சட்டச் சொற்கள் விளக்கம் 996-1000 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 991-995 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 996-1000 996. Authorise அதிகாரமளி / அதிகாரம் அளி உரிமையளி, இசைவளி, ஏற்பளி செயலைச் செய்வதற்கான அதிகாரத்தை ஒருவருக்கோ நிறுவனத்திற்கோ சட்ட முறைப்படி அளித்தல். காண்க: Authorisation / Authorization 997. Authorised absence / Authorized absence இசைவுடன் வராமை ஏற்புடை வராமை இசைவு பெற்று வராமை ஓப்பளிப்புப்பெற்ற வாராமை என அகராதிகளில் குறிக்கப் பெற்றுள்ளன. பொருள் சரிதான். விடுப்பு ஒப்பளிப்பு என்பதுபோல்தான் இதுவும். என்றாலும் ஒப்பளிப்பு என்பது பொதுவாக நிதி…
செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010): இலக்குவனார் திருவள்ளுவன்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் பொழுது (சூன் 2010) செம்மொழிச் செயலாக்கம் குறித்துத் தெரிவித்த கருத்துகள் இப்போதும் பொருந்துபவையே. எனவே, அவற்றை இப்போது வெளியிடுகிறேன். செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010) ? ஐயா, வணக்கம். உங்களிடம் தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்தது தொடர்பாகச் சில வினாக்களைத் தொடுத்து விடை கண்டறிந்து வாசகர்களுக்கு அளிக்கலாம் எனக் கருதுகிறோம். # வணக்கம். உங்கள் வாசகர்களுடன் செவ்வி வழித் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு நல்கியமைக்கு நன்றி. பலரும் செம்மொழித் தகுதி தமிழுக்கு இப்பொழுதுதான் கிடைத்துள்ளது போல் தவறாக…
வெருளி நோய்கள் 401-405 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 396-400 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 401-405 உடன் பிறந்தவர்கள் மகன், மகள் இருவர் மீதான அளவுகடந்த பேரச்சம் உடன்பிறந்தார் மக்கள் வெருளி.உடன்பிறந்தார் மகள் வெருளியில் குறிப்பிட்டவாறு, சொத்துத் தகராறு, குடும்பத் தகராறு, வாய்ச்சண்டை ஏற்படும் சூழல்களில் உடன்பிறந்தார் மக்கள் மீது பேரச்சம் வருவது இயற்கை. மகன், மகள் என்பவற்றின் பன்மையும் இருவரையும் சேர்த்துக் குறிப்பது மக்கள் என்னும் சொல்.Nibli என்றால் உடன் பிறந்தார் மகன் அல்லது மகள் அல்லது இருவரையும் குறிக்கும்00 உடன் பிறந்தவர் மீதான அளவுகடந்த பேரச்சம் உடன்பிறந்தார் வெருளி.உறவினர்கள் பகையாக…
வெருளி நோய்கள் 396-400 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 391-395 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 396-400 396. உடற்காய வெருளி – Traumaphobia / Traumatophobia உடற்காயம் குறித்த வரம்பற்ற பேரச்சம் உடற்காய வெருளி. பெண்களுக்கும் குறைந்த கல்வி உடையவர்களுக்கும் உடற்காய வெருளி மிகுதியாக இருப்பதாகக் கூறுகின்றனர். பொதுவாகப்பெண்களுக்கும் கல்வியறிவு குறைந்தவர்களுக்கும் இவ்வெருளி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். trauma என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் காயம் எனப் பொருள். 00 397. உடற்பயிற்சி வெருளி -Exercitophobia / Drapanophobia உடற்பயிற்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உடற்பயிற்சி வெருளி. உடற்பயிற்சியின் பொழுது இறப்பு நேர்ந்த…
பொருளைத் தேடு. வாழ்வின் பொருளை இழக்காதே! – சங்கப்புலவர்கள் பொன்னுரை 21 : இலக்குவனார் திருவள்ளுவன்
(காற்று இல்லா வானத்தைஅறிந்திருந்த பழந்தமிழர் – சங்கப் புலவர்கள் பொன்னுரை – 20 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 21 வாழ்க்கைக்கான பொருளைத் தேடு. அதே நேரம் வாழ்க்கையின் பொருளை இழக்காதே! புன்கண் கொண்டு இனையவும் பொருள் வயின் அகறல் அன்பு அன்று –பாலை பாடிய பெருங்கடுங்கோ, கலித்தொகை-பாலைக்கலி 1 “புன்கண் கொண்டு இனையவும்” என்பதன் பொருள் “துன்பமான கண் அல்லது துயரத்துடன் கூடிய கண்களுடன் வருந்துதல் “ அகறல் = அகலுதல் = பிரிதல் அத்தகைய சூழலில் பொருள் திரட்ட அன்புத்…
வெருளி நோய்கள் 391-395 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 386-390 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 391-395 ஈரிடவாழ்வி பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் [ஈர்+இட(ம்)+ வாழ்வி+ வெருளி)பொன்னால் வளைத்து இரண்டு சுற்றாக அமைக்கப்பட்ட காற்சரி என்னும் கால்நகையைக் குறிப்பிடுகையில் கலித்தொகை(85.1) ஈரமை சுற்று என்கின்றது. கீழும் மேலுமாக அமைந்த நீச்சல் உடை ஈரணி எனப்படுகின்றது. ஈரறிவு (பதிற்றுப்பத்து : 74.18), ஈருயிர்(அகநானூறு : 72.12), ஈரெழுவேளிர்(அகநானூறு :135.12), ஈரைம்பதின்மர் (புறநானூறு : 2.15; பதிற்றுப்பத்து : 14.5; பெரும்பாணாற்றுப்படை 415) என இரண்டின் அடுக்கு சுட்டப்படுவதைப் பார்க்கிறோம். எனவே,…
தொல்காப்பியமும் பாணினியமும் – 3 : நூற்சிறப்பு – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 2 :பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் – தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் நூற்சிறப்பு தொல்காப்பியச் சிறப்பு தொல்காப்பியம், பழந்தமிழர் வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய கருவூலமாகத் திகழ்வது என்றும் தொல்காப்பியமே கிறித்து காலத்திற்கு முற்பட்ட வரலாற்று வாயில் என்றும் பேரா.முனைவர் சி.இலக்குவனார் தொல்காப்பியத்தின் சிறப்பினைப் பாராட்டுகிறார். “பொருள்” சிந்தனை தமிழுக்கே உரியது. தொல்காப்பியரும் முன்னோர் வழித் தம் நூலான தொல்காப்பியத்தில் பொருள் சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார். இதனைப் பேராசிரியர் க. அன்பழகனார் (கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம். 12-13) பின்வருமாறு கூறுகிறார்:- “மேலும்,…
வெருளி நோய்கள் 381-385 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 376-380 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 381-385 புனைவுரு பாத்திரமான தித்தி மனிதன்(Candyman) குறித்த வரம்பற்ற பேரச்சம் தித்தியன் வெருளி.தித்தி மனிதன் பாத்திரம் திகிலூட்டுவதால் இப்படத்தைப் பார்த்தாலும் தித்தி மனிதன் தொடர்பான செய்திகளைப் படித்தாலும் தொடர்புடை படங்களைப் பார்த்தாலும் பேரச்சம் கொள்கின்றனர்.00 இன்மா (cake) மீதான மிகையான பேரச்சம் இன்மா வெருளி.cake என்பதற்கு அணிச்சல், இனிப்பப்பம், இனியப்பம், இன்னப்பம், மாப்பண்டம் எனப் பலவாறாகக் கூறுகின்றனர். நான் இன்மா எனச் சுருக்கமாகக் கூறுகிறேன்.இனிப்பு மீதும் இனிப்புப் பொருள்கள் மீதும் வெருளி உள்ளவர்களுக்கு இன்மா…
சனாதனத்தை எதிர்க்கும் கபிலர் – இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனத்தை எதிர்க்கும் கபிலர் சனாதனத்தை ஆரியம் காலந்தோறும் வேருன்ற எல்லா முயற்சியும் எடுத்துக் கொண்டுள்ளது. அதே நேரம், தமிழ் உலகம் எந்த அளவில் எல்லாம் எதிர்க்க வேணடுமோ அந்த அளவில் எல்லாம் சனானத்தை எதிர்த்துக் கொண்டே வருகிறது. அவற்றில் ஒன்றுதான் கபிலர், கபிலர் அகவல் மூலம் சனாதனத்திற்கு எதிராகக் குரல் எழுப்பியது. கபிலரின் பாடற் கருத்து ஒன்று வாலியின் மூலமாகத் திரைப்பாடல் ஒன்றின் மூலம் நமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாலி 1958இல் தன்னுடைய முதல் திரைப்பாடலை எழுதினாலும் 1961,63,64ஆம் ஆண்டுகளில் 7 படங்களில் பாடல்களை எழுதியுள்ளார்….
வெருளி நோய்கள் 376-380 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 371-375 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 376-380 இன்கண்டு(chocolate)பற்றிய அளவற்ற பேரச்சம் இன்கண்டு வெருளி.‘சாக்கலேட்டு’ அல்லது ‘சாக்கொலேட்டு’ என்பது கொக்கோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இது மத்தியக் கால அமெரிக்கச் சொல் ஆகும். கல்கண்டு என்பதன் அடியொற்றி இதன் இனிப்புச் சுவை அடிப்படையில் தமிழில் இன்கண்டு எனலாம்.00 தித்தி (candy) குறித்த வரம்பற்ற பேரச்சம் தித்தி வெருளி.‘மிட்டாய்’ என்பது தமிழ்ச்சொல்லல்ல. karamela என்னும் கிரேக்கச் சொல்லை இன்பண்டம், தித்தி எனச் சொல்லலாம். எனினும் chocolate என்பதை இன்கண்டு எனக் குறித்துள்ளதால் இதனைத்…
மைசூர், தேசிய மொழிபெயர்ப்பு ஊழிய அலுவலகத்தில் இலக்குவனார் நினைவேந்தல்
மைசூர், தேசிய மொழிபெயர்ப்பு ஊழிய அலுவலகத்தில் இலக்குவனார் நினைவேந்தல் நடைபெற்றது. தி. பி.2056, ஆவணி 18/ 03.09.2025 முற்பகல் இந்நிகழ்வு அறிவியல் நூற்கள் கூர்ந்தாய்வர்களிடையே நிகழ்ந்தது. இலக்குவனார் திருவள்ளுவன், பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் குறித்த நினைவுரையாற்றினார். தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர் ப.மருதநாயகம், தமிழ்ப்போராளி இலக்குவனார் குறித்த புகழுரை ஆற்றினார். தே.மொ.ஊ. மூத்த வளமையர் முனைவர் வின்சுடன் நிறைவுரை யாற்றினார். இலக்குவனார் நினைவேந்தலை முன்னிட்டு, இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் தேசிய மொழிபெயர்ப்பு ஊழியத்திற்கு இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய பின் வரும் நூல்கள் முதுநிலை…
வெருளி நோய்கள் 371-375 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 366-370 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 371-375 இறைமம்(spiritual thing)சார்பானவை குறித்த வரம்பற்ற பேரச்சம் இறைம வெருளி.இதனை ஆன்மா என்றும் ஆன்மாவைத் தமிழில் ஆதன் என்றும்உயிர் நலம்சார்ந்த என்றும் குறிப்பிடுகின்றனர். எனினும் நடைமுறையில் சமயம் சார்ந்தும் இறை நெறி சார்ந்தும் உள்ளது. எனவே, இதனை இறைமம் எனக் குறிப்பிட்டுள்ளேன்.00 இறைமை தொடர்பான வரம்பற்ற பேரச்சம் இறைமை வெருளி.இறைமை நூலைப்படிப்பதால் மட்டுமல்லாமல், இறைமை வழிபாடு, தொடர்பான நிகழ்வுகள் முதலான அனைத்திலும் வெறுப்பும் பேரச்சமும் கொள்வர்.காதல் தோல்வியால்கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே…
