வெருளி நோய்கள் 1371 -1375: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1366-1370 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1371 -1375 தொடரியை விரும்புகிறேன்(I like trains) என்னும் இசைக்குழுவின் மீதான அளவுகடந்த பேரச்சம் தொடரிக்குழு வெருளி.இக்குழு, இங்கிலாந்தில் மேற்கு யார்க்சையரில்(West Yorkshire) உருவான அதிரடி இசைக்கான பிந்தைய மாற்று இசைக்குழு ஆகும்.00 தொடரி(Train) அல்லது தொடரி செல்லும் இருப்புப்பாதை(Railway) தொடர்பான மிகையான பேரச்சம் தொடரி வெருளி.Greek sidதros என்னும் கிரேக்கச் சொல்லிற்கு இரும்பு என்றும் dromos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு ஓடுதல் என்றும் பொருள். எனவே, இருப்புப்பாதையில் ஓடும் தொடர் வண்டியைக் குறிக்கிறது.இருப்புப் பாதையில்…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33: பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!: சங்கப் புலவர்கள் பொன்னுரை – 32 – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 33 பகுத்துண்டும் நோயின்றியும் நெடுங்காலம் வாழ்க! *** தீதுசேண் இகந்து நன்றுமிகப் புரிந்து கடலும் கானமும் பலபயம் உதவப் பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது மைஇல் அறிவினர் செவ்விதின் நடந்துதம் அமர்துணைப் பிரியாது பாத்(து)உண்டு மாக்கள் மூத்த யாக்கையொடு பிணிஇன்று கழிய பாடியவர் : ஆசிரியர் பாலைக் கௌதமனார் பதிற்றுப்பத்து : 22 அடிகள் 5 – 10 (பாடலின் மொத்த…
வெருளி நோய்கள் 1366 -1370: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1361-1365: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1366 -1370 தேனீக்கள் குறித்த தேவையற்ற பேரச்சம் தேனீ வெருளி.தேன்(69), ஈ(6), வண்டு (189)ஆகிய சொற்கள் சங்கப்பாடல்களில் இடம் பெற்றிருந்தாலும், தேனீ இடம் பெறவில்லை.api சொல்லின் மூலமான apis என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தேனீ.melissa என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தேன்(ஈ).காண்க: ஆ நிலை வெருளி – Beephobia (2) 00 தாள்தைப்பி குறித்த தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் தைப்பி வெருளி.தாள்களை இணைக்கும் பொழுது தவறுதலாகக் கையில் கம்பி குத்திவிடும் அல்லது தைத்து விடும்…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 24. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -1: இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 23. எத்தனை, எத்துணை, எவ்வளவு வேறுபாடு தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 24. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -1 கோப்புகளில் உள்ளவற்றைப் பார்ப்பதற்குச் சிறிது இடைவெளிவிட்டு இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் குறித்துப் பார்ப்போம். தமிழைக் கொலை செய்வதில் ஊடகங்கள் முதலிடம் வகிக்கின்றன. தமிழ் ஆர்வம் மிக்க ஊடகத்தினர் இருந்தாலும் பெரும்பான்மையாகக் கொலைகாரர்களே உள்ளனர். இவர்களுக்கெல்லாம் கடுந்தண்டனை விதித்தால்தான் தமிழ் வாழும். எனவே, இனியாவது ஊடகத்தினர் கொலைகாரர்களாக இல்லாமல் தமிழை வாழ வைப்பவர்களாக…
வெருளி நோய்கள் 1361 -1365 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1356 -1360 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1361 -1365 தேவதாரு(pine tree) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தேவதாரு வெருளி.மர வெருளி(Dendrophobia) உள்ளவர்களுக்குத் தேவதாரு வெருளி வர வாய்ப்பு உள்ளது.00 தேவதைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தேவதை வெருளி.மேலுலக வெருளி(Ouranophobia/Uranophobia), வானூர்தி வெருளி (Pteromerhanophobia/Feijiphobia) பறத்தல் வெருளி(aviatophobia / aviophobia / aerophobia) ஒளி வெருளி(photophobia) உள்ளவர்களுக்குத் தேவதை வெருளி வர வாய்ப்புள்ளது.00 கிறித்துவத் திருக்கோயில் தொடர்பான தேவையற்ற மிகையான பேரச்சம் தேவாலய வெருளி.இதன் காரணம், திருக்கோயில் கட்டம் மீதான அச்சமாகவும் இருக்கலாம். திருக்கோயில்…
திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – 1.தமிழ்நாடு. 2. மொழி
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௬. தமிழ்நாடும் தமிழும் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை 1.தமிழ்நாடு ஐந்தாயிரம் ஆண்டுகட்கு முன் இன்றுமுள்ள குமரிமுனைக்குத் தென்பால் குமரிக்கண்டம் என்றோர் பெருநிலப்பரப்பு இருந்தது. அஃது எழுநூற்றுக் காவதம் பரவியிருந்தது. இன்றுள்ள சுமத்ரா, சாவா, போர்னியோ தீவுகளும் இலங்கைத் தீவும், இலக்கத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள், மடகாசுகர் தீவு ஆகியவையும் குமரிக்கண்டத்தின் எஞ்சிய பகுதிகளே! குமரிக்கண்டம் ஐந்துமுறை கடற்கோள்களுக்கு ஆட்பட்டமையால் அழிந்து போயிற்று; அங்குதான் முதல் மாந்தன் தோன்றினான்; அங்கு வாழ்ந்த…
வெருளி நோய்கள் 1356 -1360 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1351 -1355 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1356 -1360 தேநீர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தேநீர் வெருளி.தேநீர் அருந்துவதால் செரிமானப் பாதிப்பு ஏற்படும், பித்தம் மிகுந்து நலக்கேடு வரும், உண்பதற்கு ஒரு மணி நேர இடைவெளியின்றி முன்போ பின்போ தேநீர் அருந்துவது உடலுக்குக் கேடு என்பன போன்ற காரணங்களால் தேநீர் குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.sagiou என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தேநீர் எனப் பொருள்.காண்க: தேநீர் ஆக்க வெருளி(fronsophobia00 தேநீர்க் குவளை குறித்த வரம்பற்ற பேரச்சம் தேநீர்க் குவளை வெருளி.இந்தியாவில்…
மொழிப்போர் வரலாறு அறிவோம்! -13 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 1 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்! -12 : தமிழ்க்காப்பிற்காகவே இந்தியை எதிர்த்தனர் : தொடர்ச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்! -13 இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 1 இந்தி எதிர்ப்புப்போராட்டங்களை அறியும் நாம் அது வந்த வழியான அரசியல் யாப்பு நிலைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவை குறித்துச் சுருக்கமாகப் பார்ப்போம். அரசமைப்பு அவைக்கான முதல் கோரிக்கை தன்னாட்சிக்கட்சியால் (Swaraj Party) 03.05.1934 அன்று எழுப்பப்பட்டது. இது வெள்ளைத்தாள் முன்மொழிவுகளை மறுத்தது. இஃது இந்திய அரசு சட்டம் 1935 இல் இணைக்கப்பட்டது. அரசு…
வெருளி நோய்கள் 1351 -1355 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1346 -1350 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1351 -1355 தென்னசி மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தென்னசி வெருளி.தென்னிசி மாநிலம் ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது; எட்டு அமெரிக்க மாநிலங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது.இம்மக்களின் வணிகம், நாகரிகம்,பண்பாடு,நடைமுறை மீது தேவையற்ற பேரச்சம் கொள்வோர் வெருளிக்கு ஆளாகின்றனர்.00 தேடு பொறி குறித்த வரம்பற்ற பேரச்சம் தேடு பொறி வெருளி. தேடுபொறிகள் மூலம் நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் என்ற பேரச்சத்தால் தேடுபொறிகளை வெறுப்போர் உள்ளனர்.கூகுள், யாஃகூ முதலான பல்வேறு தேடுபொறிகள் உள்ளன….
குறட் கடலிற் சில துளிகள் 45: இன நலமே பாதுகாப்பு! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுணையே- தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 45. இன நலமே பாதுகாப்பு! மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௮ – 458) மனம் நன்னலமாக இருப்பினும் சான்றோர்க்கு இனநலமே பாதுகாப்பானது. பதவுரை: மன-மனத்தின்; நலம்-நன்மை; நன்கு-மிகுதியும்; உடையர்-உ்டையவர்கள்; ஆயினும்-ஆனாலும்; சான்றோர்க்கு-அறிவு, ஒழுக்கம் முதலியவற்றில் சிறந்து விளங்கும் பண்பாளர்க்கு; இனநலம்-இனத்தின் நன்மை; ஏமாப்பு-வலிமை, பாதுகாவல்; உடைத்து-உடையது. கருத்துரைகள் மன நலம் இருப்பினும் சிற்றினம் சேராமல் நல்லினத்துடன் சேர்ந்து வாழ்தலே பாதுகாப்பு…
நாலடி நல்கும் நன்னெறி 28: பெரியோரைப் பிணித்துக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 27: அறநெறி அறியுங்கள்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 28. பெரியோரைப் பிணித்துக் கொள்க! அடைந்தார்ப் பிரிவு மரும்பிணியுங் கேடு முடங்குடம்பு கொண்டார்க் குறலாற் – றொடங்கிப் பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை யுறப்புணர்க வம்மாவென் னெஞ்சு. – நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 173 [அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் – தொடங்கிப்பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரைஉறப் புணர்க அம்மாஎன் நெஞ்சு.] கருத்துரை: அன்பானவர்களைப் பிரிதலும் தீர்க்க இயலா நோயும் கேடுகளும் உடம்பிற்கு…
1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 : இலக்குவனார் திருவள்ளுவன்
(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 3 : தொடர்ச்சி) 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 ஈ.வெ.இரா.உரை, நிறைவேறிய மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்தது 11ஆம் கட்டுரை. இநதி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல்முறையாகப் பெண்கள் கைது என்பது குறித்து 12 ஆம் கட்டுரை கூறுகிறது. எண்மர் கைது குறித்தது 13 ஆம் கட்டுரை. நவம்பர் 14 அன்று ஐந்து பெண்கள் கைதானதற்குப் பிறகு நவம்பர் 21 அன்று எட்டுத்தாய்மார்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப் பட்டனர். பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில்…
