அழைப்பிதழ்

உணவுத்திருவிழா, மேடவாக்கம்

உணவுத்திருவிழா- azhai_unavuthiruvizhaa

பெருந்தகையீர்! அனைவரும் வருக!

ஏழை, எளிய மக்களுக்கான இயற்கை உணவுத்திருவிழா!
நம் மரபு நாட்டு உணவுகளை எளிய உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சி!
உணவே மருந்து! மருந்தே உணவு! என்பது நம் தமிழர்களின் சிறந்த உணவு முறையாகும். அதனால் உடலில் எதிர்ப்பாற்றல் பெற்று உடல் நலத்துடனும் வலத்துடனும் வாழ்ந்தனர். ஆனால், இன்று புதிய புதிய உணவு மாற்றங்களால் புதிய புதிய நோய்கள் நம் உயிரைக் குடிக்கின்றன. ஊட்டச்சத்தும் எதிர்பாற்றலும் நிறைந்த நம் நாட்டு உணவு முறைகளைப் பின்பற்றுவோம்.
அனைவரும் வாருங்கள்! வந்து உணவுத் திருவிழாவில் கலந்து கொள்ளுங்கள்! கலந்துகொண்டு உண்டு சுவைத்து மகிழுங்கள்!
சுட சுட சுவையான உணவு!
தேவையான உணவை நீங்கள் விரும்பி உண்ணலாம்! வருக!

நாள்:

தி.பி.2047 கும்பம்(மாசி) திங்கள் 1 ஆம் (13-2-16) நாள்

காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை.

இடம்:

திருவள்ளுவர் மழலையர் – தொடக்கப்பள்ளி
இராசாரம் தெரு, அரங்கநாதபுரம், மேடவாக்கம்,

சென்னை-600100, தொடர்புக்கு:9841633927

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *