செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம் நடத்தும் ஐம்பெரு விழா

 இடம் தமிழ் வள்ளல் சந்திரசேகர் திருமண மண்டபம் மேற்கு மாம்பலம், சென்னை 33 நாள் கார், 8, தி.ஆ. 2044 / நவ,24, கி.ஆ.2013 ஞாயிறு காலை 08.55முதல் நண்பகல் 01.40 வரை (நண்பகல் உணவு 01.50)   செந்தமிழ் விரும்பிகள் மாமன்ற வெள்ளிவிழா எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! எழுச்சி விழா : கருத்தரங்கம், கவியரங்கம்(தாயே! தமிழே! நீ எங்கே!)  தமிழ்த்திரு தியாகு அவர்களுக்குப் பாராட்டுவிழா சிறந்த தமிழ்மாணவன், நற்றமிழாசிரியர் விருது வழங்கும் விழா அருவினை புரிந்த ஆன்றோர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா…

கவிஞர் செயபாலன் இன்று விடுதலை செய்யப்படலாம்

  மாங்குளத்தில் தளையிடப்பட்ட கவிஞர்  செயபாலன் இன்று வவுனியாவிலிருந்து கொழும்புக்குப் பயங்கரவாதத் தடுப்புக் காவலரால் கொண்டு செல்லப்படுகிறார்.   ‘தினக்கதிர்’ இதழ் சார்பில் செயபாலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தன்னை இன்று விடுதலை செய்வதாகக் காவல் துறையினர் கூறியிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  கொழும்பு கொண்டு செல்லப்படும் கவிஞர் செயபாலன் சிறிலங்கா குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் இதனையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவாரா அல்லது குடிவரவு அதிகாரிகள் அவர் மீது ஏதாவது குற்றச்சாட்டை சுமத்தி வழக்கு தொடர்வார்களா என்பது தெரியவில்லை.  அவர் இன்று…

ஈழ நேயமா? தேர்தல் நேயமா? – இதழுரை

 மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படும் காலம் இது. ஆற்றல் வாய்ந்த இருபால் இளைஞர்கள், நாட்டு மக்களின் உரிமைக்காகத் தங்கள் உயிர்க்கொடையை அளித்ததை நினைவுகூர்ந்து போற்றும் காலம் இது. உலகின் தொன்மையான இனம், தனக்கே உரிய நிலப்பரப்பில், அடிமைப்பட்டு, அல்லல்பட்டு, துன்பப்பட்டுத், துயரப்பட்டு, நிலம் இழந்து, வளம் இழந்து, உற்றார் உறவினர் இழந்து, தாங்கும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க  வேண்டும் என்பதற்காகத் தத்தம் உயிர்களை இழந்தவர்களைப் போற்றும் வாரம் இது. நாமும் ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கான வீர வணக்கத்தைச் செலுத்துவோம்!  அதே நேரம், இத்தகைய நாள் வந்ததன்…

மாவீரர் உரைகளின் மணிகள் சில!

தமிழீழத்தின் அடர்ந்த ஆழமான காடுகளில் ஒன்றில் தமிழ்ஞாலத் தேசியத் தலைவர்  மேதகு பிரபாகரன் அவர்களால் முதன் முதலில் 1989 ஆம் ஆண்டு  மாவீரர் நாள் உரை ஆற்றப்பட்டது. அன்றிலிருந்து ஆண்டுதோறும் ஆற்றிய உரையின் சில பகுதிகள் நம் நினைவிற்காக இம்மாவீரர் கிழமையில் வழங்கப்படுகிறது. “எமது போராட்டத்தில் இன்று ஒரு முதன்மையான நாள். இது வரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 1307 போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் தொடங்கியுள்ளோம். முதல் முறையாக இன்று…

தமிழ் வரிவடிவம் காப்போம்! – 2

 – தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் (முந்தைய இதழின் தொடர்ச்சி) தாய்ப்பாலும் நாய்ப்பாலும் ஒன்றாகாது. ஆங்கிலேயன் தமிழை விரும்புகிறான். ஆனால், தமிழனோ ஆங்கிலத்தை நேசிக்கிறான். –          தில்லை அம்பலம் தில்லை (Telai Amblam Thilai) தாய்ப் பாலும் புட்டிப் பாலும் ஒன்றாகுமா? என்று எழுதுங்கள் – அது நாகரிகமாகவும் பொருத்தமாகவும் இருக்கும். –          யான்சன் விக்டர்(Johnson Victor) தமிழை ஆங்கில எழுத்துகளில் எழுத வேண்டும் என்போர், ஆங்கில நாட்டில் குடியேறட்டும். – சிறீதர் இராசசேகர் (SRIDHAR RAJASEKAR)   தனக்கென்று ஒரு வரிவடிவு…

இனப்படுகொலைக்காகச் சீன முன்னாள் அதிபரைக் கைது செய்ய உத்தரவு

இனப்படுகொலைக்காகச் சீன முன்னாள் அதிபரையும், பிற தலைவர், அதிகாரிகளையும் கைது செய்ய இசுபெயின் நீதிமன்றம் உத்தரவு திபெத்தில் இனப்படுகொலை நடத்தியதாக சீன முன்னாள் அதிபர்  சியாங்கு செமீன், முன்னாள்  தலைமையாளர் (இ)லீ பெங்கு, முன்னாள் பாதுகாப்பு-காவல்துறைத் தலைவர் கியாவு  சி, திபெத்து முன்னாள்பொதுவுடைமைக் கட்சித் சென் கியான், முன்னாள் குடும்பத் திட்ட இயக்குநர் பென் பெல்யூன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று  இசுபெயினில் உள்ள திபெத்துக்கு ஆதரவான அமைப்பு அங்குள்ள நீதிமன்றத்தில்  வழக்கு பதிவு செய்தது. இதற்கிணங்க இந்து ஐவரையும்…

கருத்து வெளியிடுகின்ற தகுதி முரளிதரனுக்கு இல்லை: து. இரவிகரன்

தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் உயரிய நோக்கத்தை பற்றி அறிந்திராத முரளிதரனுக்கு தமிழர் என்கின்ற அடையாளத்துடன் கருத்து வெளியிடுகின்ற தகுதி இல்லை. என்று வடமாகாண அவையின் ஆளும்கட்சி  உறுப்பினர் து.இரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பின்வருமாறு அவர் கண்டித்துள்ளார். இலங்கை  மட்டைப்பந்தாட்ட வீரர்  முத்தையா முரளிதரன் தனது குடும்பத்தில் ஒருவருக்கு இசைப்பிரியாவின் கதியோ பாலச்சந்திரனின் கதியோ நேர்ந்திருந்தால், அப்போதும் இவ்வாறு தான் பேசுவாரா? வடகிழக்கு மக்களின் அவலங்களையும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் உயரிய நோக்கத்தையும் பற்றி அறிந்திராத முரளிதரனுக்கு தமிழர் என்கின்ற…

நெடுமாறன் முதலான 81 பேருக்குப் பிணை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவரை இடிப்பதை எதிர்த்து போராடியபோது கைதான உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் முதலான 81 பேருக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி சி.டி.செல்வம  புதன்கிழமை  பிணையில் விடுவித்து  உத்தரவிட்டார். அரசு வழக்குரைஞர் பிணைக்கு மறுப்பு தெரிவித்த  போதும்,  முறையீட்டாளர்கள் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்குள் நுழையமாட்டார்கள் என்ற உறுதியை அவர்களின் வழக்குரைஞர் சந்திரசேகரன்  அளித்ததன் அடிப்படையில் நீதிபதி பிணை விடுவிப்பு வழங்கினார். மேலும் முன்பிணைகோரி  புதிய பார்வை ஆசிரியர் முனைவர் நடராசன்  முறையிட்டதில், நீதிபதி செல்வம், அவருக்கு முன் பிணை…

மீனியல் (Icthyology) – முனைவர் இலக்குவனார் மறைமலை

(சென்ற இதழின் தொடர்ச்சி) எல்லாக் கலைகளையும் கற்றுணர்ந்து அவற்றில் நூல்களும் எழுதிச்சென்ற அரிச்டாட்டில் எனும் அருங்கலை வல்லுநர்தான் இம் மீனியலையும் (Greek : Icthya = a fish logos-a discourse > Icthyology) தொடங்கி வைத்தார். முனைவர் குந்தர்(Dr. Gunther) என்பார், “அரிச்டாட்டில் தொகுத்து வைத்த மீனைப்பற்றிய விவரங்கள் அனைத்தும் மிகப் பொருத்தமாகவும் உண்மையாகவும் உள” எனக் கூறியுள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் நெய்தல் நிலத்தில் கருப்பொருட்களில் ஒன்றாக மீன் கூறப்பட்டுள்ளது. “பெருங்கடற்பரப்பில் சேயிறால் நடுங்கக், கொடுந்தொழில் முகந்த செங்கோல் அவ்வலை”யுடைய பரதவர் “அயிலை…

பெரிய வாய்ப்பு உங்களைத் தேடி வரும்!’: முதல்வரின் அறிவுரைக் கதை

 சென்னை : “வாய்ப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்லும்போது வருத்தப்படாதீர்; முயலுங்கள்! அதைவிடப் பெரிய வாய்ப்பு, உங்களைத் தேடி வரும்,” என, முதல்வர் செயலலிதா, அறிவுரை வழங்கினார்.  சென்னையில், மூன்று அமைச்சர்கள் – புதுச்சேரி ச.ம.உ. இல்லத் திருமண விழா, நேற்று நடந்தது. விழாவில், முதல்வர் செயலலிதா, மணமக்களை வாழ்த்திப் பேசும்போது, கதை கூறி, அனைவருக்கும் அறிவுரை வழங்கினார்.அக்கதை வருமாறு: ஒரு கணிணி நிறுவனத்தில், தரை துடைக்கும் பணியாளராக, ஒருவர் பணி புரிந்து வந்தார். அந்த நிறுவனத்திற்குப், புதிதாக நியமிக்கப்பட்ட மேலாளர், அங்கு பணிபுரியும்,…

முதல்வர் தொடங்கிய நல்லுதவித் திட்டங்கள்

  கொசுக்களை ஒழிக்க 5.5 நூறாயிரம் நொச்சிச் செடி வழங்கும் திட்டம், வீடுகளில் 6.5 நூறாயிரம் பப்பாளி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம், 710 இளைஞர்கள் பயிற்சி பெறச் சென்னை  மாநகராட்சியின் கட்டணமில்லாப் பயிற்சி மையம் ஆகியவற்றை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

கூடங்குளம் – இவர்களைக் கண்காணிப்பது யார் ?

இவர்களைக் கண்காணிப்பது யார் ? கூடங்குளம் அணுஉலையிலிருந்து தொடர்ந்து வெளியேறும் வெப்பநீர். தொடரும் அலட்சியம்…!   அணுஉலையைச் சுற்றிய  ஊர்களில் கடந்த வாரம் 4000 அயிரைக்கல் (கிலோகிராம்) வரை பிடிப்பட்ட மீன்கள் இந்த வாரம் வெறும் 400 அயிரைக்கல் மட்டுமே பிடிப்பட்டுள்ளன. வெப்பநீரின் சுடும்தன்மையால் மீன்கள் ஆழ்கடல் நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. விரைவில் இப்பகுதி மீனில்லாக் கடலாக மாறும் சூழ்நிலை உள்ளது. கூடங்குளம் மக்கள்வாழ்நிலமாக மாறுவது எப்போது?