இலக்கிய யானைகள் எட்டு! – பு.சீ. கிருட்டிணமூர்த்தி

ஒவ்வொரு பாட்டிலும் எட்டு யானைகள்    நெல்லையைச் சார்ந்த வடிவேற் கவிராயர் என்பவர் இலங்கையில் இருந்தபோது, யாழ்ப்பாணம் நமச்சிவாய(முதலியார்) என்பவர், யாழ்ப்பாணம் திருவானைக்கோட்டையில் கோயில் கொண்டுள்ள சுப்பிரமணியர் மீது ஒரு கோவை பாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க வடிவேற் கவிராயர் கோவையைப் பாடி முடித்துக் கொடுத்ததற்காக, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் ஒரு பாராட்டு விழா நடந்தப்பட்டது. அப்பாராட்டு விழாவில், இவரைச் சோதிக்க விரும்பிய ஒரு புலவர், ஒவ்வொரு பாட்டிலும் எட்டு யானைகள் வருமாறு சிவபெருமான் மீது பாடல் பாடவேண்டும் என்றார். அதற்கு…

பொங்கல் வாழ்த்து

  பாரினில் எங்கும் மக்கள்   பலநலம் பெற்று வாழ சீரிய வழியில் எல்லாம்   சிறப்புகள் மேன்மே லோங்க மார்கழித் திங்கள் சென்று   மலர்ந்த தைத்திங்கள் நாளில் ஆர்வமோ டளித்தேன் இந்த   அணிமிகு பொங்கல் வாழ்த்தை! – புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி புள்ளியியல் அலுவலர்(ஓய்வு) தலைவர், இந்திய அரசின் மக்கள் கல்விநிறுவனம் திருவொற்றியூர் பாரதிப்பாசறை துணைத்தலைவர், சோழர் கலாலயம், இணைச்செயலர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்