தோழர் தியாகு எழுதுகிறார் : எங்கள் பெயரால் செய்யாதே!

(தோழர் தியாகு பகிர்கிறார் : தாய்மண்ணை விட்டகலோம்!- மகமுது அப்பாசு – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! எங்கள் பெயரால் செய்யாதே! எங்கள் பெயரால் செய்யாதே!(NOT IN OUR NAME! NOT IN OUR NAME!) ஐயா நக்கீரன் எழுதியதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்: “இசுரேல் என்ற நாட்டை ஐக்கிய நாடுகள் சபை 1948 இல் அங்கீகரித்தது. 2000 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை இழந்து நாடோடிகளாகவும் அடிமைகளாகவும் நாசிகளது இனப்படுகொலைக்கு உள்ளாகி உலகம் முழுதும் சிதறிக் கிடந்த யூதர்கள்தான் இசுரேலைக் குருதி சிந்தி உருவாக்கினார்கள்.” 1948ஆம்…

தோழர் தியாகு பகிர்கிறார் : தாய்மண்ணை விட்டகலோம்!- மகமுது அப்பாசு

(தோழர் தியாகு பகிர்கிறார் : துயர்துடைக்க மகிழன் வேண்டுகோள்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தாய்மண்ணை விட்டகலோம்!பாலத்தீனத் தலைவர் மகமுது அப்பாசின் உறுதி! காசா முனையில் வாழும் பாலத்தீன மக்கள் மீது இசுரேல் தொடுத்துள்ள போர் ஓய்ந்த பாடில்லை. இந்த நிலையில்தான் கெய்ரோவில் பன்னாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாடு நடந்துள்ளது. இது கெய்ரோ அமைதி மாநாடு என்று அழைக்கப்படுகிறது. ஐநா பொதுச்செயலர் உள்ளிட்ட பன்னாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன் பிரான்சு, செருமனி முதலான வல்லரசுகளின் தலைவர்களை மட்டும் காணவில்லை. இசுரேலின் படையெடுப்புக்கு…

தோழர் தியாகு பகிர்கிறார் : துயர்துடைக்க மகிழன் வேண்டுகோள்

(தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 2/2 – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! சற்றே நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதுகிறேன். தலைநகர் சென்னையைப் புரட்டிப் போட்ட புயல் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் எழுதுகிறேன். ததேவிஇ அமைப்புச் செயலாளர், நம் அனைவருக்கும் அன்புத் தோழர் மகிழன் விடுத்துள்ள வேண்டுகோளை உங்களோடு பகிர்கிறேன். நம் தோழமையின் இடுக்கண் களைக ! – தோழர் தியாகு விரிபுயல்(மிக்குசாம்) பாதிப்பின் துயர்துடைக்கக் கைகொடுங்கள்! அன்பிற்கினியோரே, வணக்கம் ! நான் மகிழன். தென்சென்னையிலிருந்து…

தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 2/2

(தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 1/2 – தொடர்ச்சி) ஏன் இந்தப் புத்தகம்? 2/2 1950இல் ஆரம்பித்த நீண்ட நெடிய போராட்டத்தின் தொடர்ச்சியாக, 1990இல் அன்றைய இந்தியத் தலைமையமைச்சர் வி.பி. சிங்கின் அரசு மண்டல் ஆணைய அறிக்கையின் பரிந்துரையின் பேரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு 27% பி.பி.வ.(OBC) இடஒதுக்கீடு வழங்கிய போது, அதனை எதிர்த்த உயர் சாதியினரின் போராட்டம் நாட்டை உலுக்கியது. நூற்றுக்கணக்கானோர் தம்மை நெருப்புக்குப் பலிகொடுத்து, பி.பி.வ.(OBC) மக்களின் இடஒதுக்கீட்டிற்குத் தடை போட முயன்றனர். அதைத் தமது மேலாதிக்கத்திற்கு…

தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 1/2

(தோழர் தியாகு எழுதுகிறார் : சென்னை-‘ஐ’ வந்தாலும் வரலாம், காங்கிரசு-‘ஐ’ வந்து விடக் கூடாது! – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! பொ.ந.பி. (EWS) இட ஒதுக்கீட்டுச் சிக்கல் குறித்து முன்பே எழுதியும் பேசியும் உள்ளேன். இது குறித்து உச்ச நீதிமன்ற நீதியர் இரவீந்திர பட்டு வழங்கிய தீர்ப்பு -சிறுபான்மைத் தீர்ப்புதான் என்றாலும் மிகச் சிறப்பான ஒன்று. இந்தத் தீர்ப்பைத் தமிழாக்கம் செய்து அதன் சில முகன்மைப் பகுதிகளை தாழி மடலில் (தாழி 37, 38) வெளியிடவும் செய்தேன். இரவீந்திர பட்டு தீர்ப்பின் தமிழாக்கமும் இச்சிக்கல்…

தோழர் தியாகு எழுதுகிறார் : சென்னை-‘ஐ’ வந்தாலும் வரலாம், காங்கிரசு-‘ஐ’ வந்து விடக் கூடாது!

(தோழர் தியாகு எழுதுகிறார் : இன உரிமை இலட்சிய மாநாடு-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! நவம்பர் புரட்சி நாள் வாழ்த்து! சென்ற ஆண்டு இதே நவம்பர் புரட்சி நாளில்தான் தாழி மடல் எழுதத் தொடங்கினேன். இன்றும் அதே ஊக்கத்துடன் எழுத விரும்புகிறேன். உடல்நிலைதான் நலிந்துள்ளது. பெரிதாக ஒன்றுமில்லை. கண்வலிதான், ஆனால் காலையில் வந்து மாலையில் போவதாக இல்லை. மூன்று நாளாக வதைக்கிறது. இந்தக் கண்வலிக்கு ‘சென்னைக் கண் (மெட்ராசு-ஐ)’ என்ற பெயர் எப்படி வந்ததோ தெரியவில்லை. ஆனால் இந்தப் பெயரை வைத்து நடந்த ஒரு கூத்தை…

தோழர் தியாகு எழுதுகிறார் : இன உரிமை இலட்சிய மாநாடு

(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழில் படித்தவர்க்கே தமிழ்நாட்டில் வேலை! – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் – தஞ்சை மாநாடு நேற்று 10.10.2023 தஞ்சையில் தமிழ்நாடு பொதுவுடைமை இயக்கம் நடத்திய இன உரிமை எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினேன். மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் இன்றைய தமிழ்நாட்டு, இந்திய நாட்டு, பன்னாட்டுச் சூழலைப் புரிந்து கொள்ள உதவக் கூடும் என்பதால் அவற்றை ஈண்டு பகிர்கிறேன். –:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: இன உரிமை இலட்சிய மாநாடுதஞ்சை, 2023 அட்டோபர் 10தீர்மானங்கள் இசுரேலின் இனவழிப்புப் போரை…

தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழில் படித்தவர்க்கே தமிழ்நாட்டில் வேலை!

(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 3 – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தமிழில் படித்தவர்க்கே தமிழ்நாட்டில் வேலை! தமிழ்நாட்டில் தமிழைக் கல்விமொழி ஆக்குவதற்காக நீண்ட நெடுங்காலமாய்ப் பற்பல வகையிலும் போராடி வருகிறோம். ஆனால் நம் இலக்கை அடைய முடியவில்லை என்பது மட்டுமன்று. அது நம்மை விட்டு விலகி விலகிப் போய்க் கொண்டுமிருக்கிறது. கல்விமொழி என்றால் முதற்பயில்மொழியும் ஒரே பயிற்றுமொழியும் என்று பொருள். பொதுவாக உலகில் ஒவ்வொரு தேசமும் அதனதன் தேசிய மொழியையே –…

தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 3

(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 2 – தொடர்ச்சி) திலீபன் நினைவுப் பேருரை 3/3 : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு இந்த அறிவிப்பில் நேர்மை இருக்குமானால், இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவர வேண்டும். இலங்கையில் நடந்திருப்பது இனவழிப்பு. அதற்காக இராணுவ வகையிலும் அரசியல் வகையிலும் குற்றம் புரிந்தவவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களைக் கொண்டுபோய் நிறுத்த வேண்டும் என்று கடந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைப்…

தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 2

(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 1-தொடர்ச்சி) திலீபன் நினைவுப் பேருரை 2/3 : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு எல்லைப் பாதுகாப்பு என்பதைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். எத்தனையோ வகையில் தீர்த்துக் கொள்ளமுடியும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் மட்டும்தான் எல்லைச் சிக்கல் இருக்கிறதா? தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும எல்லைச் சிக்கல் இல்லையா? மராட்டியத்துக்கும் கருநாடகத்திற்கும் இல்லையா? இந்திய வடகிழக்கின் ஏழு சகோதரிகள் என்னும் ஏழு மாகாணங்களுக்கு இடையே இல்லையா? பாதுகாப்பு…

தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 1.

(தோழர் தியாகு எழுதுகிறார் : கல்வியுரிமைக் கோரிக்கை விளக்கம் – தொடர்ச்சி) திலீபன் நினைவுப் பேருரை: தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு கடல் கடந்து போனாலும் தமிழ் கடந்து போகாமல் தமிழ் மொழி, இன, தேச, உணர்வோடு வாழ்ந்து வரும் உலகத் தமிழர்களுக்கு நான் சார்ந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் முதலிலே வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். ஈகத்தின் இன்னொரு பெயர் திலீபன். என்றும் நினைவில் நிலைத்திருக்கும் திலீபனை நினைவுகூர்ந்து, தமிழீழ விடுதலைப் போரில் தம்மை ஆகுதி ஆக்கிக்கொண்ட பல்லாயிரம் மாவீரர்களையும்…

தோழர் தியாகு எழுதுகிறார் : கல்வியுரிமைக் கோரிக்கை விளக்கம்

(தோழர் தியாகு பகிர்கிறார் : பொய் பேசும் கன்னட இனவெறியர்கள்!, நலங்கிள்ளி – தொடர்ச்சி) கல்வியுரிமைக் கோரிக்கை விளக்கம் 1) வேண்டாம் பொதுத்தேர்வு(நீட்டு)! அனிதா முதல் செகதீசன், அவருடைய தந்தை வரை தமிழ்நாட்டில் 2017 தொடக்கம் கடந்த ஆறு ஆண்டுகளில் 17 உயிர்கள் நீட்டு தற்கொலைக்குப் பலியாகியுள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் அனிதா எடுத்த மதிப்பெண் 1200க்கு 1176. அனிதாவின் மருத்துவக் கல்விக் கனவு மெய்ப்பட இந்த மதிப்பெண் போதும். ஆனால் நாடுதழுவிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு என்னும் நீட்டு அவரது…