சவ்வாது மலைச் சிற்றூர்கள் – பல்லுயிர்ச்சூழல் – நினைவூட்டல்

 சவ்வாது மலைச் சிற்றூர்கள் – பல்லுயிர்ச் சூழல் – நினைவூட்டல் 15  ஆண்டிற்கு முன் வீட்டுக்கு முன் இரண்டு பெரிய வேப்ப மரமும், பெரிய வட்டக் கிணறும், மல்லிகைப் பூந்தோட்டமும்,  இருக்கும்; மழை பெய்தால்  இரவு முழுவதும் தண்ணீர் வாய்க்காலில் ஓடும்  ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். இப்படி ஒவ்வொருத்தருக்கும் தங்களுடைய ஊரைப்பற்றின பழைய  நினைவு இருக்கும். ஆனால், இப்பொழுது, இந்த இடம் அவ்வளவு பசுமையாக இருந்தது என்று சொன்னால் யாரும் நம்புவதில்லை. குறைந்தஅளவு பசுமையைக் கண்ணில் பார்ப்பதற்கும் துய்ப்பதற்கும் இருக்கிற கடைசிக் கட்ட வாய்ப்பு…

ஆங்காங்கு தமிழ் வகுப்புகள் – மு. இராமநாதன் உரை

ஆங்காங்கு தமிழ் வகுப்புகள்  தமிழ்க் கல்வி அறிவுரைஞர் மு. இராமநாதன் உரை   ஆங்காங்கு (Hongkong) தமிழ் வகுப்புகள் 11 ஆண்டுகளை நிறைவு செய்து 12ஆம் ஆண்டில் நடைபோடும் இந்த நல்ல நேரத்தில், இந்த வகுப்புகளைப் பற்றியும் அதற்கு முன்பாக இப்படியான வகுப்புகளின் தேவையைப் பற்றியும் சொல்லலாம் என நினைக்கிறேன்.  நான் ஆங்காங்கு பொறியியல் கலந்தாய்வு (ஆலோசனை) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். இந்த நிகழ்வு சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது நான் பணியாற்றி வரும் நிறுவனத்தில், கிழமைக்கு (வாரம்) ஒருநாள் பகல் உணவு…

மாநில அளவிலான கணிதத்திறன் போட்டி : தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

மாநில அளவிலான கணிதத்திறன் போட்டி தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்பு   திருச்சிராப்பள்ளி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம்சார்பில்மாநில அளவிலான கணிதத்திறன் போட்டிகள் நடந்தன. இதில் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றுத் தேர்வு எழுதினர். இப்போட்டிகளில்பங்கேற்றுத் தேர்வு எழுதியதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு நான்குபிரிவுகளில் பரிசுகள் வழங்குகின்றனர்.  இப்போட்டிகளில் தமிழகம்முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில்பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.  சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இருந்தும் தேவகோட்டைபெருந்தலைவர்மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளிதான் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. காலை 5.00 மணிக்கெல்லாம் தேவகோட்டையில் இருந்து கிளம்பி மாணவர்களைப் பேருந்துமூலம் திருச்சிக்கு ஆசிரியர்  அழைத்துச் சென்றார்.  இவ்வாய்ப்பு அரசு உதவி பெறும் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்குகிடைத்தநற்பேறுஆகும்.   இப்பள்ளித்தலைமையாசிரியர் சொக்கலிங்கம் கணிதத்திறன் போட்டிக்கான தேர்விற்கு மாணவ மாணவியரை ஆயத்தப் படுத்தினார்.   கண்ணதாசன், ஆகசுகுமார், சீவா, யோகேசுவரன், தனலெட்சுமி, பார்கவி இலலிதா, தனம், கார்த்திகா ஆகிய மாணவ, மாணவிகளை அவர்களது பெற்றோர்களுடன்திருச்சி அண்ணா கோளரங்கத்திற்கு அழைத்துச்சென்று தேர்வில் பங்குபெறச் செய்து அழைத்து வந்தனர்.  மாணவமாணவிகள்மிகுந்த ஆர்வமுடன் தேர்வு எழுதியதாகத் தெரிவித்தனர்.

அலைபேசிக்கணிமை 2016 – தமிழ்க்குறுஞ்செயலிகள் உருவாக்க மாநாடு

அன்புள்ள உத்தமம் உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்.  தை 22 & 23, 2047 / பிப் 5 & 6, 2016  ஆகிய  இருநாளும் உத்தமம் இந்தியக்கிளையின் சார்பாக செல்பேசிக் கணிமை 2016. – தமிழ்க்குறுஞ்செயலிகள் உருவாக்க மாநாடு – கருத்துரை வழங்கும் நிகழ்வு தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைபெற உள்ளதால் அனைத்து உத்தமம் உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.   செல்பேசிக் கணிமை 2016 குறுஞ்செயலி மாநாடு நிச்சயமாக அனைத்துப் பேராசிரியர்கள் – தமிழ்க் கணியன்கள்(மென்பொருள்) உருவாக்குநர்களுக்குப் பேரளவில் உதவியாக இருக்கும்.  தமிழில் கணியன்கள்(மென்பொருள்கள்) உருவாக்கினால் நிதி…

கைவிட முடியாத கனவு! – பா.செயப்பிரகாசம்

  தமிழீழம்- தமிழரின் கனவு. தமிழர் போராட்டம் தீராநதியென பெருக்கெடுத்து ஓடிய பின்னரும் விடுதலைக் கனவு மீதி இருக்கிறது. விடுதலையைக் காதலித்த எண்ணிக்கையற்ற போராளிகள் அதற்காக மடிந்தார்கள். எந்தக் கனவினைச் சுமந்து போராளிகள் இறக்கிவைக்காமல் நடந்தனரோ, அந்தக் கனவின் மீதி இன்னும் இருக்கிறது. புதைக்கப்படுவது என்பதினும் விதைக்கப்படுவோராய் போராளிகள் ஆகியிருந்தனர். ஈழப்பகுதியெங்கும் நிறைந் திருந்தன மாவீரர் துயிலுமில்லங்கள். இலங்கை இராணுவத்தால் இன்று சிதைக்கப்பட்ட துயிலும் இல்லங்கள் நம்மை நோக்கிக் கேள்வியெழுப்புகின்றன- எங்கே எமது கனவின் மீதி? ஒரு வித்து நல்வித்து எனத் தெரிகிறது. நல்வித்தை…

பெங்களூரு மாநகர்த்தொடரிக் கூட்டுக்கழகத்தில் வேலைவாய்ப்பு

பெங்களூரு மாநகர்த்தொடரிக் கூட்டுக்கழகத்தில் வேலைவாய்ப்பு     பெங்களூரு மாநகர்த்தொடரிக் கூட்டுக்கழக (Bangalore Metro Rail Corporation Limited) அரசு நிறுவனத்தில் 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 21 துணை முதன்மைப் பொறியாளர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! [No. BMRCL/224/ADM/2016/PRJ நாள்: 20.01.2016] மொத்தக் காலியிடங்கள்: 21 பணி: துணை முதன்மைப் பொறியாளர் (Deputy Chief Engineer) காலியிடங்கள்: 07 ஊதியம்: உரூ.37,400 – 67,000 + தர ஊதியம் உரூ.8,700 மொத்தம் உரூ.1,22,039 வயது வரம்பு: 55-க்குள்…

கருநாடகத்தில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை

கருநாடகத்தில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை   வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று கருநாடகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பரமேசுவர(நாயக்கு) அறிவுறுத்தினார்.   இது குறித்து அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் 21.01.2016 அன்று கூறியதாவது:   கருநாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் 30 விழுக்காடு வரை கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று சரோசினி மகிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே பின்பற்றி வருகின்றன.   பெரும்பாலான நிறுவனங்களும், தொழிலாலைகளும் இதைப் பின்பற்றாமல் புறக்கணித்து…

சிங்களஇலங்கை சென்றடைந்தன இந்தியப் போர்க் கப்பல்கள்

  தமிழ் இனத்தை அழித்த சிங்களஇலங்கையுடனான உறவை முறிக்குமாறு தமிழ்நாட்டுத் தமிழர்கள் தொடர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வரும் நிலையில் இந்திய – சிங்களஇலங்கைக் கடற்படை உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தன் போர்க்கப்பலை இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.   இந்தியா – சிங்களஇலங்கை இடையே கடற்படை உறவை மேலும் நெருக்கமாகக் கட்டமைப்பதற்காக இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான வானூர்தி தாங்கிப் போர்க்கப்பல் இந்தியக்கப்பற்படை நாவாய்(ஐ.என்.எசு) விக்கிரமாதித்யா இலங்கைக்கு 21.01.2016 அன்று சென்றடைந்தது.   இது குறித்து நடுவணரசு வெளியிட்ட…

உணவுத்திருவிழா, மேடவாக்கம்

பெருந்தகையீர்! அனைவரும் வருக! ஏழை, எளிய மக்களுக்கான இயற்கை உணவுத்திருவிழா! நம் மரபு நாட்டு உணவுகளை எளிய உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சி! உணவே மருந்து! மருந்தே உணவு! என்பது நம் தமிழர்களின் சிறந்த உணவு முறையாகும். அதனால் உடலில் எதிர்ப்பாற்றல் பெற்று உடல் நலத்துடனும் வலத்துடனும் வாழ்ந்தனர். ஆனால், இன்று புதிய புதிய உணவு மாற்றங்களால் புதிய புதிய நோய்கள் நம் உயிரைக் குடிக்கின்றன. ஊட்டச்சத்தும் எதிர்பாற்றலும் நிறைந்த நம் நாட்டு உணவு முறைகளைப் பின்பற்றுவோம். அனைவரும் வாருங்கள்! வந்து உணவுத்…