தேவதானப்பட்டிப் பகுதியில் கோடைக் காலத்திற்கு முன்பே வறண்ட மேய்ச்சல் நிலங்கள் தேவதானப்பட்டிப் பகுதியில் கோடைக் காலத்திற்கு முன்பே மேய்ச்சல் நிலங்கள் வறண்டு போனதால் கால்நடைகள் அடிமாடுகளுக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி முதலான சிற்றூர்களில் கால்நடைகளும், வேளாண்மையும் முதன்மைத் தொழிலாக உள்ளது. தற்பொழுது கோடைக் காலத்திற்கு முன்பே இப்பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலங்கள் வறண்டு பாலைவனம் போல் காணப்படுகிறது. இதனால் மேய்ச்சலுக்கு நிலம் இல்லாததால் காய்ந்த சருகுகளையும், காய்ந்த புற்களையும் கால்நடைகள் உணவாக உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்…