செஞ்சீனா சென்றுவந்தேன் 17 – பொறி.க.அருணபாரதி

  (புரட்டாசி 26 , 2045 / அக்.12, 2014 தொடர்ச்சி) 17. பழமையை அழித்துவிட்டுப் ‘பாதுகாக்கும்’ பன்னாட்டு நிறுவனங்கள்   வட அமெரிக்கா, ஈரான் – ஈராக் – ஆப்கானித்தான் நாடுகளில் தலையிடுகிறது என்றால், சீனாவோ தன்னுடைய மண்டலத்திலுள்ள இலங்கை, வட கொரியா முதலான நாடுகளின் உள்நாட்டுச் சிக்கல்களில் மூக்கை நுழைத்து அங்கெல்லாம் தமக்காக தளம் அமைத்துக் கொள்கிறது. வட அமெரிக்க மக்கள், பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட நுகர்வு வெறி மோகத்தில் அலைகிறார்கள் என்றால், சீனர்கள் அதே போல தம் வாழ்நிலையை மாற்றிக்…

மொழிக்கெலாம் தலைமை தமிழே – புலவர் குழந்தை

மொழிக்கெலாம் தலைமை தமிழே! முதன்மையும் தலைமையும் மிக்கது தமிழ் உலகம் ஊமையா உள்ள அக் காலையே பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே இலகி என்றுநான் என்னும் மொழிக்கெலாம் தலைமையாம் தமிழ் – புலவர் குழந்தை

தமிழும் நீடு வாழ்க – கவியோகி சுத்தானந்த பாரதியார்

தமிழும் நீடு வாழ்க காதொளிரும் குண்டலமும் கைக்குவளை                 யாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில்                 மேகலையும் சிலம்பார் இன்பப் போதொளிரும் திருவடியும் பொன்முடிசூ                 ளாமணியும் பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்                 தாங்குதமிழ் நீடு வாழ்க – கவியோகி சுத்தானந்த பாரதியார்

தமிழணங்கை வணங்குவோம் – சங்குப் புலவர்

தமிழணங்கை வணங்குவோம்!   காதிலங்கு குண்டமாகக் குண்டலகே                 சியுமிடையே கலையாச் சாத்தன் ஓதுமணி மேகலையும் ஒளிர்கைவளை                 யாவளையா பதியும் மார்பின் மீதணிசிந் தாமணியாச் சிந்தாம                 ணியுங்காலில் வியன்சி லம்பாத் திதில்சிலப் பதிகார மும்புனைந்த                 தமிழணங்கைச் சிந்தை செய்வோம்! – சங்குப் புலவர்

அனைத்து வகுப்புகளிலும் இவ்வாண்டே தமிழ் கற்பிக்கவும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

  தமிழின் உயர்வைக் கூறித் தங்களை உயர்த்திக் கொள்ளாத எந்த அரசியல்வாதியும் இல்லை எனலாம். என்றாலும் தொன்மையும் தாய்மையும் மிக்க செம்மொழியான தமிழ் தமிழ்நாட்டில் மறைந்து வரும் அவல நிலைதான் உள்ளது. கல்விக்கூடங்களிலேயே தமிழ் துரத்தப்படும்பொழுது வேறு எங்குதான் தமிழ் வாழும்? என்றாலும் மொழிப்பாடம் என்ற அளவில் தமிழ் கற்பிக்கப்படும் சூழல் அரும்பி மலர்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியது. ஒரே ஆண்டில் தமிழைப் பாடமொழியாக அறிமுகப்படுத்தாமல் ஒவ்வோர் ஆண்டாக அறிமுகப்படுத்தி வருவது மகிழ்ச்சியளிக்காவிட்டாலும் இந்த நிலையாவது உருவாவது பாராட்டிற்குரியதே!  தமிழ் அறியாதார் தேர்வு எழுத இயலாது…

பணிமலர் 1. அவ்வளவு தங்கமும் உங்களுக்குத்தான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

    (என் பணிவாழ்க்கையில் எண்ணற்ற மறுவாழ்வுப்பணிகளையும் முன்னோடிப் பணிகளையும் ஆற்றியுள்ளேன். காலமுறையில் இல்லாமல் அவ்வப்போது பூக்கும் நினைவின் மணத்தைப் பரப்ப விழைகிறேன்.) தமிழ்நாடு சிறைத்துறையில் நன்னடத்தை அலுவராகப் பணியாற்றிய பொழுது ஒரு நாள் நண்பர் ‘சௌ.’ என் பக்கத்தில் வந்தமர்ந்தார். “நேர்மையான அதிகாரி ஒருவர் பெயரைக் கூறுங்கள்” என்றார். நான்,“திருவள்ளுவன்” என்றேன். உடனே அவர், “நீங்கள் நேர்மையானவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காக உங்கள் பெயரையே கூறுவதா?” என்றார். நீங்கள் பன்மையில் கேட்டிருந்தால் செளந்தரபாண்டியன், மீசை(பெரியசாமி) எனச் சிலரையும் சேர்த்துச் சொல்லியிருப்பேன். ஒருமையில்…

நாணல் நண்பர்கள், ‎மதுரை சூழலியல் சந்திப்பு

மதுரை சூழலியல் சந்திப்பு  ஐப்பசி 8, 2045 / அக். 25,2014 குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணைக் கோட்பாடுகள் இலக்கணமாக பார்க்கப்பட்டனவே தவிர, இன்று உலக விவாதத்திற்குரிய சூழலியல் அறிவியலாக நம்மால் கருத்தில் கொள்ளப்படவில்லை. உயிர்களின் இயங்கியலுக்கு அடிப்படையாக இருக்கும் நிலமும் பொழுதும் முதற்பொருளாக வகுத்து கொண்ட நம் தொல்குடி சமூகம், தெய்வத்தை முதற் பொருளுக்குள் அடக்காமல் அதை கருப்பொருளுக்குள் அடக்குகிறது. நிலமும் பொழுதும் ஆகிய இரண்டு முதற்பொருள்களே, அத்திணையில் உள்ள சூழலைத் தீர்மானிக்கின்றன. எனவே பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே தான்…

இணையத் தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம் : இரவி நடராசன்

  இணையத் தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம் உருவாக்கம்: இரவி நடராசன் மின்னஞ்சல்: ravinat@gmail.com மேலட்டை உருவாக்கம்: இலெனின் குருசாமி மின்னஞ்சல்: guruleninn@gmail.com மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com ’சொல்வனம்’ இதழில் 2009, 2010 ஆம் ஆண்டுகளில் எழுதிய இணையம் தொடர்பான கட்டுரைத் தொகுப்பு, இப்புத்தகம். இணையத்தைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அதைப் பயன்படுத்துவர்கள் பலர். அனைவரும் தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்க வேண்டியதில்லை என்பதே இணையத்தின் வெற்றிக்கு அடிப்படைக் காரணம். ஆயினும், பயன் படுத்தும் நுட்பங்களை அறிந்தால், தகுந்த…

உலகளாவிய தமிழ்க்கல்வி – 2 : இலக்குவனார் திருவள்ளுவன்

  (புரட்டாசி 26, 2045 / 12 அட்டோபர் 2014 தொடர்ச்சி)   பாடத்திட்டங்கள் பாடத்திட்டங்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு முறையில் அமைக்க விரும்புவதே இயற்கை. என்றாலும் கலந்து பேசி சீரான முறையைக் கடைப்பிடிப்பது நன்று. பாடத்திட்டங்கள் மாறினாலும் அவற்றின் அடிப்படை நோக்கத்தில் மாறுபாடு கூடாது.எனவே, பின்வருவனவற்றில் கருத்து செலுத்த வேண்டும்.   தமிழ் நெடுங்கணக்கில் – எழுத்துகளில் – கிரந்த எழுத்துகளைச் சேர்க்கக்கூடாது.   கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாத – அயற் சொற்களைக் கலக்காத தலைமுறையை உருவாக்க இஃது உதவும். குறிப்பிட்ட நிலைக்குப்பின்னர் கிரந்த எழுத்துகளைப்…

தேனிப் பகுதியில் கொக்கிபோட்டு மின்சாரம் திருட்டு

தேனி அருகே உள்ள செயமங்கலம் பகுதியில் கொக்கிபோட்டு மின்சாரம் திருடப்படுவது வாடிக்கையாக உள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம் பகுதிகளில் இக்காலம் கோயில் திருவிழா நடைபெறுகிறது. மேலும் இப்பகுதியில் தங்கள் இல்லங்களில் நடைபெறும் திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டுவிழா, வசந்தவிழா என எந்த விழாவாக இருந்தாலும் அப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் கொக்கிபோட்டு மின்சாரம் திருடப்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும் கோயில்திருவிழாவின்போது வண்ண வண்ண விளக்குகள், சாலையோரம் குழல்விளக்குகள் போன்றவை கட்டப்படுகின்றன. இதற்கு அப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் இருந்து கொக்கிபோட்டு மின்சாரம் திருடப்படுகிறது….

அதிக மாணவர்கள் ஏற்றிச்செல்வதால் இடர்நேர்ச்சி ஏற்படும் கண்டம்(அபாயம்)

தனியார் பள்ளிப்பேருந்துகளில் அதிக மாணவர்கள் ஏற்றிச்செல்வதால் இடர்நேர்ச்சி ஏற்படும் கண்டம்(அபாயம்)   தேவதானப்பட்டிப் பகுதிகளில் தனியார் பள்ளிப்பேருந்துகளில் அளவுக்கதிமாக மாணவர்களை ஏற்றிச்செல்வதால் பேரிடர் நேர்ச்சி ஏற்படும்   கண்டம் உள்ளது.   தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, வேல்நகர், தண்ணீர்ப்பந்தல் முதலான பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பெரியகுளத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.   தனியார்பள்ளிகளில் கும்பகோணம் இடர்நேர்ச்சி ஏற்பட்டபின்பும், சென்னையில் பள்ளியூர்திகள் இடர்நேர்ச்சிகளுக்கான பின்பும் அரசு சார்பில் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அதன் படி அந்தந்த வட்டாரப்போக்குவரத்து ஆய்வாளர்கள் வாகன ஆய்வு மேற்கொண்டு ஊர்திகளைச்…

தாய்மொழி நாளில் கல்வியியக்கப் பேரணி

பெருந்தகையீர் வணக்கம். *தமிழ்வழியே கல்வி! *தமிழ்வழிப் படித்தோர்க்கே வேலை! *தமிழ்நாட்டிற்க்கே கல்வி உரிமை! எனும்முழக்கங்களோடு தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் தொடங்கப்பட்டது, தோழமைகள்அனைவரும் கட்சி இயக்க வேறுபாடின்றி அனைவரும் ஒருங்கிணைவோம், தமிழ்நாட்டிற்க்கான கல்வியை உருவாக்கும், கல்விக்காக ஒரு மக்கள் இயக்கத்தைஉருவாக்குவோம். நன்றி தொடர்புக்கு: தோழர் பொழிலன்:8608068002 தோழர் திருமலை தமிழரசன்:9962101000