விடுதலைப் புலி பிறையாளனுக்கு உதவ முன்வருக!

நாட்டினருக்காகத் தன்னை ஒப்படைத்த விடுதலைப் புலி பிறையாளனுக்கு உதவ முன்வருக!     சன்னங்களையும், தகடுகளையும் தன் உடலில் தாங்கி வேதனையில் வாடும் முன்னாள் போராளி பிறையாளனின் வாழ்வு செழிக்குமா? தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை களமுனைப் போராளியாகப் பல களம் கண்டவர்தான் பிறையாளன் என்றழைக்கப்படும் நல்லையா இயேசுதாசன். இலங்கைப்படையினரின் அடக்குமுறைகளுக்கும், தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக விடுதலைப் போராட்டத்தில் இணைந்து தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தன்னுடைய வாழ்வை  ஒப்படைத்தவர்களில் பிறையாளனும் ஒருவர்.   தமது வாழ்க்கையை ஈகம் செய்து, உணர்வுகளையும்,…

பெருஞ்சிக்கல் உருவெடுக்கும் புத்தர் சிலை

பெருஞ்சிக்கல் உருவெடுக்கும் புத்தர் சிலை வடக்கு, கிழக்கில் பௌத்த மேலாதிக்கத்தை நிறுவும் வகையில் படைத்தரப்பினரது செயற்பாடுகள் அமைந்து வருவதாகவும் இதற்கு மாறி மாறி வரும் அரசாங்கங்கள் உறுதுணை புரிந்து வருவதாகவும் கடும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றசெய்தியானது பல்வேறு வகைகளில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து வருகின்றது. (இனப்படுகொலைப்) போர் நிகழ்ந்த காலத்தை விடவும் தற்போது பல பகுதிகளிலும் திடீர் திடீரென புத்தர் சிலைகள் முளைத்து வருகின்றன. வவுனியாவிலிருந்து ‘ஏ–9’ வழியாக யாழ்ப்பாணத்தை நோக்கிச்…