(தமிழ்ச்சொல்லாக்கம் 218 -227தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

228. தேசிய கீதம் – நாட்டுப் பாட்டு (1908)

பரலி ச. நெல்லையப்பர்

229. அஞ்சலி           –           கும்பிடல்

230. அதீதம்            –           எட்டாதது

231. அபிநயம்        –           கைமெய் காட்டல்

232. சம்மதம்          –           உடன்பாடு

233. சுதந்தரம்       –           உரிமை

234. கனிட்டர்        –           இளையவர்

235. நிருத்தம்        –           கூத்து

236. இரத்தம்          –           புண்ணீர்

237. விவாகம்         –           மணம்

நூல்   :           மார்க்கண்டேய புராணம் வசன காவியமும் அரும்பத விளக்கமும் (1909).

நூலாசிரியர்     –       உபயகலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுத முதலியார்.

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்