chinnachamy03

சின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்புபாவாணர்

 

பண் – (நாதநாமக்கிரியை)

தாளம் – முன்னை

ப.

            தீக்குளித்தே யிறந்தான் – சின்னச்சாமி

தீக்குளித்தே யிறந்தான் – திடுக்கிடத்

 

து. ப.

            தாக்கும் இந்திவந்து தண்டமிழ் கெடுமென்று

தன்மானந் ததும்பியே தாங்கருந் துயர்கொண்டு

(தீக்)

 

உ.1

            ஆர்க்குஞ் சொல்லாமல்தன் அகத்தைவிட் டுச்சென்றே

அழகிய திருச்சியில் அமைகூடல் நிலையத்தில்

வார்த்தனன் கன்னெய்மேல் வைத்தனன் தீயும்பின்

வடிவொரு சுடரென வானவர் விருந்தெனத்

(தீக்)

 

2

            நாடென்றும் இனமென்றும் நம்புந்தன் மதமென்றும்

நானிலத்தே மாந்தர் நல்குவர் உடல்வேக

ஈடொன்று மில்லாமல் இனியதாய் மொழிக்கென்றே

ஈந்துநல் வலவுடல் இளமையில் உயர்வாகத்

(தீக்)

 

3

            வெந்தெரி யுடலெல்லாம் விளம்பறு வேதனை

விருவிருத் தேறினும் வீறுகொண் டேறென

எந்தமிழ் வாழ்கவே இந்தியே ஒழிகென

இறுதி வரைகூறி இதுவேநல் லாறெனத்

(தீக்)

 

 

4

            பைந்தமிழை முன்காட்டிப் பகைவ ரிடங்கொடுத்துப்

பணங்கொழுக் குந்தலைமைப் பண்பற்றபே ராசான்மார்

ஐந்தாம் வகுப்பே கற்றோன் அடைந்தபண் பாடுமின்றி

அஃறிணை யாயிருத்தல் அறிவாரெல் லாருந்தான் பார்

(தீக்)

 

5

            எருமைபோல் உணர்வின்றி என்றும்கீழ் அடிமையாய்

இருந்தேகும் தமிழாநீ இனியேனும் மடந்தீரப்

பெருமைபேர் எழுதிக்கல் பெருஞ்சின்னச் சாமிக்குப்

பிறைமாடக் கோயிற்கண் பெயராது நடவாராய்

(தீக்)

paavanar03

– ஞா. தேவநேயப் பாவாணர்,

இசைத்தமிழ்க் கலம்பகம் : பாடல் 195