துளிப்பாக்கள் – தமிழ் சிவா

துளிப்பாக்கள்   வற்றாது ஓடும் இளைஞர்கள் சங்கமிக்கும் கூவம் மதுக்கடை!   துருத்தி நின்றன எலும்புகள் இறந்து கிடந்தது ஆறு!   நச்சு நாசியைப் பிளக்க கலங்கிக் கையற்று நின்றது காற்று!   குடிசைக்குள் புகுந்த அமைச்சர் கண்கலங்கினார் அடுப்புப்புகை!   அடுத்த அறிவிப்பு மதுக் கடையிலேயே இறப்பவர்க்குப் பிதைக்கப் பணம் இலவசம்!   எந்தக் கடவுளிடமும் சிறைமீட்க வேண்டுமென்று யாகம் நடத்துவதில்லை ஐந்தறிவுகள்!   வழக்கில் தோல்வி பயந்து வாழ்ந்தன பேருந்துகள்!   காக்கும் கடவுள் உடைந்து போனார் தீர்ப்பு நாளன்று!  …

மதுக்கடைகளை மூடுமாறு முதல்வர் வீடுமுன் அறப்போர்! – நந்தினி அறிவிப்பு

“நம்மை வீழ்த்தி என்றும் அடிமைகளாக மாற்றுவதற்காகச் சூழ்ச்சிக்காரர்கள் தீட்டிய சதியால் கொண்டுவரப்பட்ட மதுக்கடைகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற உணர்வு தமிழகம் முழுவதும் கொளுந்து விட்டு எரியத்தொடங்கிவிட்டது. இந்த நெருப்பை ஆட்சியாளர்களால் அணைத்துவிட முடியாது. அரசின் மதுக்கடைகளுக்கு முடிவுகட்டும் நேரம் நெருங்கிவிட்டது. அதற்கான இறுதிப் போர்தான் 24.12.2013 அன்று காலை 9 மணிமுதல் முதல்வர் செயலலிதா அவர்களின் போயசு தோட்டம் வீட்டின் முன்பாகத் தொடங்கவுள்ள காலவரையற்ற உண்ணா நோன்பு அறப்போர். அனைவரும் இந்த அறப்போரில் பங்கேற்க வாருங்கள்.துணிவும் வீரமும் மிக்க இளைஞர்களே! இளைய தலைமுறை…