ஆலையின் சங்கேநீ ஊதாயோ? மணி ஐந்தான பின்னும் பஞ்சாலையின்… காலைமுதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே, வேலை செய்தாரேஎன் வீட்டை மிதிக்கவே ஆலையின் சங்கே…. மேலைத் திசைதனில் வெய்யிலும் சாய்ந்ததே வீதி பார்த்திருந்தஎன் கண்ணும் ஓய்ந்ததே மேலும் அவர்சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே விண்ணைப் பிளக்கும்உன் தொண்டையேன் காய்ந்ததே ஆலையின் சங்கே… குளிக்க ஒருநாழிகை யாகிலும் கழியும் குந்திப்பேச இரு நாழிகை ஒழியும் விளைத்த உணவிற்கொஞ்ச நேரமும் அழியும் வெள்ளி முளைக்குமட்டும் காதல் தேன் பொழியும் ஆலையின் சங்கே…