வளைகுடா வானம்பாடியின் சித்திரைக் கூட்டம்

குவைத்து வளைகுடா வானம்பாடியின் திங்கள் கூட்டம்,  அன்னையர்  நாள் சிறப்பு நிகழ்வாக சித்திரை 27, தி.பி.2045 10-05-2014 அன்று காலை 10 மணிக்கு,  பஃகாகில் சரவணபவன் உணவகத்தில் மிகச் சிறப்பாக நடந்தது. வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. செல்வி அனுசுரேசு திருக்குறள் கதை சொல்ல, கூட்டத்திற்கு,  பொறியாளர் நடராசன், பொறியாளர்  முனைவர் பால் மனுவேல், பொறியாளர் திரு சேகர் அவர்கள்  முன்னிலையேற்றார்கள். விழாவில்  கவிஞர்கள், பாடகர்கள்,  அன்னையர் நாளைச்  சிறப்பித்து, கவிதை, சிறப்புச் சொற்பொழிவு, பாடல் எனத் தங்களின் படைப்புகளை வழங்கினார்கள். விழாவில்…

வளைகுடா வானம்பாடிகளின் ஏப்பிரல் கூட்டம்

      குவைத் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா 11-04-2014 வெள்ளி அன்று மாலை 5.00 மணி முதல் மங்கப் விழா அரங்கில் மிகச்சிறப்பாக நடந்தது. விழாவிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக  திரு.நீலமணி, திரு.பால் மனுவேல் திரு. அரவணைப்பு இளங்கோவன் ஆகிய மூன்று முனைவர்கள் கலந்துக்கொண்டு பெருமை சேர்த்தனர். வழக்கம் போல் மண்ணிசைப்பாடல்கள், மெல்லிசைப்பாடல்கள், தனிக்கவிதை வாசித்தல், சிறப்புச் சொற்பொழிவுகள் எனப் பல நிகழ்வுகளை ஆண்களும், பெண்களும் சேர்ந்து மிகச் சிறப்பாகச் செய்தனர். நிகழ்ச்சிக்குப் பல அமைப்பின் நண்பர்களும், குவைத்…