தேனி மாவட்டத்தில் பேணுகையின்றிக் காணப்படும் பொதுப்பணித்துறை கட்டடங்கள் தேனிமாவட்டத்தில்; பொதுப்பணித்துறைக்குச் சொந்தமாக அரசு கட்டடங்கள் மிகுதியாக உள்ளன. வைகை அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், சிறப்பு விருந்தினர்கள், அமைச்சர்கள், அரசு உயர்அதிகாரிகள் தங்குவதற்குத் தங்கும் விடுதிகள் ஏராளமாக கட்டப்பட்டுள்ளன. இக்கட்டடங்கள் வைகை அணையில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கட்டடங்கள் ஆகும். ஒவ்வொரு கட்டடங்களிலும் விருந்தினர்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளும் இயற்கை எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர இக்கட்டடங்களில் இருந்து மேற்குமலைத்தொடர்ச்சியை கண்டு களிப்பதற்கும் வைகை அணை பார்த்து களிப்பதற்கும் ஏற்ற வகையில் இவை கட்டப்பட்டுள்ளன….