(தோழர் தியாகு எழுதுகிறார் 237 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 13 தொடர்ச்சி)

நெ.ப.நி.(என்எல்சி) நிலப்பறிப்புக்கு எதிரான உழவர் போராட்டம் வெல்க!

(போராட்ட அமைப்பினரின் முழக்கங்கள்)

நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனமே!

1) உழவர்களிடம் நிலம் பறிப்பதைக் கைவிடு!

2) கைப்பற்றிய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கு!

3) நிலம் கொடுத்த உழவர்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்காவது நிலையான வேலை கொடு!

4) மூன்றாம் சுரங்கத் திட்டத்தைக் கைவிடு!

இந்திய அரசே!

1) புதைபடிவ எரிபொருளைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்று! புதிய சுரங்கம் தோண்டுவதை நிறுத்து! இப்போதிருக்கும் சுரங்கங்களையும் படிப்படியாக மூடு!

2) பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வால் சுற்றுச் சூழல் கெட்டுப் புவி வெப்பமாதல் வளர்ந்து கேடான விளைவுகளும் பேரழிவும் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்து!

3) புதுப்பிக்கவியலா ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களின் பயன்பாட்டைக் கூடுதலாக்கு!

4) புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டையும், கரியுமிழ்வையும், புவி வெப்பமாதலையும் கட்டுப்படுத்துவதற்கான பன்னாட்டு ஒப்பந்த நெறிகளை மதித்து நட!

5) இயற்கை வளங்கள் மீதான தமிழகத்தின் இறைமையை ஒப்புக்கொள்!

6) நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தையும், அனல் மின் நிலையத்தையும் முழுமையாகவோ பகுதியாகவோ தனியார் மயமாக்கும் முயற்சியை அறவே கைவிடு! இவற்றைத் தமிழ் நாட்டுடையாமையாக்கு!

தமிழ்நாட்டரசே!

1) நெ.ப.நி.(என்எல்சி)-இன் நிலப்பறிப்புக்குத் துணை போகாதே! போராடும் மக்கள் மீதான அடக்குமுறையைக் கைவிடு! பொய் வழக்குகளைத் திரும்பப் பெறு!

2) நெ.ப.நி.(என்எல்சி) நிலப்பறிப்பைத் தடுத்துச் சட்டமியற்று!

3) நெ.ப.நி.(என்எல்சி) முதலிய பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறச் சட்டமியற்று!

4) சுற்றுச் சூழலுக்கும் மக்கள் நலனுக்கும் பொருத்தமான சுரங்கக் கொள்கை வகுத்து அறிவித்து நடைமுறைப்படுத்து!

5) புதைபடிவ எரிபொருள், பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வு, புவி வெப்பமாதல் ஆகியவை குறித்து விழிப்புப் பெறு! மக்களிடம் விழிப்புண்டாக்கு!

6) நெ.ப.நி.(என்எல்சி) நிறுவனத்தைத் தமிழ் நாட்டுடமையாக்க இந்திய அரசிடம் வலியுறுத்து! தமிழ்நாடுச் சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்று!

7) தமிழ்நாட்டு இயற்கை வளங்கள் மீது தமிழ்நாட்டு மக்களின் இறைமையை நிலைநாட்ட அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய இந்திய அரசை வலியுறுத்து!

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 267