தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 151 & 152 : நூலரங்கம்
செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411 தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 151 & 152 ; நூலரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 மார்க்ழி 13, 2056 ஞாயிறு 28.12.25 காலை 10.00 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை :…
வெருளி நோய்கள் 876-880: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 871-875) வெருளி நோய்கள் 876-880 குறுந் தகடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குறுந் தகட்டு வெருளி.ஒலி. ஒளி அலைப்பதிவுகள் சரியாக மேற்கொள்ளப் படவில்லையோ, கீறல் விழுந்த குறுந்தகடாக இருந்து சரியாக இசையையோ உரையையோ கேட்க முடியாமல் போகுமோ, கேட்கத்தகாதவை அல்லது பார்க்கத்தகாதவை பதிவாிகியருக்குமோ என்ற பேரச்சத்திற்கு ஆளா்வோர் உள்ளனர்.00 குறுமி(dwarf planet) குறித்த வரம்பற்ற பேரச்சம் குறுமிவெருளி.dwarf planet என்றால் குள்ளன் என்கிறார்கள். அவ்வாறு சொல்வது உயர்திணையாகும். குறுமளவு உள்ள கோளைச் சுருக்கமாகக் குறுமி என்பது பொருத்தமாக இருக்கும்.Ceres என்னும் இலத்தீன்…
தொல்காப்பியமும் பாணினியமும் – 15 : உரையாசிரியர்கள் நால்வருண விளக்கங்கள் தொல்காப்பியர் கொள்கைக்கு முரண்பட்டன
(தொல்காப்பியமும் பாணினியமும் – 14 : இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்-தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 15 ஆரியர் வரவு தொல்காப்பியர் காலத்தில்தான் ஆரியம் தமிழ் நாட்டில் பரவத் தொடங்கி இருக்க வேண்டும். தமிழகத்தில் முதன் முதலாகக் குடியேறிய வேற்று நாட்டார் வட ஆரியரே. அவருள்ளும் மொழி நூற் புலமையும்ஒழுக்க மேம்பாடும் பிறர்க்கென வாழும் பெற்றிமையும் கொண்ட ஆரியரே தமிழகச் சான்றோருடனும் அரசர்களுடனும் தொடர்பு கொண்டனர். ஆரிய மொழிப் புலவரும் தமிழ் மொழிப்புலவரும் நட்புடன் அளவளாவி உறவாடினர். “கற்றாரைக் கற்றாரே காமுறுவர், அன்றோ?” எவரையும் வரவேற்று இன்ப வாழ்வு…
கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா!-திருத்துறைக் கிழார்
(க௬. தமிழர் செய்ய வேண்டுவன?- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்ஆ.தமிழர் கஎ. ஈழத்தைப் பாரடா! ஏமாளித்தமிழா! இலங்கையின் மக்கள் தொகை நூற்று எழுபது இலக்கம். அதில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை இருபது இலக்கம். சிங்களர் அரசு 1980 – ஆம் ஆண்டு தமிழின அழிப்புப் பணியில் இறங்கி, பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது. ஆண், பெண், சிறார் என்ற வேறுபாடு கருதாது நூழிலாட்டு நடத்தியது. ஈழத்தில் தங்கட்கு விடுதலை வேண்டிப் போராடிய தமிழர் நான்கு பிரிவினராவர். அவர்களுள் விடுதலைப்புலிகள் தீவிரமாகச் செயல்பட்டனர். இக்குழுவினர்க்குத் தலைவர்…
வெருளி நோய்கள் 871-875: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 866-870: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 871-875 குறியீடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குறியீட்டு வெருளி.கருத்துப் பரிமாற்றம் செய்வோர் அல்லது உரையாடுவோர் குழுஉக் குறி முறையில் அல்லது அடையாள முறையில் அல்லது குறியீட்டு முறையில் பேசுவது.கால்கழுவுதல் போன்று இடக்கர் அடக்கலாகச்சொல்வதும் குறியீட்டு உரையேSymbolo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குறியீடு.00 குறுகிய பகுதி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குறுகிய பகுதி வெருளி.ஒருவருக்குக் குறுகிய பொருட்கள் அல்லது இடங்களைப் பற்றிய வெருளியை ஏற்படுத்துவது.சான்றாகக் குறுகிய நடைபாதை, அடித்தளம் அல்லது மாடிச்சிற்றறை, அல்லது மாடிப்படிகளின் அடிப்பகுதி,…
வெருளி நோய்கள் 866-870: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 861-865: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 866-870 உறுப்பு அளவுகள் இயல்பிற்கு மாறாகக் குறைந்துள்ள குறளன்/குறளி(midgets) தொடர்பான தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் குறளன் வெருளி.குள்ளவாதம், குறுநிலை என்று இதனை அழைக்கின்றனர். பொதுவாக அகவை வந்தும் 147 சிறுகோல்/செ.மீ. அளவிற்குக் குறைவானவர்களே இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள். இவர்களுள் சிலர் சற்று உயரமாக இருந்தாலும் கை, கால் உறுப்புகள் வழக்கத்திற்கு மாறாகக் குறு நிலையிலேயே இருக்கும்.00 குறிகை குறித்த வரம்பற்ற பேரச்சம் குறிகை வெருளி.அடையாளமாகக் காட்டப்பெறும் குறிகை தவறாக இருக்குமோ அதனால் தீய விளைவுகள் வருமோ என்ற…
வெருளி நோய்கள் 861-865: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 856-860:தொடர்ச்சி) வெருளி நோய்கள் 861-865 குளியலறை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குளியலறை வெருளி.Loutro என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் குளியல். இந்த இடத்தில் குளிக்கும் இடத்தை – குளியல் அறையை-க் குறிக்கிறது.00 குளியல் தொட்டி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குளியல் தொட்டி வெருளி.மனை வெருளி(oikophobia) உள்ளவர்களுக்குக் குளியல் தொட்டி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 குளிர் பானங்கள் குறித்த வரம்பற்ற பேரச்சம் குளிர் பானங்கள் வெருளி.பற் சிதைவு, எலும்பு பலவீனம், சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, இதய நோய்கள், செரிமானச் சிக்கல்கள்…
வெருளி நோய்கள் 856-860: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 851-855: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 856-860 குழிப்பந்தாட்ட ஊர்தி(golf cart) மீதான அளவுகடந்த பேரச்சம் குழி யாட்ட ஊர்தி வெருளி.ஆட்ட ஊர்தி வெருளி(Gelandelimophobia) உள்ளவர்களுக்குக் குழியாட்ட ஊர்தி வெருளி வர வாய்ப்புள்ளது.00-857. குழிப்பந்தாட்ட வெருளி – Golfphobiaகுழிப்பந்தாட்டம் குறித்த வரம்பற்ற பேரச்சம் குழிப்பந்தாட்ட வெருளி.வளைகோலாட்ட வெருளி(hockey phobia) உள்ளவர்களுக்குக் குழிப்பந்தாட்ட வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.00 குழிப்பேரி(peach) என்னும் பழத்தின் நிறம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குழிப்பேரி நிற வெருளி.Persi என்பது குழிப்பேரிப் பழமாகும். Persico என்றால் குழிப்பேரி நிறமாகும்.00 குளவி…
குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 3.பெரியாரின் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பழிப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 2. இந்து மதத்தை மட்டும்தான் பெரியார் எதிர்த்தாரா? – தொடர்ச்சி) குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 3.பெரியாரின் தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பழிப்பும் பெற்றோர் தம் குழந்தையிடம் “வெளியே போனால் காலை உடைத்து விடுவேன்” என்று சொன்னால் வெறுப்பில் சொல்லும் சொற்களா இவை. அவர்கள் தம் பிள்ளையிடம் முட்டாளே என்று சொன்னால் உண்மையிலேயே அவ்வாறு கருதுகிறீர்கள் என்ற பொருளா? உண்மையிலேயே முட்டாளாக இருந்தாலும் அறிவாளியாக எண்ணுவதுதானே பெற்றோர் இயல்பு. அதுபோல்தான் சில நேரங்களில் பெரியார் தமிழைப்பற்றியும் தமிழர்களைப்பற்றியும் சொன்னவையும். எனினும் சில…
சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 9: இலக்குவனார் திருவள்ளுவன்
(சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 8: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?- 9 நம் மொழி தமிழ், நம் இனம் தமிழ், நம் நாடு தமிழ்நாடு. என்றாலும் கூட நாம் திராவிடத்தை, பகுத்து அறிவு வளர்ச்சிக்கும் தன்மதிப்பு எழுச்சிக்கும் அடிப்படையாக எடுத்துக் கொள்கிறோம். இந்தத் திராவிட உணர்வைத்தான் இன்றைக்குப் பெரியாரியம் என்று சொல்கிறார்கள். அதற்கான திராவிட மண்தான் இந்தத் திராவிட உணர்வை விதைத்தது என்பதை நாம் மறுக்க முடியாது. அதே நேரத்தில் மொழி வாயிலாகப் பார்க்கும் போது நம் மொழி தமிழ்தான். நம்…
வெருளி நோய்கள் 851-855: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 846-850: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 851-855 காழநீர்(காப்பி) முதலான குடிவகைகளுக்குப் பயன்படுத்தப்படும் நெகிழிக் குவளைகள் பற்றிய அளவுகடந்த பேரச்சம் நெகிழிக்குவளை வெருளி. சுருக்கமாகக் குவளை வெருளி எனலாம்.சூடான பானங்கள் நெகிழிக் குவளைகளில் ஊற்றப்படுவது உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும். என்றாலும் இது குறித்து மிகையான பேரச்சம் கொள்ளாமல் தவிர்க்க வேண்டும். இப்பொழுது அரசே நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளதால் இத்தகைய வெருளி குறையும், மறையும். (பேரச்சம் காழநீர் மீது என்றால் காழநீர் வெருளி என்றே சொல்லலாம்.)இப்பொழுது நெகிழி பயன்பாட்டிற்கே தடை…
மொழிப்போர் வரலாறு அறிவோம்!-11 : மொழிப்போரில் மகளிர் பங்களிப்பு – 2 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-10 : மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 1: தொடர்ச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்!-11 மொழிப்போரில் மகளி்ர் பங்களிப்பு – 2 மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்களின் அளப்பரிய பங்கில் ஒரு பகுதிதான் பதிவுகளில் உள்ளன. அவற்றில் நாமறிந்த ஒரு பகுதியைத்தான் ‘பெண்களின் முதன்மைப் பங்கு’ என்னும் தலைப்பில் முன் கட்டுரையில் பார்த்தோம். எனவே, இன்னும் சொல்வதற்கு மிகுதியாக உள்ளன. எனினும் மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள் பெயர்களைப் பார்ப்போம். மொழிப்போரில் சிறை புகுந்த வீராங்கனைகள்…
