புரட்சி நடிகர் இருபதாம் நூற்றாண்டின் இனிய பாரி – சி.இலக்குவனார்
இருபதாம் நூற்றாண்டின் இனிய பாரி “கலைஞருள் வள்ளல், காசினி போற்றும் வள்ளலுள் கலைஞர்; வருந்தும் எவர்க்கும் ஒல்லும் வகையில் உடனே உதவும் புரட்சி நடிகர், பொல்லாங்கெதனையும் நடிப்பினுங்கொள்ளா நடிகவேள், நானிலம் இனிதே வாழ என்றும் எண்ணி அன்பும் அருளும் அணியாய்ப் பெற்றவர் இவரால் உயர்ந்தார் எண்ணிலர் என்றும் அண்ணா வழியில் அணியுறச் செல்லல் முந்துறும் தளபதி, மூவா இளைஞர் இராமச்சந்திரன் எனும் பெயரால் எனக்கும் அண்ணன் எவர்க்கும் தோழன் ஒப்பிலாப் பண்பினர், உலகம் போற்ற நடிக்கும் வித்தகர், நடிப்போர் சூழமும் ஐம்பெருங் குற்றமும் அணுகா…
இரசினிகாந்து வீடு முற்றுகை அறிவிப்பு
மார்கழி 05, 2046 / திசம்பர் 21, 2015 நண்பகல் 2.00 சல்லிக்கட்டு, தமிழ்ப்பண்பாடு தொடர்பில் இரசினிகாந்து வீடு முற்றுகை அறிவிப்பு கி.வீரலக்குமி, தமிழர் முன்னேற்றப்படை
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 12: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11: தொடர்ச்சி) 12 1952 இல் இந்தியப் பாராளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் நடை பெற்றது. புதியன செய்யும் பொறியில் வல்லுநர் கோ.து.நாயுடு திராவிடர் கழகச் சார்பில் திருவில்லிப்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில் நின்றார். கோ.து.நாயுடு உழைப்பால் உயர்ந்த அறிஞர்; உலகம் சுற்றியவர்; பலகலைகள் கற்றவர்; பேருந்து வண்டிகள் நடத்தும் பெருஞ் செல்வர்; கோவை நகரைச் சார்ந்தவர். இவரை எதிர்த்து கருமவீரர் காமராசர் போட்டியிட்டார். காமராசர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராய் விளங்கியவர். தமிழ்நாட்டு அமைச்சரவையை ஆக்கவும் நீக்கவும் ஆற்றல்…
காஞ்சி மாவட்ட உலகத் திருக்குறள் பேரவை 9ஆம் ஆண்டு விழா -போட்டிகள்
<utpkaanchi@gmail.com> அன்புடையீர் வணக்கம் வாழிய நலத்துடன் உலகத் திருக்குறள் பேரவை •காஞ்சிபுரம் மாவட்டம்• 9ஆம் ஆண்டு விழா -போட்டிகள் பொது: 1) கட்டுரைத் தலைப்பு – சமயம் கடந்த சமநீதி நூல் 2) மரபுக் கவிதைத் தலைப்பு – வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து 3) புதுக்கவிதைத் தலைப்பு – ஈரடியால் உலகளந்தான் கல்லூரி மாணவர்க்கு: 1) கட்டுரைத் தலைப்பு – இருளறுக்கும் மங்கல விளக்கு 2) மரபுக் கவிதைத் தலைப்பு – எல்லாப் பொருளும் இதன்பால் உள 3) புதுக்கவிதைத் தலைப்பு –…
1330 அடி நீளத் திருக்குறள் பதிப்பு
மார்கழி 25, 2046 / சனவரி 10, 2015 காலை 10.00, சென்னை தமிழர் பண்பாட்டு நடுவம் தமிழ் ஆன்றோர் அவை (திருவள்ளூர்)
ஞயம்பட வரை – கட்டுரைப் போட்டி: மொத்தப்பரிசு உரூபாய் 30,000/
தமிழ்மொழி முதன்மை குறித்த ஞயம்பட வரை – கட்டுரைப் போட்டி அ) தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” – விடை காண முயல்வோம். ஆ) கட்டுரைகள் 1500 சொற்களுக்கு மேலும், 2500 சொற்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இ) உங்கள் கட்டுரைகளை ஒருங்குகுறி(Unicode) வடிவில், சொல்ஆவணமாக(MS- Word Document) ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ஈ) பரிசுத்தொகை : முதல் பரிசு – 15000 இரண்டாம்…
கவிஞர் மு.முருகேசுக்குச் ‘செம்பணிச் சிகரம் விருது’
கவிஞர் மு.முருகேசுக்குச் ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த இதழாளர் கவிஞர் மு.முருகேசுக்குப் புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது. மார்கழி 01, 2046 / திசம்பர் 17, 2015 இல் புதுச்சேரியில் நடைபெற்ற இவ்விழாவிற்குப் புதுச்சேரி கம்பன் கழகச் செயலாளர் வே.பொ.சிவக்கொழுந்து தலைமையேற்றார். குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத தலைவர் கலைமாமணி அ.உசேன் அனைவரையும் வரவேற்றார். புதுச்சேரி மாநிலச் சட்டப்பேரவைத் தலைவர் வ.சபாபதி…
ம.செந்தமிழனின் மரபுத்தொழிற் பயிற்சி அறிமுகம்
மார்கழி 10, 2046 / திசம்பர் 22, 2015 மாலை 4.00
எங்கள் பெரியார் – கவிமதி
எங்கள் பெரியார் – மனு வேதம் கொளுத்திய திரியார் மூடிமறைத்துப் பேச அறியார் மூடப் பழக்கம் எதுவும் தெரியார் நூலார் திமிர் அறுத்த வாளார் நூற்றாண்டு கடந்து வாழும் வரலாறார் நரியார் தோலுரித்த புலியார் நால்வகை வருணம் கலைத்த கரியார் எளிதாய்க் கடந்து செல்லும் வழியார் ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த விழியார் தெளியார் அறிவு நெய்த தறியார் தெளிந்தோருக்குத் தெளிவான குறியார் உலகத் தமிழருக்கு உரியார் உணர்ந்தால் விளங்கும் மொழியார் மனு வேதம் கொளுத்திய திரியார் மாதருக்குத் தெளிவான ஒலியார் தேடிப் படிக்க சிறந்த…
சொல் காக்க! – மதன். சு, சேலம்
கூரிய வாளைவிட கூரிய சொல் வலிமை! கூடுமட்டும் சொல் காக்க கூடுமுந்தன் வாழ்வில் நலம் ! வாளினாலிவ் உடலில் துன்பம் சொல்லினாலிவ் வாழ்வே துன்பம் ! வரம்புடைய சொல்லால் வாழ்வினிலே சேரும் இன்பம் ! ஒரு சொல் உரைத்திடினும் உயர்வு எனின் உலகை ஆளும் ! தவறான சொல் லெனின் தரமிழந்து தரணி மாளும் ! ஆதலினால் சொல்லினை அளந்து நீங்கள் பேசிடுவீர் ! காதலினால் பேசுதற்போல் கண்ட சொல் விட்டிடாதீர் ! மதன். சு சேலம் ecemadhan94@gmail.com
ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை…2/2 – புகழேந்தி தங்கராசு
2/2 தமிழர் தாயகத்தைக் காப்பது… தமிழ் தேசிய அடையாளங்களைக் காப்பது… தமிழரின் தன்னாட்சி உரிமையை மீட்பது… இவைதாம் பிரபாகரன் என்கிற அப்பழுக்கற்ற மனிதனின் நோக்கங்களாக இருந்தன. சிங்களக் குமுகாயத்தை அழித்து ஒழிப்பது எந்தக் காலத்திலும் புலிகளின் நோக்கமாக இருந்ததில்லை. தமிழ்க் குமுகாயத்தின் மானத்தை மீட்பதென்கிற பெயரில், அடுத்தவரின் மானத்துக்குக் கறை ஏற்படுத்துகிற செயலில் பிரபாகரனின் தோழர்கள் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. வெற்றி பெற்ற போர்முனை ஒன்றில், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் சிங்களத் தேசியக் கொடியை எரித்த போராளிகளைக் கடுமையாகக் கண்டித்த பிரபாகரனின் நேர்மையைப் புரிந்தும்…
பன்னிரு மாதங்களும் தமிழ்ப்பெயர்களே! – சி.இலக்குவனார்
கார் காலம் என்பது ஆவணியும் புரட்டாசியுமாம். ஒரு காலத்தில் ஆண்டுத் தொடக்கம் ஆவணி முதலாகக் கொள்ளப்பட்டது என்பர். இன்றும் மலையாள நாட்டில் ஆண்டுத் தொடக்கம் ஆவணியிருந்தே கொள்ளப்படுகின்றது. இப்பொழுது சித்திரை முதலாக ஆண்டுத் தொடக்கம் கொள்கின்றோம். இம்மாற்றம் என்று உண்டாயிற்று என்பது ஆராய்ந்து காண்டற்குரியது. ஆவணியும் புரட்டாசியும் கார்காலம்; ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர் காலம்; மார்கழியும் தையும் முன் பனிக்காலம்; மாசியும் பங்குனியும் பின் பனிக் காலம்; சித்திரையும் வைகாசியும் இளவேனிற்காலம்; ஆனியும் ஆடியும் முதுவேனிற்காலம். இவ்வாறு காலங்கள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டு வந்தன….