(பூங்கொடி 18 – கவிஞர் முடியரசன்: இருவகைப் பூங்கா – தொடர்ச்சி) பூங்கொடி 4. படிப்பகம் புக்க காதை இயற்கைக் காட்சிகள் நங்கையும் தோழியும் களிமலர்ச் சோலையுள் தங்கிய எழில்எலாம் தனித்தனி கண்டனர்; தாமரைக் காட்சி செங்கதிர்ச் செல்வன் வெங்கதிர் புகுதாப் பொங்கிய நிழல்செறி பூம்பொழிற் கயத்துள் அடுத்தஓர் இரவலன் அகக்குறிப் புணர்ந்து    5 கொடுத்தலால் மகிழ்ச்சி கூர்முகம் நோக்கி மகிழ்வால் விரியும் வள்ளல் மனம்போல் அகவிதழ் முறுக்கவிழ்ந் தலர்ந்த தாமரை இலைசூழ் மலர்கள் எழிலினைப் பாராய்! ஊடல் கொண்ட ஒண்டொடி முகம்போல்     10…