pongal vaazhthu04

பாரினில் எங்கும் மக்கள்

  பலநலம் பெற்று வாழ

சீரிய வழியில் எல்லாம்

  சிறப்புகள் மேன்மே லோங்க

மார்கழித் திங்கள் சென்று

  மலர்ந்த தைத்திங்கள் நாளில்

ஆர்வமோ டளித்தேன் இந்த

  அணிமிகு பொங்கல் வாழ்த்தை!

புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி

புள்ளியியல் அலுவலர்(ஓய்வு)

தலைவர், இந்திய அரசின் மக்கள் கல்விநிறுவனம்

திருவொற்றியூர் பாரதிப்பாசறை

துணைத்தலைவர், சோழர் கலாலயம்,

இணைச்செயலர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்