4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 2/5 – சி.பா.

(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 1/5  தொடர்ச்சி) 4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 2/5  தம்முடைய இருபத்தைந்தாம் வயது தொடங்கிய-அதாவது 1901ஆம் ஆண்டு முதல்-தம்முடைய திருமண ஆண்டு முதல் குழந்தைப் பாடல்கள் எழுதத் தொடங்கிவிட்டார். 1917-18ஆம் ஆண்டில் “மருமக்கள் வழி மான்மியம்” என்னும் கவிதை ‘தமிழன்’ என்ற பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளிவந்தது. இவர்தம் குழந்தைப் பாடல்கள் 1941ஆம் ஆண்டில் ‘இளந்தென்றல்’ என்ற பெயரில் வெளிவந்தது. ‘மலரும் மாலையும்’ என்னும் கவிதைத் தொகுதியை, மழலை மொழி, இயற்கை இன்பம், காட்சி இன்பம், கதைப் பாட்டு, உள்ளமும் உணர்வும் என்னும் ஐந்து…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 437-446

(தமிழ்ச்சொல்லாக்கம்: 430-436 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 437-446 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 437. அபிவிருத்தி         –           மேம்பாடு 438. புண்ணியம்         –           நல்வினை 439. பராக்கிரமம்        –           வல்லமை 440. அனுமதி  –           கட்டளை 441….

மாண்பிலா மடமை ஆக்குநூல் மனுநூல் ! – பழ.தமிழாளன்

மாண்பிலா மடமை ஆக்குநூல் மனுநூல் ! 1. நெற்றியிலே பெண்குறியும் நிலைபெற்ற(து)  உண்டோ ?      நெற்றிதனில்  பிறந்தவராம் பிராமணர்கள்   என்பார்  உற்றதொரு  பெண்குறியும்  தோளதனில்   உண்டோ ?      உலகாள்வோர் பிறந்தகுறி அக்குறியே என்பார்  பெற்றதொடை  பெண்குறியும்  பிறங்குவதும்   உண்டோ ?     பொருள்வணிகர்  தோன்றுகுறி  அதுதானாம்  என்பார்.// நிற்கின்ற  தாளதனில்  பெண்குறியும்  உண்டோ ?     நிறையுழைப்புச் சூத்திரர்கள்  பிறந்த  குறி  என்பார் ! 2. பிறக்குமிடப் பெண்குறிகள்  பிறந்தவிடம்  நான்காய்     பேதமையை  விளைவிக்கும்  மனுநூலின்   கூற்றை அறவுணர்வு பெற்றிருக்கும் …

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 10

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 9 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 3. பழந்தமிழ்   தொல்காப்பியர் காலம் ஆரியர்கள் தென்னாட்டில் குடியேறிய காலம். அக்காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு என்பர். அக்கால நிலையைத் தெளிவாக அறிவிப்பது தொல்காப்பியமே. தொல்காப்பியர் அவர்க்கு முன்பிருந்தோர் இயற்றிய நூல்களையும், அவர் காலத்து நூல்களையும் அவர் கால வழக்கினையும் நன்கு ஆராய்ந்து மொழியிலக்கணமும் இலக்கிய இலக்கணமுமாகப் பயன்படத் தம் நூலை ஆக்கித் தந்துள்ளார். அத் தொல்காப்பியத்துள் பயின்றுள்ள பல சொற்கள் இன்றும் தமிழை வளம்படுத்திக் கொண்டிருக்கின்றன. தொல்காப்பியச் சொற்களுக்கு உரிய அகராதியை ஒருமுறை…

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 8

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 7 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 8 மருத நிலம்‌ தொடர்ச்சி  சமுத்திரம்     சில ஊர்ப் பெயர்களில் சமுத்திரம் என்ற வடசொல் இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்நாட்டு மன்னரும் செல்வரும் உண்டாக்கிய பெரிய ஏரிகள், கடல் என்றும், சமுத்திரம் என்றும், வாரிதி என்றும் புனைந்துரைக்கப் பெற்றன.77 இராசராச சோழன் வெட்டிய பெருங்குளம் ஒன்று சோழ சமுத்திரம் என்று சாசனத்திற் குறிக்கப்படுகின்றது.78 எனவே, தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்களில் உள்ள சமுத்திரம் என்னும் சொல், பெரும்பாலும் ஏரியின் பெயரென்று கொள்ளலாகும். நெல்லை…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 430-436

(தமிழ்ச்சொல்லாக்கம்: 426 – 429 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 430-436 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 430. Biology – உயிர் நூல் 431. பிராணதாரணப் பிரயத்தனம் – Struggle For Existence ‘போதுமான மட்டுஞ் சுறுசுறுப்பாயிருப்பவனே…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 72

(குறிஞ்சி மலர்  71 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 26 குயிற்குஞ்சு முட்டையைக் காக்கை தன் கூட்டிலிட்டால்அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின்றது போல்இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லைமயக்கத்தால் யாக்கை வளர்க்கின்ற வாறே.      — திருமந்திரம் அரவிந்தனும் பூரணியும் புகைப்பட நிலையத்துக்குச் சென்றிருந்தபோது வீட்டில் மீனாட்சிசுந்தரமும் மங்களேசுவரி அம்மாளும் அவர்கள் இருவரையும் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். “எனக்கு ஒன்று தோன்றுகிறது. என் பெண் வசந்தாவின் திருமணத்தை மட்டும் தனித் திருமணமாக நடத்துவதற்குப் பதிலாக அதே மண மனையில் இவர்களுக்கும் முடிபோட்டு இணைத்துவிட்டால் என்ன? இவர்களும் தான்…

தமிழவள்! – மு. இராமச்சந்திரன்

தமிழவள்! கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தார் தமிழர் குலக் கொழுந்தாக அன்னைத் தமிழை வஞ்சி வஞ்சி யெனவே அவளும் வளர்ந்தாள் அவளும் வளமாய் அறிவாய்!.. செஞ்சி செஞ்சி சீர்பெற அழகாய் செய்தனர் புலவர் கவியென வடிவாய் மன்னர் எழுந்தனர் மாதவள் செழிக்க மயக்கம் தீர்க்க சங்கம் பிறக்க… ஊரும் உலகும் அவள் பெயர் படிக்க உருண்டது காலம் பலர்வழி நடக்க… வளர்ந்தது சோலை ஆடலும் இனிக்க வந்து விழுந்தது இசையென முழக்க.. அணிந்தாள் அன்னை உடைபல உடுத்த அணிகலன் எடுத்து பதித்தனர் முத்தாய் பொன்னும் மணியும்…

அகரமுதல முறைமன்றம்: ஆ.இராசா குற்றவாளியே!

அகரமுதல முறைமன்றம்: ஆ.இராசா குற்றவாளியே! – இலக்குவனார் திருவள்ளுவன் தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினான முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா, இந்துக்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார் எனப் பிராமணியன் என்பார் முறையிட்டுள்ளார். அவர், ஆ.இராசா, சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், “இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன். இந்துவாக  இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்;  சூத்திரனாக இருக்கும் வரை நீ பரத்தையின்(விபச்சாரியின்) மகன். எத்தனை பேர் பரத்தையின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? . .  எத்தனை பேர்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 426 – 429

(தமிழ்ச்சொல்லாக்கம்: 421-425 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 429-429 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 426. Mathematics professor – கணித நூற்புலவர் அக்காலத்தில் சென்னை பிரஸிடென்சி காலேசில் மாத மெடிக் புரொபெசராக (கணித நூற்புலவர்) இருந்து காலஞ்சென்ற…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.11 -1.7.15.

(இராவண காவியம்: 1.7.6 -1.7.10. தொடர்ச்சி) இராவண காவியம் தமிழகக் காண்டம் 7. கடல்கோட் படலம்         11.      கேட்டிடிற் காதுக் கின்பம் கிளந்திடின் நாவுக் கின்பம்                ஊட்டிடி னுளத்துக் கின்பம் உணர்ந்திடி னுணர்வுக் கின்பம்                பாட்டுரை நடையிற் செல்லும் பழந்தமிழ்ப் பாவாய் நீதான்                வீட்டிலா வின்ப மானால் விரும்பிடார் யார்தான் சொல்லாய்.         12.     அஎன வாயங் காக்கின் அன்னையுன் புலனா றைந்தும்                முக்கனி தேன்பால் கண்டும் முகஞ்சுழித் தினைந்தே யொல்கப்                புக்கெழீ யியல்பா யின்பம்…