ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1231-1240)-இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1221-1230) தொடர்ச்சி)
ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!
திருவள்ளுவர்
திருக்குறள்
காமத்துப்பால்
124. உறுப்புநலன் அழிதல்
- பிரிந்தவரை எண்ணிக் கண்கள் மலருக்கு நாணின. (1231)
- பசலையும் அழும் கண்களும் காதலரின் அன்பின்மையைக் கூறும். (1232)
- கூடியபொழுது பருத்த தோள்கள் வாடிப் பிரிவை உணர்த்தின. (1233)
- துணைவரின் பிரிவால் தோள்கள் மெலிந்து வளையல்கள் கழன்றன. (1234)
- தலைவனின் கொடுமையை வாடிய அழகிய தோள் உரைக்கும்.(1235)
- காதலரைக் கொடியவர் என்பது பசலையினும் கொடியதே.(1236)
- அவரிடம் தோள்மெலிவைக் கூறிப் பெருமைப்படுவாயோ நெஞ்சே. (1237)
- தழுவலைத் தளர்த்தியதும் படர்ந்தது பசலை நெற்றியில் (1238)
- தழுவலிடையே காற்று புகுந்தாலும் பசலை கொள்கிறாளே இவள்.(1239)
- நெற்றியின் வாட்டத்தால் கண்களும் பசலை யடைந்தன.(1240)
Leave a Reply