியவை களமாக மாறிவருகின்றன. தேவதானப்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையால் வானம் பார்த்தபூமிப் பகுதியில் எள், தட்டாம்பயிறு, உளுந்தம்பயறு, சோளம் போன்றவற்றைப் பயிரிட்டனர். தற்பொழுது அவை அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அறுவடை செய்யப்படும் கூல(தானிய)வகைகளைப் பறித்து அவற்றைக் காயவைத்து அதன்பிறகு அடித்து அல்லது மாடுகளை வைத்து மிதித்துப் பயிர்களை தனித்தனியாகப் பிரிப்பார்கள். அதன்பின்னர் காற்று வரும் திசையை நோக்கி முறம் போன்ற பொருட்களால் எடுத்து வீசும்போது…