குவிகம் சிறுகதைப் போட்டி

குவிகம் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி முதல் பரிசு உரூ.5000/ இரண்டாம் பரிசு உரூ-3000/ மூன்றாம் பரிசு  உரூ.2000/ கதைகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் நவம்பர் 30,2023 அனுப்ப வேண்டிய மின்வரி !  magazine.kuvikam@gmail.com

புதுமை இலக்கியத்தென்றல், இலக்குவனார் நினைவரங்கம்

புதுமை இலக்கியத் தென்றல் தமிழுரிமைப் போராளி சி.இலக்குவனார் நினைவரங்கம் ஆவணி 18  , 2054 / 04.09.2023 ஞாயிறு மாலை 6.30 அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை தலைமை: அரிமா தா.கு.திவாகரன் வரவேற்புரை: செல்வ.மீனாடசி சுந்தரம் நினைவுரை: பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் நன்றியுரை: இராவணன் மல்லிகா

ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 13 : வழக்குரைஞராக வேலை பார்த்தது 2/2

(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 12 : வழக்குரைஞராகவேலைபார்த்தது தொடர்ச்சி) ‘என் சுயசரிதை’ 13 : வழக்குரைஞராக வேலை பார்த்தது 2/2 இப்படிச் சொல்வதினால் சில கட்சிக்காரர்கள் என்னை விட்டு அகன்றபோதிலும் நான் எடுத்துக்கொண்ட வழக்குகளில் பெரும்பாலும் வெற்றி பெற்றதனால் நீதிமன்ற நீதிபதிகளுக்கு என்னிடம் ஒரு மதிப்பு உண்டாயிற்றென்றே சொல்ல வேண்டும். சில சமயங்களில் நான் உண்மையை அறியாத சில தப்பான வழக்குகளை நடத்திக்கொண்டு வருகையில் இடையில் இது பொய் வழக்கு என்று கண்டறிந்தால் நீதிமன்றத்தில் நடவடிக்கையை நடத்திவிட்டு முடிவில் தொகுப்புரை (Sum up)…

தோழர் தியாகு எழுதுகிறார் 200 : மோதி வாயில் கொழுக்கட்டை!

(தோழர் தியாகு எழுதுகிறார் 199 : அணையாத் தீ – தொடர்ச்சி) மோதி வாயில் கொழுக்கட்டை! மணிப்பூர் எரிகிறது! மக்கள் கொலையுண்டு மடிகின்றார்கள்! மத வழிபாட்டுக் கூடங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்டுகின்றன. கொடிய கொலைக் கருவிகளோடு வன்முறைக் கும்பல்கள் அலைந்து திரிகின்றன! மாநில முதல்வரே ஒருதரப்பு மக்கள் மீது வெறுப்புமிழ்ந்து வன்முறையைத் தூண்டி விடுகின்றார்! இந்திய உள்துறை அமைச்சரோ மணிப்பூர்த் தீயில் குளிர்காய்ந்து அரசியல் பழி விளையாட்டில் காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றார்! இத்தனையும் நடக்கும் போது இந்தியப் பெருநாட்டின் தலைமையமைச்சர் நரேந்திர மோதி இது குறித்து…

இலக்குவனாரை மக்கள் மறக்கவில்லை, அரசு நினைக்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனாரை மக்கள் மறக்கவில்லை, அரசு நினைக்கவில்லை! இன்றைய நாள் (03.09.2023) தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள். இதனை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்பெறுகிறது. பொதுவாக இலக்குவனார் என்றால் பன்முக முதன்மை எண்ணங்கள் வரும். பள்ளியில் படிக்கும் பொழுதே தனித்தமிழில் கவிதைகள் எழுதியவர். புலவர் படிப்பு மாணாக்கராக இருக்கும்போது ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் தனித்தமிழ்ப்பாவியம் படைத்தவர். மாணாக்க நிலையில் தனித்தமிழ்ப்பாவியம் படைத்தவர்களில் முதலாமவராக இலக்குவனார் விளங்குகிறார். அது மட்டுமல்ல. இது மொழிபெயர்ப்புத் தழுவல் படைப்பாகும். அந்த வகையில் படிக்கும்…

இலக்குவனார் 50ஆம் ஆண்டு நினைவுப் போற்றல், மயிலாடு துறை

செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார் 50 ஆம் ஆண்டு நினைவுப்போற்றல் விழா 03.09.2023 மாலை 6.00 மயிலாடுதுறைத் தமிழ்ச்சங்க அரங்கம் சிறப்புரை: முனைவர் துரை.குணசேகரன்தவத்திரு சிவகோபாலகிருட்டிணன்தவத்திரு வாய்மை இளஞ்சேரன்பரிசு வழங்குதல்: விழாத்தலைவர் தமிழ்ச்செம்மல் ச.பவுல்ராசுவரவேற்பரை: கு.பெரியசாமி நன்றியுரை: மது சோ.அபர்னாநெறியாள்கை : இடிமுழக்கம் வீரபாண்டியன்

இலக்குவனார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்

தேசிய மரபு அறக்கட்டளைசெந்தமிழ்ச்சுடர் சி.இலக்குவனார்50 ஆம் ஆண்டு நினைவுநாள்பன்னாட்டு இணையவழிக் கருத்தரங்கம் சிறப்புரைமுனைவர் மறைமலை இலக்குவனார் – காலமெல்லாம் தமிழ்ப்பணியில் சி.இலக்குவனார்நாள் 03.09.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00- 7.00அணுக்க இணைவு எண் 883 2405 9158கடவுச்சொல் PUDUVAI88 பா.வே.பாண்டியன்ஒருங்கிணைப்பாளர்

தோழர் தியாகு எழுதுகிறார் 199 : அணையாத் தீ

(தோழர் தியாகு எழுதுகிறார் 198 : தமிழ்த் தேசிய வளர்ச்சிக்காகச் சமயம் சாரலாமா?-தொடர்ச்சி) அணையாத் தீ! “தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை!” என்று பாவேந்தர் பாடியது போலத்தான் அன்றும் அந்தக் குழந்தைகள் பாடசாலைக்குச் சென்றார்கள். ஆனால் தீயில் எரிந்து கரிக்கட்டைகளாக அந்த மழலைச் செல்வங்கள் மீண்டுவரும் என்று அந்தத் தாய் தந்தையர் நினைத்தாரா? உற்றவர் மற்றவர் யாரேனும் நினைத்தாரா?  குடந்தை காசிராமன் தெருவில் 2004 சூலை 16ஆம் நாள் கிருட்டிணா ஆங்கில வழி (இங்கிலீசு மீடியம்) பள்ளிக்கூடத்தின் கீற்றுக் கூரையில் தாவிப் பற்றிய…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 51 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 1/2

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 50 : அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 2/2 – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 1/2 பிள்ளையவர்களுடைய மாணாக்கர் கூட்டத்தில் நாமும் சேர்ந்துவிட்டோமென்ற நினைப்பு எனக்கு ஒருவகையான பெருமிதத்தை உண்டாக்கியது. அன்று இரவு நானும் என் தந்தையாரும் ஆலயத்திற்குச் சென்று சிரீ மாயூரநாதரையும் அபயாம்பிகையையும் தரிசித்து வந்தோம். இராத்திரி முழுதும் எனக்குத் தூக்கமே வரவில்லை. என் உள்ளத்தில் பொங்கிவந்த சந்தோச உணர்ச்சியினால் அமைதியில்லாமல் பலவகையான காட்சிகளைக் கற்பனை செய்து பார்த்தேன். “இனி…

இலக்குவனார் மாண்பும் இற்றைப் புலவரும் – பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

இலக்குவனார் மாண்பும் இற்றைப் புலவரும் வெள்ளம்போல் தமிழர்களின் கூட்டம் அன்று   வீரத்தால் திரண்டெழுந்தபோது நம்மின் தெள்ளமுதத் தமிழ்ப்புலவர் என்ன செய்தார் திறனற்று வாய்மூடி இருந்தார்! ஆனால் கள்ளம்இல் குணம் கொண்டார் தமிழ்ப்ப கையைக் கனன்று எழுந்து தீய்க்கின்ற செந்தீ! அன்பை வள்ளல்போல் அளிக்கின்ற பெரிய ஆசான் வம்புக்குப் பணியாமல் குரல் கொடுத்தார்! சிறையினிலே அடைபட்டார்! இழந்தார் வேலை! செக்கிழுக்கும் மாட்டைப்போல் தமிழா சான்கள் குறைகொண்ட மதியாலே கண்டும் தம்மின் கும்பிஒன்று நிறைந்தாலே போதும் என்று முறையின்றிப் பேசாமல் இருந்தார்! மான மூச்சில்லை! இலக்குவனார்…

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி இறுதி நாள் 10.09.23

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி இறுதி நாள் 10.09.23 என நீட்டிப்பு தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டை முன்னிட்டு யாவரும் பங்கேற்கும் கட்டுரைப்போட்டி குறித்து அறிவித்திருந்தோம். இப்போட்டியில் மொத்தம் 18 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. சித்தாலயா, (பேரா.மரு.செயப்பிரகாசு நாராயணன்) வழங்கும் முதல்பரிசு உரூ.5,000/- இலக்குவனார் மனநல மருத்துவமனை, (பேரா. மரு.செல்வமணி தினகரன்) வழங்கும் இரண்டாம் பரிசு உரூ.3,000 /, & மூன்றாம் உரூ.2000/ நான்காம் பரிசு ஐவருக்கு இலக்குவனார் இதழுரைகள் நூல் (விலை உரூ.600/-) ஐந்தாம் பரிசு ஐவருக்கு இலக்குவனாரின் படைப்பு…

ஊரும் பேரும் 47 : இரா.பி.சேது(ப்பிள்ளை): கோயிலும் வாயிலும் 2

(ஊரும் பேரும் 46 : இரா.பி.சேது(ப்பிள்ளை): கோயிலும் வாயிலும் – தொடர்ச்சி) ஊரும் பேரும் கோயிலும் வாயிலும் 2 இளங்கோயில் தொடர்ச்சி    சித்தூர் நாட்டில் இக் காலத்தில் திருச்சானூர் என வழங்கும் ஊரில் ஈசனார் அமர்ந்தருளும் இடம்  இளங்கோயில் என்பது சாசனங்களால் விளங்குகின்றது. திருவேங்கடக் கோட்டத்துக் கடவூர் நாட்டுத் திருச்சொகினூரில் உள்ள இளங்கோயிற் பெருமான் என்பது சாசன வாசகம்.9 இவ்வூரின் பெயர் திருச்சுகனூர் என்றும், சித்திரதானூர் என்றும் சிதைந்து வழங்கும்.10  ஆலக்கோயில்      தொண்டை நாட்டில் ஆலக்கோயில் எனச் சிறந்து விளங்கும்ஆலயங்கள் இரண்டு…